نخستین 200 خط.
1979 சீனா ஒரு குழந்தை கொள்கையை அறிமுகப்படுத்துகிறது
1982 ஒரு குழந்தை கொள்கை சீனாவின் அரசியலமைப்பில் சட்டமாக்கப்படுகிறது
சீனா ஒரு குழந்தை கொள்கையை கைவிடுகிறது
சீனா ஒரு குழந்தை கொள்கையை கைவிட்டப்போது, சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவிப்பு
ஒரு குழந்தை கொள்கை, நம் நாட்டை ஒரு சக்தி வாய்ந்த நாடாக மாற்றியுள்ளது,
மக்கள் அதிகம் செழிப்பானார்கள் மற்றும் உலகம் மிகவும் அமைதியானது.
நான் 1985 இல் சீனாவில் பிறந்தேன்,
சீனாவின் மக்கள் தொகை நெருக்கடி உலகத்தின் தலைப்புச் செய்தியாக இருந்தது.
நூறு கோடிக்கும் அதிகமான சீனர்கள் இருக்கிறார்கள்.
மற்ற எல்லாவற்றையும் விட, இந்த ஒரு பெரிய புள்ளிவிவரம்,
அந்த நாட்டில் பிரதானமாக இருக்கும் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினை.
அடுத்த அரை நூற்றாண்டில்,
சீனக் குடும்பங்களில் சராசரியாக மூன்று குழந்தைகள் இருந்தால்,
அங்கே உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
ஆனால், குடும்பத்திற்கு ஒரு குழந்தை, வாழ்க்கைத் தரத்தை இரட்டிப்பாக்கும்.
எனவே இப்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு தீவிர முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது,
குடும்பங்களை ஒரு குழந்தையுடன் கட்டுப்படுத்த.
சீன அதிகாரிகள் அபராதம், பொருளாதார ஊக்கத் தொகை மற்றும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
இது போன்ற விளம்பர பலகைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு நீண்ட கால வேலை இருக்கிறது.
நான் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்,
சீனா அதன் ஒரு குழந்தை கொள்கையை அறிமுகப்படுத்தியது.
எங்கும் இந்த கொள்கையின் அறிவிப்புகளை பார்த்துகொண்டே நான் வளர்ந்தேன்.
அவை சுவர்களில் வர்ணம் பூசப்பட்டிருந்தன, சீட்டு கட்டுகளில் அச்சிடப்பட்டிருந்தன...
நாட்காட்டிகள்,
தீப்பெட்டிகள்,
உணவு பெட்டிகள், சுவரொட்டிகள்.
ஆகிய அனைத்தும் சீனாவில் வாழ்க்கை பின்னணியில் கலவையானது.
அது எனக்கோ அல்லது எவருக்கோ அதன் அர்த்தம் என்ன என்பதை நான் அதிகம் யோசித்ததில்லை
நான் தாய்மை பற்றி அறிந்து கொள்ளும் வரை.
எங்கள் குழந்தை ஏழு வாரங்கள் முன்னதாகவே பிறந்தது.
நான் அதற்கு தயாராகவில்லை.
அவன் பிறந்ததும், செவிலியர்கள் என்னிடமிருந்து அவனை தூக்கி சென்றார்கள்.
அவனது உடல்நிலை மற்றும் பிரிவு, எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருவழியாக அவனை வீட்டிற்கு அழைத்து சென்றேன்.
இது அம்மாவின் முடி.
தாய்மை அடைந்தது, என் நினைவுகளுக்கு உயிர் கொடுத்தது போல் உணர்ந்தேன்.
எனது குழந்தை பருவ நினைவுகள் எனக்குள் மலர்ந்தது.
நான் என் பெற்றோர்களை மற்றும் அவர்கள் எனக்கிட்ட பெயரை நினைத்தேன்.
நான் பிறப்பதற்கு முன், நான்ஃபூ என்ற பெயரை தேர்வு செய்திருந்தார்கள்.
நான்ஃபூ
நான் என்றால் "மனிதன்" மற்றும் ஃபூ என்றால் "தூண்."
மனிதன் தூண்
அவர்கள் மகன் வளர்ந்து குடும்பத்திற்கு தூணாக இருப்பான் என்று எதிர்பார்த்தார்கள்.
நான் பெண்ணாக பிறந்தபோது,
இருந்தபோதிலும் நான்ஃபூ என்று பெயரிட்டார்கள்,
ஒரு ஆண் மகனை போல் நான் வலிமையாக வளருவேன் என்று நம்பிக்கையில்.
என் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும், அனைத்து வீட்டு வாயிற்கதவுகளில்,
அரசாங்கம் தொங்க விட்ட விளம்பர தகடுகள் என் நினைவிற்கு வந்தது,
கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்தின் அர்ப்பணிப்பை குறிக்க.
ஒவ்வொரு தகடும் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்,
அந்த குடும்பத்தின் செயல்பாடுகளை குறிப்பிட்டு,
அந்த குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இல்லை என்பதற்கும் ஒரு நட்சத்திரம் உள்பட.
எங்கள் குடும்பம் எப்போதும் அந்த நட்சத்திரத்தை பெறவில்லை.
நடுநிலைப்பள்ளிக்கு நான் நகரத்திற்கு அனுப்பப்பட்டது நினைவிருக்கிறது
ஏனெனில் எங்கள் கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்தது.
பெரும்பாலான நகர குழந்தைகள், ஒரு குழந்தை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
எனக்கு சகோதரர் இருக்கிறார் என்று யாராவது தெரிந்துகொள்ளும் போதெல்லாம்,
நான் சங்கடப்படுவேன்,
இரண்டாவது குழந்தையைப் பெற்றதால் என் பெற்றோர்கள் ஏதோ தவறு செய்தது போல்.
வாங் கிராமம்/ஜியாங்க்சி மாகாணம் என் சொந்த ஊர்
ஒரு குழந்தை கொள்கையின் படி எனக்கு எப்படி தம்பி இருக்க முடியும்?
நாங்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறோம். அங்கு இரு குழந்தைகள் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் இரு குழந்தைகளுக்கு இடையில் ஐந்து வருட இடைவெளி இருக்க வேண்டும்.
அதனால் தான் உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் ஐந்து வருட இடைவெளி.
அதனால் எங்களால் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிந்தது.
பாட்டியை பார்க்கிறீர்களா?
அம்மா பிறந்த கதையை பாட்டி நமக்கு சொல்கிறார்கள்.
அப்போதெல்லாம் ஒரு குழந்தை கொள்கை மிக கடுமையாக இருந்தது.
பல வீடுகள் இடிக்கப்படுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...
ஜவோடி வாங் என் அம்மா
...ஏனென்றால் குடும்பங்கள் வலுக்கட்டாய குடும்ப கட்டுப்பாட்டை மறுத்தனர்.
அவர்களது கூரைகள் பிரித்தெடுக்கப்பட்டது.
அந்த காலத்தில், மீயொலி அலகிட்டு பாலின சோதனைகள் அனுமதி இல்லை.
நான் உன் தம்பியை பெற்றெடுக்க செல்லும் முன்,
உன் பாட்டி ஒரு மூங்கில் கூடையை வீட்டு வரவேற்பு அறையில் வைத்து
சொன்னார்கள்,
மறுபடியும் பெண் குழந்தை என்றால், அவளை இந்த கூடையில் போட்டு
தெருவில் விட்டுவிடலாம்."
செவிலி தாய் "ஆண் குழந்தை! ஆண் குழந்தை," என குழந்தை பிறந்ததும் கூறினார்.
உன் தாத்தாவிற்கு சிலிர்த்துவிட்டது.
அவர் "வாருங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடலாம்!" என மகிழ்ச்சியுடன் கூவினார்.
உன் தம்பி 1990 இல் பிறந்தான்.
ஜஹிமே வாங் என் தாத்தா
நீ பிறந்தப்பின் உன் தாயிற்கு கருத்தடை செய்வதாக இருந்தார்கள்.
உன் பாட்டிக்கு அதை தடுக்க தைரியம் இல்லை.
அவர் கிட்டத்தட்ட அவர்களை கருத்தடை செய்ய விட்டுவிட்டார்.
ஆனால் நான் எதிர்த்து நின்றேன்.
முடிவில், அவர்கள் அவள் ஐந்து வருடங்களுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனறார்கள்.
என்னால் ஐந்து வருடங்கள் காத்திருக்க முடியும்.
கருத்தடை செய்ய சொல்லி உத்தரவிட்டது யார்?
கிராம அதிகாரிகள்.
செல்லமே, இப்போதெல்லாம் சிறப்பாக உள்ளது, அனைத்தும் மிக அருமையாக!
உன் அம்மாவை விட உனக்கு எவ்வளவோ எளிதாக உள்ளது.
என் மகன் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் நான் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டேன்.
முதல் முறையாக அவனை கிராமத்திற்கு அழைத்து வந்தபோது
சீனாவில் பெற்றோர் ஆவது எவ்வளவு கடினம் என தெரிந்தது.
கிராமத்தின் பால்வாடி
என் அம்மா கற்பிக்கும் கிராம பால்வாடிக்கு வருகையின்போது,
ஒரு குழந்தை கொள்கை பாடப்புத்தகங்களில் இருந்தது நினைவுக்கு வந்தது, நாங்கள்
குழந்தையாக இருந்தபோதே.
எங்கள் வாழ்க்கை மிகவும் சிறந்து இருக்கிறது
ஒரு குழந்தை கொள்கைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று
நான் நினைத்திருந்தேன்.
எங்களுக்கு என்ன ஒரு அருமையான வாழ்க்கை
ஆனால் இப்போது வியக்கிறேன், என் எண்ணங்கள் உண்மையில் என்னுடையதா
அல்லது வெறும் படித்தது மட்டும் தானா.
ஒரு குழந்தை கொள்கை தொடங்கியபோது பொறுப்பில் இருந்த முன்னாள் கிராம தலைவரைப் பார்க்க
என்னை அழைத்துச் செல்லும்படி என் அண்டை வீட்டுக்காரரிடம் கேட்டேன்.
என் அம்மாவிற்கு கருத்தடை செய்வதைப் பற்றி என் தாத்தா
எதிர்த்து வாதாடியவர்களில் அவரும் ஒருவர்.
தயவு செய்து வந்து கதவை திறக்கவும்.
முன்னாள் கிராம தலைவரின் மனைவி
நான் ஆசிரியர் ஜவோடியின் மகள்.
உன் முகம் பழக்கமானது போல் இருக்கிறதே என வியந்தேன்.
ஆசிரியர் ஜவோடியின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள்.
நீ நான்ஃபூவா?
ஆம். நான் நான்ஃபூ தான்.
எனக்கு உன்னை அடையாளம் தெரியவில்லை.
ஆம், மிகவும் மாறிவிட்டேன். ஆனால் இப்பவும் பார்க்க என் அம்மா மாதிரி இருக்கிறேன்.
மிகவும் ஒரே மாதிரியாக. எனவேதான் வெகு நேரமாக உன்னை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அமெரிக்காவில் சீட்டுக்கட்டு விளையாடுவார்களா?
ஆம், விளையாடுவார்கள்.
டுண்டே வாங் முன்னாள் கிராம தலைவர், வயது 74
நீங்கள் என்ன பதவியில் இருந்தீர்கள்?
நான் கிராம குழு தலைவராக,
கிராம கட்சி செயலாளர் மற்றும் கிராம தலைவராக இருந்தேன்.
ஒரு குழந்தை கொள்கையை அமலாக்குவது மிக கடினமாக இருந்தது.
அது ஏன் கடினமாக இருந்தது?
ஒரு குழந்தை கொள்கை...
பாரம்பரியமாக, அனைவரும் ஒரு மகனை விரும்பினார்கள்.
ஒரு குழந்தை கொள்கை மிக கண்டிப்பாக இருந்த போது,
மக்கள் நினைப்பை மாற்றுவது மிக கடினம்.
சாதாரண மக்களுக்கு அது புரியவே இல்லை.
அவர்களுக்கு புரியாத போது எப்படி விளக்கம் அளித்தீர்கள்?
பிரச்சாரம் மூலம் வலியுறுத்தினோம்.
எல்லா கிராமங்களிலும் தெருக்கூத்து மற்றும் நடன நிகழ்ச்சிகள் இருந்தன.
நான் கூத்துகளை எழுதியிருக்கிறேன் பயன்களை பரப்பும் வகையில்...
ஒரு குழந்தை கொள்கை பற்றி.
சியான்வென் லியூ குடும்பக் கட்டுப்பாடு பிரச்சார அதிகாரி
என் இலக்கு ஊக்குவிப்பது, ஒரு குழந்தை கொள்கையை...
நாட்டுப்புற கலைகளை பயன்படுத்தி.
குறைவான குழந்தைகள் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்!
லியூ சியான்வென் போன்றவர்கள் சீனா முழுவதும் ஒரு குழந்தை கொள்கையை பரப்ப வேலை செய்தனர்.
நான் பேச ஆரம்பிக்காத வயதிலேயே,
இந்த கொள்கையை போற்றி செய்திகள் என்னை சூழ்ந்திருந்தன.
தொலைக்காட்சி இருந்தது.
நாங்கள் ஒரு குழந்தை கொள்கையை இதயத்தில் ஏற்றுக் கொண்டோம்.
எங்கள் வாழ்க்கை இப்போது சிறப்பாக இருக்கு கட்சியின் முன்னோக்கு பார்வைக்கு நன்றி!
மேடை நாடக நிகழ்ச்சிகள்.
ஒரு குழந்தை கொள்கை உண்மையில் மிக உயர்ந்தது!
ஒரு குழந்தை கொள்கை நமக்கு நம்பிக்கையை தருகிறது!
நமது தேசிய கொள்கையை முழுமையாக செயல்படுத்துங்கள்!
மற்றும் குழந்தைகள் பாடல்களில் கூட.
உங்களுக்கு இரண்டாவது குழந்தை இருந்தால் நீங்கள் சட்டத்தை மீறியவர்கள்
பின்னர் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்
தப்பிக்க முயன்றால் சிறையில் அடைக்கப்படுவீர்கள்
இதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்
நான் எச்சரிக்கவில்லை என்று சொல்லாதீர்கள்
மேலும் மற்றவர்களைப் போல் நானும் கச்சேரியில் சேர்ந்துக் கொண்டேன்.
அது நான் தான் பிரச்சாரப் பாடல்களை பாடுவது.
எங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி ஒப்பனை, ஒரே மாதிரி ஆடைகள்
மற்றும் ஒரே மாதிரி மனநிலை.
இந்த கொள்கையை ஊக்குவிக்கும் போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?
கொள்கை மேலிடத்திலிருந்து
வந்துள்ளது என்று சொன்னேன்.
கீழே உள்ள நாங்கள் இதை செய்ய விரும்பவில்லை, ஆனால் வேறு வழியில்லை.
அந்த விளக்கத்தைத் மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது.
இல்லாவிட்டால் நாங்கள் அவர்களின் வீட்டை இடிக்க வேண்டியிருந்தது...
அல்லது அவர்களின் உடைமைகளை பிடுங்க வேண்டியிருந்தது.
அப்போதெல்லாம் அதிகாரிகளாக இருப்பது உண்மையில் மிக கடினமாக இருந்தது.
நாங்கள் ஆணைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது,
ஆனால் மக்கள் எதிர்த்தார்கள்.
அவர்கள் எதிர்த்தார்கள்.
ஒரு வீட்டை இடிக்கும் போது அது ஒரு கொடுஞ்செயல் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
கொடுஞ்செயலாக இருந்திருக்கலாம்.
ஆனால் கொள்கை என்றால் கொள்கை தான். எங்களால் என்ன செய்ய முடியும்?
நான் சொன்னது போல்...
ஒரு சில கிராமங்களில் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள மறுத்த
நிகழ்வுகளும் இருந்தது,
மற்றும் அதன் பின்னர்...
எல்லா ஜில்லா அதிகாரிகளும் சேர்ந்து சென்று
வற்புறுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியிருந்தது.
உண்மையில் கடுமையாக இருந்தது.
என்னால் பார்க்கவே முடியவில்லை.
உண்மையை சொல்லப்போனால், அதில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
நான் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் கிராமப்புற கிராம அதிகாரிகள்.
நாங்கள் கட்டளையை பின்பற்ற வேண்டியிருந்தது.
கீழ்ப்படியாமை பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது.
அங்கிருந்து கிளம்பும் போது, நான் என்னுடன் வந்த பக்கத்து வீட்டுக்காரரை கேட்டேன்
இக்கொள்கையால் பாதிக்கப்பட்ட சில பெண்களிடம் என்னை அழைத்து செல்ல முடியுமா என.
வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைக்கப்பட்ட சில பெண்களை நாம் போய் பார்க்கலாமா?
நீங்கள் போகக்கூடாது என நினைக்கிறேன். அங்கு எதை படம் பிடிக்க போகிறீர்கள்?
அவர்களது அனுபவம் பற்றி அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
செய்யாததே சிறப்பு, யார் அத்தகைய வேதனையான நினைவுகளை நினைவுகொள்ள விரும்புவார்கள்?
ஆனால் அதைப்பற்றி பேச அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லையே...
நான் சொல்வதை கேள், அவரை எந்த பிரச்சனையிலும் சிக்க வைக்காதே!
தெரியும்... தெரியும்.
அவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உன் அம்மா பதிலளிக்க வேண்டியிருக்கும்.
No comments yet. Be the first to leave one.