Lamhe

Lamhe (लम्हे)

Muat Turun Sari Kata Tamil

Maklumat siaran

Lamhe WEBRip Amazon
Ulasan oleh IPlateex

Tag

webrip
web
BRip
Diterbitkan pada: 2022-06-13
Muat Turun: 35
Masalah Pendengaran: No

Pratonton sari kata Tamil

200 baris pertama.

இத்தருணங்கள், இந்நினைவுகள்

வரும் ஆண்டுகளில் நினைத்து போற்றுவேன்

இக்காலநிலை மாறிப்போனாலும்

மீண்டும் திரும்பிட நான் கேட்பேன்

இத்தருணங்கள், இந்நினைவுகள்

வரும் ஆண்டுகளில் நினைத்து போற்றுவேன்

இக்காலநிலை மாறிப்போனாலும்

மீண்டும் திரும்பிட நாம் கேட்பேன்

இந்த மக்களுக்கு சூடு...

...தெரியாதா, டாய் ஜா?

-ராஜ் சிங், காரை நிறுத்து. -ஏன், டாய் ஜா?

என்ன செய்யறீங்க?

விரேன், வா.

நீயும் கீழே இறங்கு.

-டாய் ஜா? -விரேன் கீழே இறங்கு.

என்ன இங்கேயா, டாய் ஜா?

இந்த நிலத்திற்கு வணக்கம் செலுத்து விரேன்.

நிலத்திற்கு வணக்கமா? ஏன்?

நீ முதல் முறையாக இங்கே வருவதால்

இது தான் உன் வீட்டின் அச்சாரம்.

என் கைகளால் வணக்கம் வைத்தால் போதாதா? தரை மிகவும் சூடாக இருக்குமே.

-விரேன். -சரி, அப்படி முறைக்காதீங்க.

நெற்றி தொட்டே கும்பிடறேன்.

கடவுளே எனக்கு உதவி செய்.

நன்றாகக் குனிந்து நெற்றி தொட்டு வணங்க சொன்னேன்.

அட கடவுளே! தேவனே!

உட்காருங்க, டாய் ஜா. போகலாம், ராஜ் சிங்.

இந்த பாலைவனத்திற்கு நீங்கள் ஏங்கியிருந்தீர்களா?

இது ஒரு பாலைவனமல்ல, விரேன்.

சுற்றி பார்,

அது உன் மூதாதையரின் வரலாறு நிறைந்த பூமி.

மூதாதையர்கள் கீழே குனிந்து நெற்றி தொட்டு வணங்கியிருக்க மாட்டார்கள், டாய் ஜா.

அப்படி செய்திருந்தால், அவர்களின் நெற்றியில் கொப்பளங்கள் இருந்திருக்கும்.

சும்மா இரு.

இந்த பாலைவனம், குளிரூட்டப்பட்டிருப்பது போல், அவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!

இந்த மக்கள் எதனால் செய்யப்பட்டவர்களோ?

அவர்கள் மார்வார் மண்ணின் மைந்தர்கள்.

அவர்கள் நிழலுக்கு ஒதுங்கும் மரம் போல பக்குவப்பட்டவர்கள்.

கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராக.

ஓ, நன்றி கடவுளே, நான் பிறக்கும் முன்னே அப்பா குடிபெயர்ந்துவிட்டார், இல்லையெனில்...

இந்த சூரியனின் வெப்பதை ஒரு சில நாட்களில் நீ உணரும் போது,

உன் மூதாதையரின் கணக்கிலடங்கா புராணங்களை அது விவரிக்கும் போது,

நீயும் கூட, வீட்டில் இருப்பதாக உணருவாய்.

முடியாது, டாய் ஜா.

நான் பத்திரங்களில் கையொப்பமிட்டதும், லண்டனுக்கு முதல் விமானத்தை பிடிப்பேன்.

உன் விருப்பம் போல் பிரபுவே!

அப்படி சொல்லாதீங்க, டாய் ஜா. என்னை திட்டுவது போல் இருக்கு!

நான் உன்னை திட்டத்தான் செய்றேன்!

சரி, நான் ஓடிவிட மாட்டேன்.

நான் என் வேலையை முடிக்கிறேன், நிலத்திற்கு வணக்கம் செய்கிறேன்,

உங்கள் அனுமதியைத் கேட்ட பிறகு போகிறேன்.

இப்போது மகிழ்ச்சியா?

என் மகிழ்ச்சியை விடு,

உன் சத்தம் கேட்டு மாளிகையே முன்னாடி வந்தது போல தெரிகிறது

திறந்த கரங்களைக் கொண்டு உன்னை வாழ்த்துவதற்காக.

-வணக்கம், டாய் ஜா. -வணக்கம்.

-வணக்கம். -வணக்கம்.

வா, போகலாம், விரேன்.

பிரபு நிச்சயமாக வளர்ந்துவிட்டார்!

இவர் நம் வீட்டை பார்த்துக் கொள்பவர், சுதேஷ்வர் நாராயண் திவாரி.

இவை எல்லாம் என்ன, டாய் ஜா?

பாரம்பரியம், விரேன்.

வா.

உன் தந்தை வெளிநாடு சென்றார், ஆனால் உன் பெற்றோரின் ஓவியங்கள் இங்கேயே இருந்தன.

பெற்றோருக்கு பாதங்கள் இல்லை, பார்த்தீர்களா.

-விரேன். -மன்னிச்சிருங்க.

-நான் இப்போது இந்த மாலையை கழட்டிடலாமா? -ஆம்.

-அரண்மனையில் இருந்து தாகூர் வந்திருக்கிறார். -சரி.

அவர் யார்?

அவர் அண்டை வீட்டார் மட்டுல்ல, உன் தந்தையின் ஒரே நண்பர்.

உலகம் அவரை கைவிட்ட போது, இவர் உறுதுணையாக இருந்தார்.

வெறுமனே வணக்கம் சொல்லாதே, அவருடைய கால்களை தொட்டு வணங்கு,

மரியாதையாக அவரிடம் பேசு, சரியா? வா.

விரேன், குழந்தைகள் வளரும் போது,

அவர்கள் மூத்தவரின் பாதங்களைத் தொடக்கூடாது,

சரிசமமாக அவர்களை பாவிக்கணும்.

உனக்கு தெரியுமா, 18 ஆண்டுகளுக்குப் பின் இன்று தான் இவ்வீட்டிற்குள் வந்திருக்கேன்.

உன்னை தழுவ வந்தேன்.

டாய் ஜா, நான் ஒரு தவறும் செய்யலை, தானே?

இல்லை உன் அப்பாவை நீ நினைவுபடுத்தினாய்.

ராஜபுத்திரர்கள் கண்ணீரை சொந்தக்காரர்களை கூட பார்க்க விடமாட்டார்கள்.

வா, நான் உன் அறையைக் காண்பிப்பேன்.

அவர் கதவண்டையில் காத்துக்கொண்டிருக்கிறார்

அதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்

நான் சொல்வதை கேள் என் அன்பே

நான் மழையில் நனைத்துவிட்டேன்

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

யாருக்காக உந்தன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

யாருக்காக உந்தன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

யாருக்காக உந்தன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என் நிலையும் உந்தன் நிலைப்போன்றதே

என்னிடம் சொல், உன் நிலை என்ன?

என்னிடம் சொல், உன் நிலை என்ன?

என் நிலையும் உந்தன் நிலைப்போன்றதே

அனைத்து மேகங்களும்

என்னை நனைத்தனவே

யார் என் பெயரை அழைத்தார்கள்?

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

-எமக்கு அவரின் பெயரை சொல்லேன் -மாட்டேன்

-எங்கே வசிக்கிறாரோ? -மாட்டேன்

அவர் கருப்பா, அழகனா, அவர் ஒரு இளவரசனா?

அவர் அழகான மனிதனா?

தோட்டத்தில் வசந்த மலர்கள் பூக்கின்றன

வசந்தம் வந்துவிட்டது, தோட்டங்களில் ஊஞ்சல்கள் இருக்கின்றன

வெயில் காலத்தின் மாற்றங்கள்,

வெயில் காலத்தின் ஊஞ்சல் தோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிட்டது.

என் நண்பர்கள் என்னிடம் பேசுவதால் நான் நாணமடைகிறேன்

என் பார்வையை கீழிறக்க

நான் என் இதயத்தை கட்டுப்படுத்த வேண்டும்

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

யாருக்காக உன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

யாருக்காக உன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

என்னிடம் சொல், ஓ, மேகமே

யாருக்காக உன் இதயம் வலிக்கிறதோ?

அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

நீ யாரை பற்றி நினைக்கிறாய்?

யாருக்காக உன் இதயம் வலிக்கிறதோ? அதனாலோ கண்ணீராய் மழை பெய்கிறாயோ?

யாருக்காக உன் இதயம் வலிக்கிறதோ?

விரேன்?

நீ என்ன யோசிக்கிறாய், விரேன்?

உங்களைப் பற்றி.

என்னை பற்றியா? நான் வயசானவள்.

வரும் நாட்களை பற்றி யோசி மகனே.

பேச்சை மாற்றாதீங்க. என் வீட்டிற்கு அழைத்து வந்தீங்க.

ஆனால் நிச்சயமாக உங்களுக்கும் ஒரு வீடு இருக்குமே.

இன்றுவரை நீங்கள் அதைப் பற்றி பேசவில்லை.

ஆம். இது விசித்திரமாக இல்லையா? நான் முற்றிலும் மறந்துவிட்டேன்.

நீ எனக்கு நினைவூட்டினாய்

எனக்கும் ஒரு வீடு இருந்தது.

ஆனால் நான் உன்னை வளர்த்ததில், அதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லை.

உன் குரல் மட்டுமே என் காதுகளில் எதிரொலிக்கிறது.

-டாய் ஜா. -டாய் ஜா.

நீ தீர்க்காயூசா வாழணும், விரேன்.

இத்தருணங்கள், இந்நினைவுகள்

வரும் ஆண்டுகளில் நினைந்து போற்றுவோம்

இக்காலநிலை மாறிப்போனாலும்

மீண்டும் திரும்பிட நாம் கேட்போம்

இத்தருணங்கள், இந்நினைவுகள்

வரும் ஆண்டுகளில் நினைந்து போற்றுவோம்

இக்காலநிலை மாறிப்போனாலும்

மீண்டும் திரும்பிட நாம் கேட்போம்

இந்த கனவுகளின் எச்சங்களிலிருந்து

இந்த நினைவுகளின் சங்கிலிகளில் இருந்து

நான் எப்படி என் இதயத்தை விடுவிப்பேனோ?

இக்காலநிலை மாறிப்போனாலும்

மீண்டும் திரும்பிட நாம் கேட்போம்

இந்த தருணங்கள்...

விரேன், உனக்கு என்ன ஆச்சு?

ஒன்றும் இல்லை.

எல்லாவற்றையும் என்னிடம் சொல்லும் அந்த சிறுவனை நினைவிருக்கிறதா?

சொல்ல எதுவும் இல்லை.

ஏன் இப்படி இருளிலேயே உட்கார்ந்திருக்க?

யாராவது வந்து விளக்கை போடுவார்கள் என்று நினைத்தேன், நீங்க வந்துட்டீங்க.

இல்லைன்னா, இருளிலேயே உட்கார்ந்திருப்பாயா?

அதை விடு. நீ தாக்கூர் வீட்டிற்கு இரவு உணவிற்கு போகணும், ஞாபகம் இருக்கா?

டாய் ஜா, நான் எங்கும் செல்லும் மனநிலையில் இல்லை.

உன்னை தான் அழைத்திருக்கார், உன் மனநிலையை அல்ல.

நீ போக வேண்டும். வா.

விரேன்.

விரேன், வா, தீர்க்காயுசா இருப்பா.

நான் இங்கே உன்னை பார்க்க மிக சந்தோஷமாக இருக்கிறேன்.

பல்லவி?

ஐயா, இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஐயாவின் கைகள் சுட்டுவிட்டன.

என்ன நடந்தது?

விரேன், எரியுதா?

நான் நலம். ஃபைன். இது தீவிரமான ஒன்றல்ல.

நீங்கள் சிறந்தவர்!

எனக்கு ஆகியிருந்தால், இந்த இடமே அல்லோல கல்லோல பட்டிருக்கும்

சத்தம் போடாமல் தீக்காயம் இருந்து என்ன பயன், விரேன்?

என் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

பாருங்கள். நான் அவரை அறிவேனா அவர் கேட்கிறார்.

விரேந்திர பிரதாப் சிங், நீங்கள் எங்களை அறிவீர்களோ இல்லையோ,

இங்கே உள்ள எல்லோருக்கும் உங்களைத் தெரியும்.

நீங்கள் லண்டனிலிருந்து வந்த பிரபு. இப்போது நான் யார் என்று கேளுங்கள்.

-நான் பல்லவி. -நீங்கள் என்ன...

இப்போ திட்டறாரே இவர் தான்,

நான் அவருடைய ஒரே மகள்.

சந்திப்பதில் மகிழ்ச்சி எல்லாம் வேணாம், கூறப்பட்டது என்று நாம் கருதுவோம்.

திரு. தாகூர்.

நீ என்னை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தாய்.

Komen

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left