Silsila

Silsila

د Tamil ژباړه ډاونلوډ کړئ

د خپرونې معلومات

Silsila WEBRip Amazon
د لخوا تبصره IPlateex

تګونه

webrip
web
BRip
په خپور شو: 2022-06-13
ډاونلوډونه: 23
د اوریدلو معیوبیت: No

د Tamil سرليکونو مخکتنه

لومړۍ 200 کرښې.

என் முகத்திரை விலகும்போது

எனக்கு வெட்கம் வருகிறது

என் முகத்திரை விலகும்போது

எனக்கு வெட்கம் வருகிறது

என் சகோதரிகளை நேசத்துடன் பார்க்கும்போது

எனக்குள் ஏதோ ஒரு கலக்கம்

நான் தூங்கையில் பல கனவுகள் காண்பேன்

என் அன்புக்குறியவன் என் கனவில் வரும்போது

புதிய வசந்தகாலம் பிறக்கும் எனக்குள் ஏதோ ஒரு கலக்கம்

என் கண்களில் இருப்பது ஒரே ஒரு காட்சி தான்

என் முகத்திரை விலகும்போது

எனக்கு வெட்கம் வருகிறது

வாழ்வின் சில தருணங்களை திருடுவோம்

நம் மூச்சில் இருக்கும் நெருப்பை தனிக்க

நமக்கென்று புதிய உலகம் உருவாக்குவோம் இவ்வுலகை விட்டு தூரத்தில்

உன் கண்களை பார்க்கும்போது

எனக்குள் என்ன மாயாஜாலம் நிகழ்கிறது?

என் மனம் தனிமையை உணரும்போது

நீ என் கண்களை பார்ப்பது போல உணர்கிறேன்

என் முகத்திரை விலகும்போது

எனக்கு வெட்கம் வருகிறது

நாம் பகிரும் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும்?

வாழ்க்கை ஒரு மிக நீண்ட பயணம்

என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது

ஆனால் நான் என் மனதை உன்னிடம் தந்ததில் இருந்து

எனக்கு தூக்கம் வரவில்லை ஓ, நீ பேசும் இந்த வார்த்தைகள்!

எனக்கு நானே கெட்ட பெயரை உருவாக்கி கொண்டேன்

முகத்திரை விலகும்போது

அவளுக்கு வெட்கம் வருகிறது

அவள் தன் சகோதரிகளை நேசத்துடன் பார்க்கும்போது

அவளுக்குள் ஏதோ ஒரு கலக்கம்

நான் தூங்கையில் பல கனவுகள் காண்பேன்

என் அன்புக்குறியவன் என் கனவில் வரும்போது

புதிய வசந்தகாலம் பிறக்கும் எனக்குள் ஏதோ ஒரு கலக்கம்

என் கண்களில் இருப்பது ஒரே ஒரு காட்சி தான்

முகத்திரை விலகும்போது

அவளுக்கு வெட்கம் வருகிறது

ஒரு வலுவான பாரம்பரியம் தான் நம்முடைய கண்ணோட்டத்தை வித்தியாசமா காட்டுது.

இந்த பாடல் ஒரு ஆண் பெண் உறவை

வசந்த காலத்தோடு ஒப்பிட்டு சொல்லப்படும் பாடல்.

தாய்மை அவளை மிகவும் நல்ல விதமாக உணர வைக்கிறது.

ஒரு நாள், என் மொத்த அன்பையும் உனக்கு கொடுப்பேன்.

அது தான் நான் உனக்கு தரும் பரிசு.

அந்த நாளுக்காக காத்திருப்பேன்.

உலகின் மிகவும் அழகான நாடு

நம்முடைய ஹிந்துஸ்தான்

உலகின் மிகவும் அழகான நாடு

நம்முடைய ஹிந்துஸ்தான்

நாம் அனைவரும் அவளது சிட்டுக்குறுவி

அவளது தோட்டம் தான் நமது விளையாட்டு மைதானம்

உலகின் மிகவும் அழகான நாடு

நம்முடைய ஹிந்துஸ்தான்

உலகின் மிகவும் அழகான நாடு

பெரியோர்களே தாய்மார்களே.

உங்கள் ஆதரவுக்கு நன்றி, இன்றைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பா அமைஞ்சது.

உங்க எல்லாருக்கும் தெரியும், இதன் மூலம் நாங்க பெற்ற பணத்தை விமான படை வீரர்களின்

மனைவிகளின் சங்கத்துக்கும் நன்கொடை வழங்கி பள்ளிகளுக்கு பயன்படுத்தப்படும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

வெற்றி இந்தியாவுக்கே.

-வெற்றி இந்தியாவுக்கே! -வெற்றி இந்தியாவுக்கே!

ரொம்ப நல்லது!

உன் தலைமுடிய அவிழ்த்து விடு. நீ பார்க்க அருமையா இருக்க!

சரி.

உனக்கு எழுதி கொடுத்த உரை எப்படி இருந்தது?

கிடைச்ச கைத்தட்டல்களை வெச்சு பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு பிடிச்சிருக்கும்.

இங்க பாரு.

தாமதமா வந்ததுக்கு மன்னிக்கவும்.

இந்த காத்திருப்பு எல்லாம் ஒரு விமானிய காதலிச்சதுக்கான பரிசா?

இது ஒரு நாள் இல்ல ரெண்டு நாளுக்கான கேள்வி இல்ல,

இது வாழ்நாளுக்கான கேள்வி.

கொஞ்சம் யோசிச்சு பாரு.

ஒரு விமானி உன் கூட இருக்கும்போது, அவன் உன் கூட மட்டும் தான் இருப்பான்.

இந்த சாதாரண ஆட்கள் தாங்கள் காதலிக்கும் பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்துட்டு

வரி செலுத்துவதை பற்றி கவலைப்படுறவன் போல இல்லை நான்.

நீ சம்பாதிக்கும் போது வரி செலுத்த போற.

உன் பாதி சம்பாத்தியத்தை மதுவுக்கு செலவழிக்குற.

மதுபானம் எல்லாம் சிங்க மனம் படைத்தவர்களுக்கு.

ஆனா இந்த சிங்கம் பூனைய போல சினுங்கிட்டு இருந்ததை தான் பார்த்தேனே.

செல்லம், நம்ம காதலுக்காக.

உன்னுடன் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கை.

இதுவரை தனிமையில் கிடந்தேன்.

என்னவென்றே தெரியாத அமைதி என்னை பாதித்தது.

என் மனதின் பேச்சு கூட கொடுமையாக இருந்தது.

தனிமையில், என்னை நானே கேட்பேன்.

"என்னை சுற்றியிருக்கும் அழகை கடந்து, இந்த நேர காலங்களை கடந்து,

எனக்கென்று யாரேனும் காத்திருக்கிறார்களா?"

அவன் குரலில் ஒரு பரிதாபம் தெரியுது.

ஏதோ குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்படுது.

அவன் யாரையோ தேடிட்டு இருக்கான்.

யார் இவன்?

அவன் குரலை கேட்டதுக்கே நீ அசந்து போய்ட்டியே,

நீ அவனை சந்திச்சா என்ன ஆகும்?

சந்திக்குறதா?

நீ சந்திச்சு தான் ஆகனும்.

நீ என்ன பார்த்துட்டு இருக்க? அவன் என் சகோதரன்.

வாழ்க்கையில் முதல் முறையாக

அப்படி ஒரு அழகை கண்டேன்

அவள் பெண்ணா? அல்லது நெருப்பா?

அவள் பெண்ணா? அல்லது நெருப்பா?

இது நெருப்பு தான்

ஜாக்கிரதை, இது நெருப்பு தான்

குளிர்ந்த நீரில் இறப்பதே மேல்

உன் இளமையை காப்பாற்றிக்கொள்

உன் இளமையை காப்பாற்றிக்கொள், பையா

இளமையின் நெருப்பை அனுபவிக்க முடியாதவன்

ஒரு ஆணா?

அவன் ஒரு ஆணா?

நான் இப்போது தான் வயதுக்கு வந்தேன் அது புதிதாகவும் வலி மிக்கதுமாக உள்ளது

என் சிந்தனைகள் எரிச்சலூட்டுகின்றன

உன் ஆசிர்வாதங்களை எண்ணிக்கொள், பையா

உன் ஆசிர்வாதங்களை எண்ணிக்கொள், பையா

நான் என் ஆசிர்வாதங்களை வீணடித்து விட்டேன்

நான் அனைத்தையும் இழந்து விட்டேன்

நான் அனைத்தையும் இழந்து விட்டேன்

தள்ளி போ, என் வேட்டைக்காரனே உன் தூண்டில் உணவு பழையதாகிவிட்டது

அந்த தூண்டிலை வேறு எங்கேயாவது கொண்டுபோ

உன் கூண்டில் சிக்கும் பறவை அல்ல நான்

எந்த பெண்ணும் சிக்க மாட்டாள்

நமக்குள் இருக்கும் தூரத்தை எப்படி கடந்து வருவேன்?

கடவுளுக்கு மட்டுமே தெரியும் என் மனதின் கஷ்டங்கள்

கடவுளுக்கு மட்டுமே தெரியும் என் மனதின் கஷ்டங்கள்

நீ என்னை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்தாய்

பார்த்தவுடன் காதலில் விழுந்து விட்டாய்

என் கைகளை பற்றிக்கொள்

என் கைகளை பற்றிக்கொள், பையா

உன் கைகளை பற்றியவுடன் அதை என்றும் விட மாட்டேன்

அதை ஞாபகம் வைத்துக்கொள், என் அழகே

அதை ஞாபகம் வைத்துக்கொள், என் அழகே

அதை ஞாபகம் வைத்துக்கொள், என் அழகே

நீ ஒரு மோசமான ஆள்! கீழே வா!

ஹேய், செல்லம்!

பயத்தில் என் உயிரே போயிடுச்சு.

சின்ன பிள்ளை தனமா இருக்காத, செல்லம்.

நான் பறக்கும்போது, நா ராஜாவை போல உணர்றேன்.

நீ தான் என் இதய ராணி!

-குர்திப் சிங்! -ஹாய், அமித்!

-அடி முட்டாளே! -எப்படி இருக்க?

நான் இன்னும் பிரம்மச்சாரி தான். நீ கல்யாணம் பண்ணிட்ட, இல்ல?

-எல்லாம் நலமா? -எல்லாம் நலமா இருக்கு.

உன் மனைவி கிட்ட அறிமுகப்படுத்த மாட்டியா?

-கண்டிப்பா. உள்ளே வா. -வா போகலாம்.

-வணக்கம். -வணக்கம்.

இவன் என் நண்பன், அமித்.

சிம்ரன், இவன் என் நெருங்கிய நண்பன்.

உன் வேலை முடிஞ்சது. இப்போ வெளியே போ.

-என்ன சொல்ற? -ஒரு நிமிஷத்துக்கு. வெளியே இரு.

-இவள் என் மனைவி! -தெரியும். நான் தனியா பேசனும். வெளியே போ.

-சிம்ரன், கவலைப்படாத! வெளியே இருக்கேன்! -போ வெளியே!

இந்த பூக்களை எடுத்துடு.

நீ என் வாழ்க்கையில வசந்த காலத்தை கொண்டு வர போற. எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும்.

அதன் பிறகு, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு சேவை செய்யுறேன்.

என்ன விஷயம்?

சொல்றேன்.

அதாவது, உன் கல்யாணத்துக்கு ஒருத்தி வந்திருந்தா.

அவள் இளஞ்சிவப்பு நிற உடை அணிஞ்சு இருந்தா.

அவள் ரொம்ப அழகா இருந்தா. ஆனா உன் அளவுக்கு அழகு இல்ல.

யாரு? சாந்தினியா?

சாந்தினி.

அமித், நீ என்ன பண்ண போற?

வாய மூடு!

-நான் உள்ளே வரேன்! -அங்கேயே இருடா, முட்டாள்.

அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்குறியா? அவள் விலாசத்தை கொடு. தயவுபண்ணி.

என் அம்மா இங்கே இருக்காங்க. இது தப்பான எண்ணத்தை உருவாக்குது!

நிறுத்து!

தயவுசெஞ்சு. எனக்காக இதை பண்ணு.

அன்னைக்கு அவளோட பிறந்த நாள்.

-யாருடையது? -வாய மூடு!

என் துரதிருஷ்டம்! ரெண்டு நாளில் அவளை தவர விட்டுட்டேன்!

அவள் விலாசத்தை தரேன்.

நல்லா இருப்ப. நீ நூறு மகன்களை பெற்றெடுப்பாய்.

நான் மகன்களை பெற்றெடுக்க ஆரம்பிக்கனும்னு சொல்றியா?

முட்டாள்! என்ன பாக்குற? நான் காதலில் இருக்கேன். தெரியலையா?

அவள் பிறந்த நாளுக்கு அவளுக்கு மலர்கள் அனுப்ப முடியாம போய்டுச்சு.

உன் பிறந்த நாளுக்கு உனக்கு வாழ்த்து சொல்ல முடியாம போய்டுச்சு.

அதுக்காக என்னை நானே தண்டிச்சிட்டு இருக்கேன்.

இதே தேதியில், எல்லா மாதமும், நான் உனக்கு பூக்கள் அனுப்புறேன்.

அழகான நறுமணம் மிக்க பூக்கள் நிறைய விஷயங்கள் சொல்லும்.

என்னை பற்றி என் பூக்களிடம் கேள்.

ஆனா இதில் "உங்கள், அமித்" அப்படின்னு கையெழுத்து போட முடியாது.

அமித், இங்கே வானிலை பிரமாதமா இருக்கு. நீ கொஞ்ச நாள் காஷ்மீரில் வந்து இரு.

சந்தோஷமா இருக்கலாம், சேகர்.

வரேன், சகோதரா.

எனக்கு ஒரு உதவி பண்ணு.

என்ன வேணாலும் கேளுங்க.

அமித் இன்னைக்கு வரான். அவனை விமான நிலையத்தில் இருந்து கூட்டிட்டு வரனும்.

நீங்க?

கடமை இருக்கு, அன்பே. கடமை.

பதன்கோட்டுக்கு விமானத்தை கொண்டு போகனும். சீக்கிரம் திரும்ப வந்துடுவேன்.

ஆனா நான் அமித்தை சந்திச்சதே இல்ல.

என் சகோதரன் லட்சத்தில் ஒருத்தன்.

உயரமா, அழகா இருப்பான்.

அவன் கண்களில் ஒரு பிரகாசம் இருக்கும். அவனுக்கு என்ன ஒரு அருமையான குரல்!

அவன் கூட்டத்தில் தனித்து தெரிவான்.

உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.

அவனை பார்த்த உடனே அவனை அடையாளம் கண்டுபிடிப்பாய்.

ஒரு நிமிஷம்.

நீங்க தான் திரு. அமித்தா?

நீங்க தான் ஷோபா.

-சேக... -என் சகோதரன்...

تبصرې

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left