Le prime 200 righe.
இறங்கு, இந்தூர் வந்துடுச்சு.
வா.
ஒரு நிமிஷம்.
ஹே, பிளாட்ஃபாம் இந்தப் பக்கம்.
உன் வேலையைப் பாரு. நீ இறங்கு.
கதவைத் திற.
எங்க போற? இப்படி ஏறக்கூடாது.
என் மாமா பதக் உள்ள இருக்காரு.
நான் அவரை அழைச்சுக்கிட்டுப் போக வந்திருக்கேன், நகரு.
பிளாட்ஃபாரத்திலேந்து அழைச்சுக்கிட்டுப் போ.
என் மாமா ஒரு எம் எல் ஏ, புரிஞ்சுதா?
நான் இந்த வழியாப் போவேன், இல்ல, உனக்கு வேலை போகும். எப்படி வசதி?
நகரு!
தள்ளிப் போங்க.
இங்க எம் எல் ஏ இருக்காரு.
அதனால? அவர் ஒரு பொதுநல ஊழியர். பொதுமக்கள் கொஞ்சம் வழி விடலாம்.
ஹலோ.
ஆயுஷ், விச்சார், சரிதா, ராம்னிக், சைஃபுதீன்.
ரோஹித் பதக் பேரு இருக்கா பாரு.
ரோஹித் பதக் பேர் இல்லை.
என்ன? ரோனி பதக் இருக்கா பாரு.
அவனை ரோனின்னுதான் எல்லாருக்கும் தெரியும்.
எட்டு தடவை பாத்துட்டேன்.
ரோஹித் பதக், ரோனி பதக், வேற எந்த பதக்கும் இல்லை.
நீ சரியாப் பாக்கல.
ஒருவேளை பஸ்ல வந்திருக்கலாம். பஸ் ஸ்டாண்டுக்குப் போய்ப் பாக்கலாம்.
உனக்கென்ன பைத்தியமா? ரயில்ல வரேன்னு சொல்லியிருந்தான்னா,
-ஏன் பஸ்ல வரப்போறான்? -அவன் பேர் லிஸ்ட்ல இல்லியே.
-அன்னு! -வெறுப்பா இருக்கு.
ஏ, மச்சி!
நண்பா! நண்பா! நண்பா! நண்பா! நண்பா!
-எப்படி இருக்க? -நல்லா இருக்கேன்.
எப்படி இருக்க, ரோனி?
நீ எந்த கோச்ல இருப்பேன்னு சொல்லலியே.
-ரொம்ப நேரமா தேடிக்கிட்டிருக்கோம். -உன் பேரைத் தேடிக்கிட்டிருந்தேன்.
நான் செகண்ட் கிளாஸ்ல டிக்கட் புக் பண்ணி இருந்தேன்.
ஆனா, மாமா எப்படிக் கண்டு பிடிச்சார்னு தெரியல.
-ஓ! -அவர் யாருக்கோ கால் பண்ணினாரு.
டி டி ஈ என் கால்ல வந்து விழுந்தாரு.
அவருக்கு வேலை போயிடும்னாரு. ஏன்னு கேட்டேன்.
நீங்க ஏன் செகண்ட் கிளாஸ்ல இருக்கீங்கன்னு உங்க மாமா கேட்டாருன்னு சொன்னாரு.
-உடனே என்னை ஏஸி கோச்சுக்கு மாத்திட்டாரு. -அதனாலதான் என் பேரு லிஸ்ட்ல இல்ல.
அதானே பாத்தேன்.
இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
நீ இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம், மச்சி.
ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.
அவ்வளவு கஷ்டம் ஒண்ணும் இல்லை.
எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. நீங்க ரெண்டு பேரும் இல்லாம, ஜாலியாவே இல்லை.
உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன், அன்னு.
ஒவ்வொத்தருக்கும் அவங்க அவங்க ஊர்தான் சௌகரியம்.
நானும் உன்னை மிஸ் பண்ணினேன், மச்சி.
எனக்கு நிச்சயமாத் தெரியும்.
20 நாள்ள உனக்கு நிறைய தன்னம்பிக்கை வந்திருக்கும்.
போகலாம்.
-வா. -போகலாம்.
வண்டியை எங்க நிறுத்தியிருக்க?
இந்தப் பக்கம்.
என்னை வரவேற்க மாலைகளோட வராதது எனக்கு சந்தோஷமா இருக்கு.
அதெல்லாம் தொந்தரவு.
சாரி. மாலை வாங்க எங்கிட்ட பணம் இல்லை.
ரொம்ப ஏழை மாதிரி பேசாதே
நான் அப்செட் ஆகி, உன்னைப் பணப்படுக்கையில தூங்க வச்சுடுவேன்.
வா, மச்சி.
எங்கிட்ட வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கலாமே, ரோனி?
அவனுக்குப் பணப்படுக்கை ஏற்பாடு செய்யறதுக்கு பதிலா?
நீ என் நட்புக்கான விலையைக் கொடுத்ததும், உன் பணத்தைக் கொடுத்துடறேன்.
எல்லாத்தையும் பணத்தால எடை போடாதே.
நான் விளையாட்டுக்கு சொன்னேன். நண்பர்கள் கிட்ட விளையாடலாம், இல்ல?
அன்னு, நீ பிரபலமாகணும். இந்த நகரத்தில எல்லாருக்கும் உன்னைத் தெரியணும்.
உன் பின்னால எப்பவும் நாலு பேரு வந்து கிட்டே இருக்கணும்.
-சரி. -உன்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியணும்.
நீ என்னைக் கூப்பிட்டுப் போக வரப்ப, "இந்தப் பெரிய தலைவர் யார்?"னு மக்கள் கேட்கணும்.
உக்காரு.
-ஹே! -இதை வெச்சிக்கோ.
ஏன் ஹெல்மட் போட்டுக்கற?
எச்சரிக்கையா இல்லாட்டா, விபத்துகள் நடக்கும்.
எப்படியோ.
போகலாம்.
-போகலாமா? -போகலாம்.
எங்கிட்ட நிறைய பேர் பழக விரும்பினாங்க.
ஆனா, என்னால இருக்க முடியல.
உண்மையா, நான் உங்களை மிஸ் பண்ணினேன்.
உங்க எல்லாரையும் மிஸ் பண்ணினேன்னு சொல்ல வந்தேன்.
நானும் உன்னை மிஸ் பண்னினேன், ரோனி.
நாங்க எல்லாரும் அங்க இருந்தப்ப, நீ ஏன் கிளம்பிப் போனே?
உண்மைதான். நான் போனப்பறம், நீங்கள்ளாம் என்ன செஞ்சீங்க?
ரிக்க்ஷாபோடுபவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்
-உண்மையாவா? -என்னை அழைச்சுப் போக நீ இல்லை.
அதனால நானே போக வேண்டியிருந்தது.
எல்லாருக்கும் அதே கதைதான். எனக்கு எவ்வளவு போர் அடிச்சுது தெரியுமா?
இனிமே உனக்கு போர் அடிக்காது.
நான் இப்ப திரும்பி வந்துட்டதால, எப்பவும் உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்.
நன்றி.
நீ திரும்பி வர மாட்டேன்னு நினைச்சேன்.
எல்லாரும் ஓடிப்போறது என் ராசி.
அந்தப் பையன் லக்கி கூடத் திரும்பி வரல. முட்டாப்பய.
அவனுக்காக என் பெற்றோர் கிட்ட எவ்வளவு சண்டை போட்டேன் தெரியுமா?
என் அம்மா மூணு நாளைக்கு சாப்பிடவே இல்ல. என்ன பிரயோஜனம்?
வாழ்க்கை அப்படித்தான், அவந்திகா.
சில பேர் வருவாங்க, சில பேர் போவாங்க.
சில பேர் போயிட்டுத் திரும்பி வருவாங்க.
அப்புறம் போகாம நிரந்தரமா இருப்பாங்க.
தெரியும். ஆனா, அவன் என்னோட தொடர்பில இருந்திருக்கலாம்.
இது என்ன? ஏதாவது பரிசா?
இல்ல, இது என்னோட புடவை.
ஆஃபீஸ்ல ஒரு நிகழ்ச்சிக்காகப் புடவை கட்டிக்கணும்.
புடவைக்கு ஓரம் தைக்கணும்.
நேரமாயிடுச்சு. நாளைக்குப் பாத்துக்க வேண்டியதுதான்.
எங்கிட்ட கொடு. நான் செஞ்சு தரேன்.
வேண்டாம், ரோனி. நான் பாத்துக்கறேன்.
வெய்யில அலஞ்சா, நீ கருத்துப் போயிடுவ.
நான் அரை மணி நேரத்தில செஞ்சு கொடுத்துடறேன்.
உளறாதே. ஓரம் அடிக்கறது அரை மணி நேரத்தில முடியற வேலை இல்லை.
உனக்கு என்னைப் பத்தித் தெரியாது.
அரை மணி நேரம்னு சொன்னேனே தவிர, இதுக்கு 15 நிமிஷம்தான் ஆகும்.
உண்மையாவா?
என் மாமா ஒரு எம் எல் ஏ, தெரியுமா?
நீ தங்கம்டா.
எனக்கு கால் பண்ணு. நான் போகணும். பை.
பை.
ஹலோ, சொல்லுங்கப்பா.
ரோனி, நான் பேசறது கேக்குதா?
நல்லா கேக்குது, அப்பா.
டெல்லியில ரொம்ப குளிர்னு நியூஸ்ல பாத்தேன்.
நீ நல்லா இருக்கியான்னு தெரிஞ்சுக்கத்தான் ஃபோன் பண்ணினேன்.
சரி, அப்பா.
நீ சௌக்கியம்தானே?
அப்பா, நான் இப்ப இந்தூர்ல இருக்கேன்.
என்ன?
எங்ககிட்ட சொல்லவே இல்லையே?
வேலை முடிஞ்சதும், எங்களை வந்து பாரு.
நான் வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருக்கேன் அப்பா.
அவன் இந்தூர்ல இருக்கான்னு என்னால நம்பவே முடியல.
அம்மா, ரோடெல்லாம் ஒரே குண்டும், குழியுமா இருக்கு.
அப்ப சுரங்கப்பாதை வழியா வரலாமே.
நாங்க உன்னை நல்லாத்தானே பாத்துக்கறோம்.
மகாராஜா பானிபட் போர்ல ஜெயிச்சுட்டு வந்திருக்காரு.
எப்பத் திரும்பிப் போகப் போற?
இப்பதானே வந்திருக்கான்.
நான் திரும்பிப் போகப் போறதில்ல, அப்பா.
இருபது நாள்ள திரும்பி வந்துட்டான்.
நான் அவன் போலீஸ் ஆஃபீசர் ஆகணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன்.
இல்லப்பா. அது வந்து...
என்னை அப்பான்னு கூப்பிடாதே!
இப்பல்லாம், ஐ பி எஸ்க்கு அவ்வளவு ஸ்கோப் இல்லப்பா.
நிறைய பேர் போலீஸ் வேலையை விட்டுட்டு பாங்க் வேலைக்கு முயற்சி செய்யறாங்க.
ஐ பி எஸ் ஆகி என்ன செய்யறது?
முதல்ல அது கிடைக்க, ஒரு கஷ்டமான பரிட்சை எழுதி பாஸ் பண்னணும்.
அப்புறம், அரசியல்வாதிகள் பின்னால அலையணும்.
பாங்க் ஆஃபீசரா இருக்கறது ஈஸி.
ஏசியில உக்காந்து வேலை செஞ்சுட்டு, அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம்.
வோவ்!
இவன் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு பரீட்சை எழுதப்போறதா சொல்றான்.
மூணு வருஷமா, இந்த நாடகம் நடந்துக்கிட்டிருக்கு.
வாழ்க்கையில குறிக்கோளே இல்லை இவனுக்கு.
இந்தத் தடவை குறிக்கோளோட இருக்கேன்.
பாங்க் பரீட்சையில முழு கவனம் செலுத்தறேன்.
நீங்க பெருமைப்படற அளவுக்கு கஷ்டப்பட்டுப் படிக்கறேன்.
அப்பா, இதில கையெழுத்துப் போடுங்க.
என்ன இது?
இது ஒரு டெஸ்ட். நான் 20க்கு 20 மார்க் வாங்கியிருக்கேன்.
வெல் டன்.
அவன் அத்தை பண்ணின வேலை.
ஏதோ மந்திரம் பண்ணி அவன் மனசைக் கெடுத்துட்டா.
கவலைப்படாதே. உனக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்.
அப்புறம், உன் புத்தி எவ்வளவு வேகமா வேலை செய்யுதுன்னு பாரு.
எதுவுமே அவனுக்கு உதவப் போறதில்ல.
-வண்டி இழுக்கப் போறான், ஒரு நாள் -நீங்க இருக்கீங்களே.
பின்னாலதான் தெரியும்.
பையில என்ன?
-புடவை. -புடவையா?
அம்மாவுக்காக வாங்கிக்கிட்டு வந்தேன்.
டெல்லியிலேந்து எதுவும் வாங்கிக்கிட்டு வர மறந்துட்டேன்.
அதனாலதான் கடைக்குப் போயிட்டு வந்தேன்
அம்மாவுக்கு இந்தப் புடவை வாங்க.
யாருக்கு இல்லாட்டாலும், என் அம்மாவுக்கு எப்பவும் ஏதாவது வாங்கிக்கிட்டு வருவேன்.
அம்மா, இந்தா புடவை.
சந்தோஷம்டா, பையா.
புடவை ரொம்ப நல்லா இருக்கு.
ஓரம் தச்சுட்டேன்னா, ரொம்ப நல்லா இருக்கும்.
டெல்லியில ஒரு பப்புக்குப் போனேன்.
அங்கே ஒரு கவியரங்கம் நடந்துக்கிட்டிருந்தது.
அங்க போகலாம்னு தோணிச்சு.
அங்கே கவியரங்கம் நடக்கறதைப் பாக்க, ஆச்சரியமா இருந்தது.
நம்ம ஊர்லல்லாம் கவியரங்கம்லாம் சீரியசான இடங்கள்ளதானே நடக்கும்?
ஓரு கவிஞர் ரொம்ப உணர்ச்சியோட கவிதை படிச்சுக்கிட்டிருந்தார்.
நான்"வோவ்"னு சொன்னேன்.
எல்லாரும் நான் ஏதோ வேற கிரகத்திலேந்து வந்தவன் மாதிரி என்னைப் பாத்தாங்க.
அவங்கள்ளாம்"வோவ்"னு சொல்ல மாட்டாங்களாம்.
இப்படித்தான் பண்ணுவாங்களாம்.
எனக்குப் புரியல. அவங்க பண்றது கிறுக்குத்தனமா இருக்கு.
நம் மனசை உருக்கற அளவுக்கு சோகமான கவிதையை யாராவது படிச்சா,
"இந்த ஒயின் பாட்டிலை உடைப்பேன் கல்லால்
சலோனி, உன் காதல் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்னால்."
-வோவ். -வோவ்.
-இதயத்தைத் துளைச்சது இல்ல? -ஆழமா.
எப்படி ரியாக்ட் பண்ணுவ?"ஆஹ்" "வோவ்" மாதிரி ஏதாவது சொல்லுவ இல்ல?
அவங்க இப்படிப் பண்ணுவாங்க.
என்னால அதைத் தாங்கிக்க முடியல. ஓடி வந்துட்டேன்.
இது மாதிரி போலிகளை என்னால ஏத்துக்க முடியாது.
No comments yet. Be the first to leave one.