Väljalaske info

Enai Noki Paayum Thota WEBRip Amazon
Kommenteerib IPlateex

Sildid

webrip
web
BRip
Avaldatud: 2022-06-11
Allalaadimised: 10
Kuulmispuudega: No

Tamil subtiitrite eelvaade

Esimesed 151 rida.

பிறர் வாட பல செயல்கள் செய்து,

நரை கூடி கிழ பருவம் எய்தி,

கொடும் கூற்றுக்கு இரை என பின் மாயும்,

பல வேடிக்கை மனிதரை போலே,

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

நின்னை சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்கு தருவாய்,

இனி என்னைப் புதிய உயிராக்கி, எனக்கேதும் கவலையறச் செய்து,

மதி தன்னை மிகத்தெளிவு செய்து, என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

துப்பாக்கி எங்க?

வண்டில டேஷ்போர்ட்ல.

போ! சீக்கிரம்!

எங்க போன?

-கேர்ல்ஃப்ரண்ட்டோட விளையாடிட்டிருக்கியா? -சீக்கிரம் போ.

எவ்ளோ நேரம் டா, கேடுகெட்டவனே?

அண்ணா, டேய்!

உன்னால,

என் அண்ணனாலதான் இப்ப எனக்கு என்னோட சாவு மேளம் கேக்குது.

இப்ப போட்றா அவன! அப்புறம் இங்க கூட்டிட்டு வா, அங்கக்கூட்டி வான்னு சொல்ல மாட்டீங்கல?

40 வினாடி ஆச்சு இப்ப, அந்த துப்பாக்கிய என் பக்கம் நீட்டி.

ஸீன் போட்டுண்டே நின்னுட்டிருக்கான். ஆனா துப்பாக்கி...

படங்கள்ல கையில கன் வச்சுகிட்டு சுடாம பேசிட்டு நிக்றவன பாத்து சிரிச்ருக்கேன்.

இன்னிக்கு அதுவே நல்ல வேளைக்கு அப்படின்னு இருக்கு,

ஏன்னா, இன்னிக்கு சாக மூட் இல்ல, மனசு இல்ல.

நல்ல நாள் இல்ல.

அம்மா வற்புறுத்துனாங்களேன்னு, எனக்கு நம்பிக்கை இல்லனாலும்,

ஒரு பேர்பெற்ற ஜோசியர்கிட்ட என் கைய காமிச்சேன்.

90 வயசு வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. நீ நீடூடி வாழ்வன்னு சொன்னாரே.

- வாடா! - நீ பண்ணு!

ச்சீ வா! பட்டுனு முடிச்சுட்டு கிளம்பலாம் வா டா.

ஜோசியரே, இன்னிக்கு நான் செத்தேன், என் பணம் எனக்கு எப்படியாவது திரும்ப வேணும்.

அது மட்டுமில்ல, நீ செத்த!

டேய்! ஏய்!

பிடி டா!

ஏய்!

பிடிடா அவன!

ஏய்!

ஏய், இத பார், வேணாம். சொன்னா கேளு!

ஏய்... வேணாம்.

ஏய்... ஏய்!

ஒண்ணும் இல்லையா?

மாட்டிக்கினியா?

உன்ன கொன்னுடறேன்!

அடிக்காத டா டேய்!

வீடு வீடா இல்ல. நாங்க நாங்களா இல்ல.

என் அண்ணன் எங்களை விட்டு போனப்புறம்,

எங்க சந்தோஷம், சிரிப்பு, எல்லாமே அதோட போச்சு.

அவன் கவலைப்படாம போனதுக்கப்புறம்.

அவ்ளோ நேசிச்சோம் அவன.

அவன் போனதுக்கப்புறம்,எனக்கு மட்டும் அதே அளவு வெறுப்பு அவன் மேல.

அவன கடைசியா பாத்து, அவன்கிட்ட பேசி 14 வருஷம் ஆச்சு.

அண்ணா...

இப்போ உன்னாலதான், இந்த தோட்டா என்னை நோக்கி வந்துட்ருக்கு.என்னை நோக்கி பாயுது.

என் அண்ணனை பாக்கனும்.

அவனை தேடித்தான் நான் இங்க வந்தேன்.

எனக்கு பிடிக்காத இந்த நாத்தம் அடிக்கிற ஊருக்கு.

லேகா. என் ஆளு. என் உயிரு.

என் எல்லாமேவா இருந்தவ அவ.

அவளையும் பாத்து இப்ப நாலு வருஷம் ஆச்சு.

என்னை விட்டு போய் நாலு வருஷம் ஆச்சு.

அவ திடீர்னு போன் பண்ணி, "நான் இப்ப உன் அண்ணன்கூட தான் இருக்கேன்,"

"அவருக்கு இங்க ஏதோ பிரச்சனை, உன்னால இங்க வரமுடியுமான்னு?" அவ கேட்டதால தான்,

அண்ணா,உன்ன தேடி நான் இங்க வந்தேன்.

இப்ப நான் இங்க இருக்கேன்.

சாவுதான்னு நினைக்கிறேன்.ஏன்னா வாழ்ந்த வாழ்க்கை கண்ணு முன்னால ஓடுது.

அண்ணா, உன் முகம் எப்பவுமே எனக்கு ஞாபகம் வராது.

இப்பவும் ஞாபகம் வரல.

நான், சரண்யா, திரு.

எனக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி பொறந்தவ சரண்யா.

என் அக்கா.

எங்க ரெண்டு பேருக்கும் ஏழு வருஷம் முன்னால பொறந்தவன் திரு.

எங்க அண்ணன்.

ஏழு வயசுலேர்ந்து பத்து வயசுக்குள்ள,

எனக்கும் சரண்யாக்கும் எங்க அண்ணன் தான் எல்லாமே.

எங்க ஹீரோ அண்ணன்தான்.

அதுக்கப்புறம் அவன் இல்ல எங்க கூட.

16 வயசுல ஒரு பொண்ண லவ் பண்ணான்.

ரெண்டு வருஷம்.

அப்பவே முழு நேரம் அவ கூடத்தான் இருப்பான்.

ஒரு நாள்...

அந்த பொண்ணு செத்து போயிட்டா.

திருவோட பைக்ல பின்னாடி உக்காந்திட்டிருந்தா.

அவனுக்கு அப்ப 18 வயசு.

அதோட, அவனை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை முடிஞ்சுது.

அந்த வயசு அப்படி.

இல்ல, என்னன்னு தெரியல. அவன் அப்படி.

ரெண்டு மாசம் கூட அவன் எங்ககூட இல்ல அதுக்கப்புறம்,

போயிட்டே இருந்தான்.

அப்பா, அம்மா அவனை தேடி போனாங்க.

எவ்ளோ பேசியும் அவன் திரும்பி வரல.

யாரும் வேண்டாம், தனியா இருக்க விடுங்கன்னு அவங்ககிட்ட சொல்லிட்டான்.

அதுக்கப்புறம் அவங்களும் அவங்களா இல்ல.

திரு என்னிக்காவது வருவான்னு, அப்புறம் எங்க எல்லாருக்கும் வாழ்க்கை போய்டுச்சு.

எப்பயாவது திருவ பத்தி ஏதாவது ஒரு தகவல் வரும், அவ்வளவுதான்.

என்னோட 11-வது வயசுல, அவன் எங்களை விட்டு போனப்போ, எனக்கு புரியல.

பிடிக்கல. அவன் போனான்னு அவனை வெறுக்க ஆரம்பிச்சேன்.

இன்னிக்கு எனக்கு 25 வயசு. அவனுக்கு 32.

இப்ப நினச்சு கூட நான் பாக்கல.

லேகா சொல்லி, திரு இங்க இருக்கான்னு தெரிஞ்சு,

நான் இங்க வருவேன்னு.

என்னை அவனுக்கு ஞாபகம் இருக்கான்னு கூட எனக்கு தெரியல.

அண்ணா...

என் பேரு,

ரகு.

அப்படி பாத்தா,

என் கதையோட தொடக்கம் லேகாதான்.

அஞ்சு வருஷம் முன்னாடி,

ஒரு காதல் கதை.

காதல்னாலதான் வாழ்க்கையே ஆரம்பம் ஆகுது.

அதுல இருக்கும்போது, ஒண்ணு பண்ணுது நம்மள.

அது இல்லாம ஒண்ணும் பண்ண முடியல.

லேகாவை நான் சந்திச்சது, அவ என் வாழ்க்கைல வந்தது,

அவ மூலமா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் என் அண்ணன சந்திக்க மட்டும்தான்னு நினைக்கிறேன்.

காலேஜ் கடைசி வருஷம் படிச்சிட்டிருக்கும்போது, அவள பாத்தேன்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அதுதான் படிக்கணும்னு நினைச்சேன்.

ஆனா அப்பா, கம்ப்யூட்டர்தான் இப்ப உலகத்துல எல்லாமேன்னு சொல்லி

என்னை கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ட் இன்ஜினியரிங் படிக்க வச்சார்.

அவ என் வகுப்பில் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

ரகு!

இப்ராம்னா என்ன, ரகு?

தெரியல, ஸார்.

வெளில ஷூட்டிங் நடக்குது. போய் பாரு, போ! வெளிய போ!

ஆனா அவ என் வகுப்பில் இல்ல, என் ஆசிரியயை இல்ல.

என் சீனியரும் இல்ல, என் ஜுனியரும் இல்ல.

வந்துட்டியா மச்சான்? நீ வருவன்னு தெரியும். சீக்கிரம் வா.

டேய், என்ன டா?

இந்த மாதிரி ஒரு அழக இதுவரைக்கும் இங்க யாரும் பாத்திருக்கவே முடியாது.

என்ன?

"டிவைன்" னா உனக்கு அர்த்தம் தெரியுமா?

தெரியும்.

காமிக்கறேன் வா. பாத்து தெரிஞ்சுக்கோ.

நல்ல வசதியான காலேஜ்.

நிறைய ஃபீஸ்.

அழகான கேம்பஸ்.

இன்னும் நிறைய பணம் எப்படி சம்பாதிக்கலாம்னு யோசிச்சாங்க.

ஷூட்டிங்க்கு இடத்தை கொடுக்கலாம்னு முடிவு பண்ணி,

வாராவாரம் கேம்பஸ் சுத்தி ஃபிலிம் ஷூட்டிங் நடக்கும்.

மச்சான் இப்ப இறங்கி வருவா பார்.

காலேஜ்ல 1200 ஸ்டூடெண்ட்ஸ் இருந்தாங்க.

அதுல அவ முதல்ல என் முகத்தத்தான் பார்த்தா. இறங்கின உடனேயே

அங்க ஸ்டார்ட் ஆச்சு.

ஷூட்டிங்க் நடந்த படத்துக்கு அவதான் ஹீரோயின்.

அவள பாத்தவுடனே எனக்கு பிடிச்சிருச்சு.

அவளுக்கு என்னையும் அப்படின்னு நினைக்கிறேன்.

ரோல் கேமரா, அன்ட் ஆக்ஷன்!

அமைதியா இருங்க.

ஹீரோ வர்றது தெரியுது. கை காமி.

கட் இட்!

ஷாட் ஓகே.

டைட்டானிக்ல ரோஸ்க்கு ஒரு ஓப்பனிங் ஷாட் வரும்ல?

-ஆமா. -அதே ஷாட் டா.

அப்படியே காப்பி.

Kommentaarid

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left