ആദ്യത്തെ 200 വരികൾ.
இந்த நிகழ்ச்சி உங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் இது கற்பனையான படைப்பாகும். பெயர்கள், கதாபாத்திரங்கள், தொழில்கள்,
இடங்கள், நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை ஆசிரியரின் கற்பனையாகும் அல்லது அவை கற்பனையான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
வாழுகின்ற அல்லது இறந்த, உண்மையான நபர்கள் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது முற்றிலும் தற்செயலானது
இந்த நிகழ்ச்சியில் வரும் எந்தவொருஉரையாடல்களும், கதாபாத்திரங்களும் வாழுகின்ற அல்லது இறந்த எந்தவொரு தனிநபர், சாதி, சமூகம், இனம் அல்லது
மதம் ஆகியவற்றை புண்படுத்தவோ அல்லது எந்தவொரு நிறுவனம் அல்லது வாழுகின்ற அல்லது இறந்த நபரை இழிவு படுத்தவோ நோக்கம் கொண்டவை அல்ல
இந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் உள்ளடக்கம் அல்லது தெரிவிக்கப்படும் கருத்து எதனையும் அமேசான் இந்தியா ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதற்கு
பொறுப்பெடுத்துக்கொள்ளவோ இல்லை. இதனைப் பார்ப்பதை பார்வையாளர் முடிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
நிசார்.
இந்த தள திட்டம் சரிதானா?
இதை பில்டரிடம் நேரடியா வாங்கினேன்.
-விருந்தினர் பட்டியல் எப்படி கிடைச்சது? -அது சுலபமான வேலைதான்.
இது ஒரு பொது நிகழச்சி.
நீ விருந்தினர் பட்டியலை பார்த்தியா?
எல்லாம் முட்டாப்பசங்க.
அந்த நாய்களுக்கு என்ன அடி விழுந்ததுனு தெரியாது.
அந்த அயோக்கியர்களுக்கு அது தேவை.
உன் மாமா வேனை பற்றி கேட்கமாட்டாரா?
அது சர்வீஸுக்கு போயிருக்குன்னு சொல்லியிருக்கேன்.
இரண்டு, மூணு நாளில் வரும்னு சொல்லியிருக்கேன்.
இரண்டு, மூணு நாளில் என்ன நடக்கும்னு கடவுளுக்குதான் தெரியும்.
நாம சாயங்காலம் கிளம்புவோம்.
சரி, பாய்.
எல்லாரும் மொபைலை ஆஃப் பண்ணிடீங்களா?
ஆமா, பாய்.
சில மணி நேரமா அவங்க போன் ஆஃப் ஆகி இருக்கு.
கடைசியா தெரிஞ்ச இடம் பெண்டி பஜார்.
அவங்க தலைமறைவா ஆயிருப்பாங்க.
சிக்னலில் சிசிடிவி பதிவு ஏதாவது கிடைத்ததா?
எதுவும் இல்லை, சார்.
பெண்டி பஜாரில் அதிகமா கேமிராக்கள் இல்லை.
ஜேகே.
ஃபோர்ஸ் ஒன்னை கூப்பிட்டு பெண்டி பஜாருக்கு ஒரு படையை அனுப்ப சொல்லு.
சாதா உடையில், சீருடை வேணாம்.
துவான் கேட்டரர்ஸ்
கரீம்.
இது சிறப்பா இருக்கு அல்லவா?
-நல்லா இருக்கு. -பாய்!
சீருடையும் தயார்.
வேனில் ஏத்துவோமா?
-இப்போ வேணாம். போகும் முன் செஞ்சா போதும். -சரி.
இக்பால்.
உனக்கு என்ன பைத்தியமா?
வாசலில் போலீஸ்காரங்க நம்மை சோதிப்பாங்க.
இக்பால், அவங்க ஆட்டிறைச்சிதான் கொண்டு போனாங்க.
அவங்களை வெட்டி கொன்றதை நீ பார்க்கலையா?
ஆயுதம் இல்லாமல் நாம அங்கே போக முடியாது.
அதை மறைச்சு வைப்போம்.
கரீமிடம் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதே.
அது தெரிந்தா, என்னிடம் விடாமல் கேள்வி கேட்பான்.
அவன் கண்காணிக்கப்படுவது அவனுக்கு தெரியுமா?
சார், அதுக்கு வாய்ப்பு இருக்கு. திடீர்னு மறைஞ்சுட்டாங்க.
அது திட்டமிட்ட செயலா இருக்கலாம் அல்லது
அவனது அதிர்ஷ்டமா இருக்கலாம்.
ஸ்கூட்டர் வெடி குண்டை வச்சவன்
இப்போ என்ன செய்ய போறான்னு கடவுளுக்குதான் தெரியும்.
ஆனா அவனுக்கு அதிர்ஷ்டம் இருப்பது மட்டும் நமக்கு தெளிவா தெரியுது.
அடுத்த கட்டம் என்ன?
நமக்கு சீக்கிரமா தேடுவதற்கு வாரண்ட் வேணும்.
அவன் அறையை பரிசோதிச்சா, பயனுள்ளது ஏதாவது கிடைக்கும்.
-ஒன்றும் கிடைக்காமல் போனா? -சார், அப்போ ஒரே வழிதான் இருக்கு.
பெண்டி பஜாரை காலி செய்யணும்.
தி ஃபேமிலி மேன்
அத்தியாயம் 4 தேச பக்தர்கள்
சுச்சி / 08:45 நான் சேர்கிறேன்!
நீ உன் ஆங்கில வீட்டு பாடத்தை முடிச்சியா?
-அம்மா, ப்ளீஸ்! -"அம்மா, ப்ளீஸ்"ன்னா என்ன அர்த்தம்?
முடிச்சியா இல்லையா?
போய் உன் படுக்கையில் படு!
அம்மா?
-அப்பா எங்கே? -தெரியாது.
மறுபடியும் ஆஃபீஸ் போயிட்டாரா?
போயிருக்கலாம்.
அம்மா?
அப்பா இவளோ கடினமா உழைத்தால்,
நம்மிடம் நிறைய பணம் இருந்திருக்கணும்.
நாம பணக்காரர்களா இருக்கனும், இல்லையா?
முட்டாள், பேசாதே!
அதிகமா தூங்கினா, அறிவு குறைஞ்சிடும்.
உன் அறிவு ஏற்கனவே கம்மி.
அரவிந்த்/8:46 ஆஹா! ரொம்ப சந்தோஷம்!
இப்படியே போனா, உனக்கு அறிவே இல்லாம போயிடும்.
எழுந்திரு! எழுந்திரு!
அம்மா, ஏதாவது செய்யுங்க!
ப்ளீஸ், தூங்க விடுங்க. அவனை கொல்லப் போகிறேன்.
அவன் சொல்வது சரி.
அதிக தூக்கம் மூளை செல்களை குறைக்கும்.
-வா, எழுந்திரு. -அம்மா, இது ஞாயிற்றுக்கிழமை.
அதனால் என்ன? எழுந்திருச்சு உன் வீட்டு பாடத்தை செய்.
கவலை வேணாம், அதை செய்ய எனக்கு இரண்டு நிமிடங்கள் போதும்.
அரவிந்த்/8:46 - எங்காவது போய் கொண்டாடுவோம். கூப்பிட வர்றேன்.
இதில் எது ஸ்மைலி?
காட்டுங்க. நான் சொல்றேன்.
கவலை படாதே.
-நான் உங்க செய்தியை படிக்கமாட்டேன். -பரவாயில்லை.
சுச்சி / 8:46 சரி! நல்ல யோசனை தான்!!
எனக்கு சந்தேகங்கள் இருந்தது, ஆனா...
ப்ளீஸ், பாருங்க.
சார், எனக்கு முன்பே தெரியும்.
படுக்கைக்கு அடியில் பார்க்க சொல்லுங்க.
படுக்கைக்கு அடியில் பாருங்க!
சீக்கிரமா!
புத்தக அலமாரிக்கு மேலே பார்க்க சொல்லுங்க.
புத்தகங்களுக்கு பின்னால பாருங்க.
-சார், ஒரு லாப்டாப் கிடைத்தது! -அதை கொண்டு வாங்க.
என்கிட்ட காட்டு.
கடைசியில், நண்பா.
நான் ஒரு தீவிரவாதினு நினைக்கறியா?
நான் என்ன நினைக்கிறேன் என்பது எப்படி முக்கியமாகும்?
அது முக்கியம் தான்.
நான் மோசமான ஆளுனு நினைக்கிறியா?
நீ நல்லவனோ கெட்டவனோ
அதில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
நான் மோசமானவன்.
நிறைய மோசமான காரியங்கள் செய்திருக்கேன்.
வாழ்க்கை முழுக்க பாவம் செய்திருக்கேன்.
எனக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா,
எல்லாத்தையும் மாற்றியிருப்பேன்.
ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் முகாமுக்கு போனா என்ன நடக்கும் தெரியுமா?
அவங்க உன் பாஸ்போர்ட்டை கிழிச்சு தூர போடுவாங்க.
மீதி வாழ்க்கையை அங்கேயே கழிக்கணும் என்பதற்காக.
நான் காலிஃபா நாட்டைப் பற்றி நிறைய படிச்சிருக்கேன்.
பாலாறும், தேனாறும் ஓடும் நிலப்பரப்பு.
தங்கம் பூசப்பட்ட தெருக்கள்.
அல்லாவின் கட்டளை மட்டுமே கீழ்ப்படியப்படும்.
எந்த ஒரு கவலையும் இல்லை.
கடவுளில் பிரகாசம் மட்டுமே இருக்கும்.
அந்த அயோக்கியர்கள் என்னை பல வேலைகள் செய்ய வைத்தார்கள்.
அந்த விஷயங்களை பற்றி பேசுறதே வெட்கமா இருக்கு.
அது அல்லாவின் விருப்பம்னு சொன்னாங்க.
நீ...
நீ கொஞ்சம் ஓய்வெடுக்கணும்.
ஓய்வெடுத்தா உடம்பு குணமாகும்.
உடம்பு குணமாகி என்ன பயன்?
என் உணர்ச்சி, ஆன்மீக காயங்களை நான் என்ன செய்வேன்?
கடந்த அனுபவங்களை பற்றி சிந்திக்க கூடாது.
உனக்கு உடல் பலம் வரணும். எதை பற்றியும் கவலைப்படாதே.
உன்னை கடவுள் பார்த்துக்குவார்.
உன் கடவுள் என்னை ஏன் பார்த்துக்கணும்?
நான்...
-மன்னிக்கணும். -பரவாயில்லை.
உங்க கடவுள் பற்றி எந்த புகார்களும் எனக்கு இல்லை.
சொல்லப்போனா,
உன் கடவுளால் எனக்கு உதவ முடிஞ்சா,
ப்ளீஸ் அவரை உதவ சொல்லு.
ஏன்னா உண்மையிலேயே எனக்கு இப்போ உதவி தேவை.
நான் இப்பவும் கல்ஃபில் இருப்பதா என் அம்மா நினைக்கிறாங்க.
நான் செத்தாலும் கவலையில்லை!
என் அம்மாவை ஒருமுறை பார்க்கணும்.
நான் திரும்ப வரும் போது, வீட்டுப்பாடம் முடிஞ்சிருக்கணும்.
சீக்கிரம் வருவேன்னு இப்போதான் சொன்னேன்.
நான் இல்லாததால் என்ன வேனாலும் செய்யலாம்னு நினைக்காதே.
உன் வீட்டுபாடத்தை செய்.
வாக்குவாதம் வேணாம்.
வேலை செஞ்சுகிட்டு, வீட்டு வேலைகளை பார்த்துகிட்டு,
குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டு
எப்படிதான் மக்கள் அவங்களுக்கான நேரத்தை ஒதுக்குறாங்களோ!
ஆனா நீ ஏற்கனவே இதெல்லாம் செய்ற.
அப்போ, என்னை எங்கே கூட்டிட்டு போற? உன் புது வேலைக்கான விருந்து, இல்லையா?
நீதான் எனக்கு விருந்து தரணும். ஆனா அது அப்புறம்.
இப்போ, நாம கொண்டாட போறோம்.
இத்தாலியன் பிடிக்குமா அல்லது...
இத்தாலியன் ரொம்ப பிடிக்கும்.
அப்போ நாம சரியான இடத்துக்குதான் போறோம்.
நீ உன் வீட்டுப்பாடத்தை செய்வது போல் தெரியலை.
பேசாதே! உன் வேலையை பாரு.
என்ன நடக்குது? அதை திறக்க முடியுமா முடியாதா?
சார், இப்போதான் கிடைத்தது. ஒரு நிமிஷம் தாங்க.
சார், இங்கேயே நிப்பீங்களா?
ஏன்?
அதுக்கு கொஞ்சம் நேரமாகும், அதனால்தான்.
-சரி. -சரி.
இதுதான் எனக்கு பிடித்த இடம்.
ஆமா, நிச்சயமா.
ஹலோ.
மன்னிச்சிடு, உன்னை கூப்பிட முடியலை.
நான் உட்கார்ந்தபடியே தூங்கிட்டேன்.
பரவாயில்லை.
இந்த ஆவண வேலைகளில் திணறிக்கிட்டு இருக்கேன்.
டெல்லியிலிருந்து என் முதலாளிகள் வந்திருக்காங்க.
சரி.
-என்ன விஷயம் பேசணும்? -என்ன சொன்னேன்?
பேசணும்னு நீதான் செய்தி அனுப்பின. சொல்லு.
அது...
அது ஒண்ணுமில்ல, நாம அதை பத்தி அப்புறம் பேசுவோம்.
இப்போ பேசலாம். சும்மாதான் இருக்கேன்.
இல்ல. அவசரமில்லை. நான் வீட்டுக்கு வந்ததும் பேசுவோம்.
-இப்போ எங்கே இருக்க? -பக்கத்தில்தான்.
வெளியே கொஞ்சம் வேலையா வந்திருக்கேன்.
எனக்கும் கல்லூரி வேலையும் இருந்தது.
அதனால், எங்கயாவது உட்கார்ந்து அதை முடிக்கலாம்னு நினைச்சேன்.
அதிருக்கட்டும், கேளு, நான் உன்னை அப்புறம் கூப்பிடுறேன்.
நான் ஸ்ரீயிடம் ஏன் பொய் சொல்றேன்னு தெரியலை.
இப்போ என்ன பிரச்சினை?
சுச்சி பொய் சொல்றா.
சுச்சி!
எதையோ மறைக்கிறாள்.
நீ தேவையில்லாமல் பயப்படுற.
இல்ல, இல்ல. தல்படே. நான் சொல்வது உண்மை.
ஒரு பொய் சொல்பவனுக்கு பொய் எதுவென்று
சரியா தெரியும்.
No comments yet. Be the first to leave one.