Mumbai Pune Mumbai 2

Mumbai Pune Mumbai 2

دانلود زیرنویس Tamil

هماهنگ با نسخه‌های زیر

Mumbai Pune Mumbai 2 WEBRip Amazon ta-in
ناشر indespensible

برچسب‌ها

webrip
web
BRip
تاریخ انتشار: 2019-10-29
تعداد دانلود: 12
مخصوص ناشنوایان: No

پیش‌نمایش زیرنویس Tamil

نخستین 200 خط.

இந்த விருந்தோட பொறுப்பு என்னுடையது இல்லை.

இவங்க இரண்டு பேரால செய்யப்பட்டது.

நான் சொல்றத கேளுங்க, நண்பர்களே.

பூனே நகரத்தின் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கனும்னா,

திரு. கௌதம் பிரதான் தானே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்?

-ஆமாம். -கண்டிப்பாக.

இருந்தாலும், அவன் ஒரு மும்பை பெண்ணை காதலிக்கிறானா?

-ஆமாம். -என்னது இது?

ஆக, இது ஒரு விஷயத்தைதான் நிரூபிக்கிறது,

காதல்.

மேலும், எங்களுக்கு கண்டிப்பாக தெரியும்

நீ அவளை நம்மில் ஒருவராக மாத்திடுவ.

அவளை ஒரு முழு பூனேகாரியாக மாத்திடுவ.

ஏன்னா, அதானே நம் பூனே வழக்கம்.

சரிதான்.

பாட்டி, இப்போ உங்க முறை.

நானா?

ஆனா, என்னால பேச முடியாது.

-பாட்டி. -பாட்டி.

அம்மா, நீங்க ஏதாவது சொல்லனும்.

சரி.

அந்த குட்டி கௌதம் இங்கும் அங்கும் ஓடினது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு.

நீ ரொம்ப சீக்கிரம் வளர்ந்துட்ட.

இப்போ வீட்டுக்கு எனக்கு மருமக பேத்தியை கூட்டி வரப்போற.

அவ உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பானு எனக்கு கண்டிப்பா தெரியும்.

நீயும் அவள ரொம்ப நல்லா பார்த்துப்பனு எனக்கு நிச்சயமாக தெரியும்.

எப்பவும் ஒருவருக்கு ஒருவர் உண்மையா இருங்க.

ஒருவர்க்கொருவர் நெருங்கிய நண்பரா இருங்க.

நானும் உங்க தாத்தாவும் இருந்தது போல.

உனக்கு தெரியுமா,

கல்யாணத்திற்கு முன்னால, நான் அவரை பேர் சொல்லி கூப்பிட்டதே இல்ல.

ஆனா, அப்புறம் அடிக்கடி கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

நாங்க நல்ல நண்பர்களானதால, மாற்றங்கள் நடந்தது.

நீங்க சேர்ந்தே வயோதிகத்திற்கு வரவேண்டும், சரியா?

பிற்பாடு, என்னை போல தலைமுடிக்கு சாயம் பூசிக்கலாம். யாரும் தடுக்க மாட்டார்கள்.

சந்தோஷமாக திருமண வாழ்க்கையை வாழுங்கள், சரியா?

ஹே, கெளரி ஏன் இந்த விருந்திற்கு வரல்லை?

எனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப அழகாக இருக்கிறாள், இல்லையா?

முக்கியமா, அவள் ஒரு முழுமையான மும்பை பெண்.

அதற்காக பூனே பெண்கள் மோசம்னு நான் சொல்லல.

ஆனா கௌதம், நீ ஒரு மும்பை பெண்ணை தேர்ந்தெடுத்தது சரியான விஷயம்.

தங்கள் மனதோடு ஒரு கடிகாரத்தையும் சேர்த்தே பிறந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

அவள் எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்வாள்...

உன்னையும் சரியான நேரத்தில செய்ய வைப்பாள்.

கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.

மேலும், பூனேகாரர்கள் மக்களின் மேம்பாட்டிற்காக பிறந்தவர்கள்.

மக்களின் மேம்பாடு.

ஆமாம்.

அத்தை, நீங்க மாப்பிள்ளையின் அம்மா. நீங்க பேசணும்.

ஆமாம், ஏதாவது சொல்லுங்க.

கல்யாணத்துக்கு அப்புறம், இந்த மாதிரி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.

இல்லை, என் மருமக ஒரு அழகான பெண்.

கௌதம் ஒரு சிறந்த ஜோடியை தேர்ந்தெடுத்திருக்கான்.

அவன் பிறந்த நாள் முதல் எனக்கு பல ஞாபகங்கள் உள்ளன.

என் நாளின் ஆரம்பமும் முடிவும் அவனாகவே இருக்கிறான்.

அவனை நச்சரித்துக்கொண்டே இருப்பேன், "கௌதம், சாப்டியா?

கௌதம், எழுந்திரு.

கௌதம், உனக்கு ஜலதோஷமா?

கௌதம், நீ இப்போ தூங்க போகனும்.

கௌதம், கௌதம், கௌதம்."

வருங்கால மணப்பெண்ணின் பெற்றோர் கவலைப்படுவதை போல,

வருங்கால மணமகனின் பெற்றோரும் கவலை கொள்கிறார்கள்.

ஒரு பதட்டம் இருக்கு.

இன்னும் நம்மால் செல்லம் கொஞ்சப்படும் நம் வளர்ந்த மகன்,

விரைவில், வேறு ஒருவர் மேல் அதிக கவனம் செலுத்த போகிறான்.

அவனின் முழு கவனத்திலும் அவள் இருப்பாள்.

நான் என்ன சொல்றேன்னா, அது நல்லது, அப்படிதான் இருக்கனும்.

நீயும் கௌரியும் சந்தோஷமாக இருப்பீங்கனு என எனக்கு நிச்சயமாக தெரியும்.

-பிரமாதம், அத்தை. -நன்றாக இருந்தது.

அற்புதம்!

ஹே, நீ ஏன் அழற?

நீ உன் நெருங்கியவர்களை பிரிய போறதில்லை.

இல்லை, என்ன விஷயம்னா...

நீங்க எல்லோரும் என்ன பத்தி நல்ல விஷயங்கள் சொன்னிங்க.

அது என்ன உணர்ச்சிவசப்பட வைத்தது.

நீங்க எல்லோரும் அருமையான மனிதர்கள்.

என்னை மிகவும் நேசிப்பவர்கள்.

ஆனா, நான் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டே இருந்துட்டேன்.

நான் நினைத்தேன்...

எல்லாம் சரி செய்துடலாம், எல்லாம் சரியாகிவிடும்னு. நான்...

நான் காத்துக்கொண்டே இருந்தேன்.

ஆனா, இதுக்குமேல என்னால பொய் சொல்ல முடியாது.

இந்த கல்யாணம் நடக்காது.

ஆறு மாதங்களுக்கு முன்னால்

அவ எண்ணை தொடர்பு கொள்ள முடியல.

திரும்பவும் முயற்சி செய்.

இரண்டு தடவை செஞ்சிட்டேன். அவ வரட்டும், அவளுக்கு ஒரு பாடம் புகட்றேன்.

அவ சரியான நேரத்துக்கு எப்பவுமே வரதில்லை.

கவலைபடாதே. வந்துடுவாள்.

இதோ அவள்.

-என்னது இது? ஏன்இவ்வளவு நேரம்? -மன்னிச்சிடு.

ஏன் தனியா வந்திருக்க?

-இந்த பெண்ணிற்கு என்ன பிரச்சனை? -எப்போதும் போல.

இங்கு என்ன செய்யற? வா.

இதோ அவன்.

ஏன் இவ்வளவு நேரம்?

இவனால தான் இவ்வளோ நேரம். நான் என்ன பண்றது?

ஒரு நிமிஷம்.

மும்பை சுத்திபார்ப்பது என் திட்டம் இல்லை.

கௌதம் இங்கு வந்திருப்பது யாருக்கும் சொல்ல கூடாதுன்னு என்கிட்ட சொன்ன.

ஆனா, நீ அவனோட ஊர் சுத்தற?

உனக்கு என்ன பிரச்சனை?

சரி, இவன் தானா அது?

ஆமாம், சும்மா இரு.

-ஒரு நிமிஷம். என்ன நடக்குது? -ஒன்றுமில்லை.

நாள் முழுதும் வினோதமான பூப்போட்ட சட்டை

போட்டிருந்தவன் நீதானானு கேட்க இருந்தேன்.

சரி, அப்புறம், இது என் கணவர், அக்ஷய்.

-ஹாய். -வணக்கம்.

நான் தனுஜா.

இவள் தானா அது?

-ஆமாம். -என்ன சொல்ற?

"அவளுக்கு கல்யாணம் ஆகும்வரை, நான் பண்ணிக்க மாட்டேன்னு", கெளரி சொல்லிட்டே இருந்தா.

நீ அந்த தனுஜாதானா?

-ஆமாம்! -ஆமாம்!

சரி, தாகமாக இருக்கு, உனக்கு குடிக்க என்ன வேண்டும்?

எனக்கு வைன்.

அப்படியா.

உனக்கு இந்த சிறந்த குணாதிசியங்களும் இருக்கு போல.

நான் வைன் குடிக்கிறேன். வைன் உடல்நலத்திற்கு நல்லது.

ஒரு நிமிஷம், உனக்கு என்ன வேண்டும்?

-இது என்ன? -மாம்பழ ஜூஸ்.

-நான் இதை குடிக்கிறேன். -மாம்பழ ஜூஸ்?

-ஆமாம். -சரி விடு. நாம் குடிக்க வாங்கலாம்.

-அவன் நிஜமாகவே மாம்பழ ஜூஸ் சொன்னானா? -நாம் நமக்கு குடிக்க வேண்டியதை வாங்கலாம்.

ஒரு நிமிடம்.

இரண்டு...

-வோட்கா -வோட்கா.

-ஹே, கௌதம்! -ஜாக்கிரதை.

-ரொம்பவும் வருந்துகிறேன். -பரவாயில்லை.

ஒன்றும் பிரச்சனை இல்லையே?

சரி. நாம் இப்போ என் அத்தை வீட்டுக்கு போக போகிறோம்.

இவளை இப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போனா, நான் செத்தேன்.

கேளு, நாம நீரஜா வீட்டுக்கு போறோம், சரியா?

ஸ்கூட்டர் சாவி எங்க?

-என்கிட்ட இருக்கு. -சரி.

இதை எடுத்துகொண்டு, அவளை கூட்டிவா, சரியா?

கடவுளே, ஒரு நிமிஷம் இரு.

ஹே, ஜாக்கிரதை.

-என்ன இது? -மாம்பழ ஜூஸ்.

இத எடுத்துக்கோ.

ஜாக்கிரதையா வாங்க.

-ஹே, விலாசம்? -எங்கள தொடர்ந்து வா.

சரி, வரோம்.

-ரொம்பவும் வருத்தப்படறேன். -பரவாயில்லை, செல்லம்.

எப்படி இருக்கு?

அற்புதமாக.

இத போட்டுக்க போறியா?

இது பெண்களின் தலைகவசம்.

ஆனா, நீ போட்டேயாகனும். மும்பையில் இது கட்டாயம்.

நீ பெண்களின் தலைகவசத்தை போட்டுக்கபோற.

என்னை கெட்டியாக பிடிச்சுக்கோ. கவலை படாதே.

ஐந்து நிமிஷத்துல போயிடலாம். தூங்கிடாத.

-கௌதம். -என்ன?

நீ ஏன் பீர் குடிக்கல?

அது ஒரு வேடிக்கையான கதை.

முதல்ல, நான் உன்ன பார்த்துகொண்டிருந்தேன்,

அப்புறம், உன்மேலிருந்து கண்களை நகர்த்த முடியல்ல.

கொஞ்ச நேரத்திற்கு நீ கட்டுப்பாடில்லாமல் இருப்பதை பார்க்க நன்றாக இருந்தது.

அது அற்புதமாக இருந்தது!

அப்படினா, நான் வீட்டில் பீர் குடிக்கும்போது,

நீ தகராறு செய்ய மாட்ட.

நான் சந்தோஷமாக ரசித்தேன்.

-எனக்கு புரிகிறது. -ஆமாம், நிச்சயமாக.

-எனக்கு வாந்திவர மாதிரி இருக்கு. -என்ன?

-என்ன? -நான் வாந்தி எடுக்க போறேன்.

வேண்டாம்! கெளரி, ஐந்து நிமிஷத்துல போயிடலாம்.

-இல்லை, பொறு! -முடியல...

-வண்டிய நிறுத்தறேன். ஒரு நிமிஷம். -அத்தை வீடு...

கெளரி, இரு!

இது ரொம்ப அதிகம்!

நம் பேரப்ப்பிள்ளைகளிடம் சொல்ல எனக்கு வேடிக்கையான கதை கிடைத்துவிட்டது.

"உங்க பாட்டி நடுராத்திரி நன்றாக குடித்துவிட்டு,

சிவாஜி பூங்காவின் சந்திப்பில் வாந்தி எடுத்தாள்."

நீ ஒரு அற்புதமான பெண்.

நாம் முதல் தடவை சந்தித்தபோது முழுவதும் வேறமாதிரி இருந்த.

திமிர் பிடித்தவளாக, அதிகம் பழகாதவளாக, விறைப்புடன்.

ஆனால், எனக்கு உன்னுடைய இந்த முகம் இன்னும் பிடித்திருக்கிறது.

நீயும் சில நேரங்களில் பாதிக்கப்படலாம் என்பது எனக்கு பிடித்திருக்கிறது.

கௌதம்.

நன்றி.

வைன்னிற்கு பதிலாக வோட்கா குடித்து போதையாகிவிட்டேன்.

இருந்தாலும், நீ அதைபற்றி கவலைப்படவில்லை.

-நீ எனக்கான இடத்தை கொடுத்த. அதற்கு நன்றி. -ஆமாம்.

நீ நல்லவன்.

எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.

எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.

எனக்கு உன்னை நிஜமாகவே பிடித்திருக்கிறது.

மும்பை,

நீ பூனே மீது காதல் கொள்கிறாய்.

ஆமாம்! மேலும், நான் உன்ன கேலிசெய்து சிரிக்கலாம்,

உன் தவறுகளை சுட்டிக்காட்டலாம், எனவே, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.

ஒரு நிமிஷம், அப்படினா...

நான் பூனேவிலிருந்து வந்த நல்ல பையன் அதனால இல்லாம,

என்னை கேலி செய்யலாம், என் தவறுகளை சுட்டிகாட்டலாம்னு என்னை பிடிச்சிருக்கா?

சொல்லு, என் குறைகள் என்ன?

கடவுளே, அதற்கு நம்ம இன்னொரு பார்ட்டி போனும்.

பார்ட்டிய விடு, என் குறைகள் பற்றி சொல்லு.

நீ தெரு கிரிக்கெட் விளையாடுவ,

அரைக்கால் பேன்ட் அணிந்துகொள்வ.

نظرات

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left