Pari

Pari (परी)

Download Tamil Subtitle

Release info

Pari WEBRip Amazon ta-in
A Commentary by indespensible

Tags

webrip
web
BRip
Published on: 2019-10-23
Downloads: 34
Hearing Impaired: No

Tamil subtitle preview

The first 200 lines.

இப்படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை

மன்னிச்சிரு, அவனுக்கு அவ்வளவு தான் தெரியும்.

நீ கொல்கத்தால தனியா தான் வாழ்ந்துட்டு இருக்கியா?

ஆமா.

உனக்கு அது சலிப்பா இல்லையா?

இல்ல.

பின்ன ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுற?

உண்மையா, கல்யாணத்தப் பத்தி எனக்கு எந்த யோசனையும் இல்ல

உனக்கு தெரியுமா, என்னோட அப்பா அம்மா...

என்ன நம்பு, எனக்கு தெரியும்.

நீ என்கிட்ட எதாவது கேக்க விரும்புரியா?

நீ...

நீ செவிலியர் ஆக படிக்குற சரியா?

நான் என்னோட படிப்ப முடிச்சிட்டேன். நான் இப்ப பயிற்சி செய்றேன்.

நான் உன்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா?

கேளு.

இதுவர நீ யார்கூடயாச்சும் தொடர்பு வச்சிருக்கியா?

இல்ல

இல்லையா?

நீ என்கிட்ட சொல்லலாம். நான் எதும் நினைக்கமாட்டேன்.

இல்ல, இதுவர நான் யார்கூடயும் தொடர்பு வச்சிக்கிட்டது இல்ல.

எனக்கு காதலன் இருந்தான்

அவன் ஒரு மருத்துவர், ஆனா நாங்க பிரிஞ்சிட்டோம்.

உண்மையில, இப்ப நான் நினைக்கிறேன், எனக்கு அவன விட அவன் பைக்க தான் ரொம்ப பிடிக்கும்

உனக்கு தெரியுமா அது செமயா இருக்கும்.

நீ பைக் ஓட்டுவியா?

நான் இரண்டு தடவ முயற்சி பண்ணிருக்கேன்.

ஆனா நான் ரொம்ப பதட்டம் ஆகிட்டேன்.

உண்மையாவா? நீ பதட்டம் அடையுற விதமா?

நீ யோகா செய்ய முயற்சிக்கணும். அது உண்மையில உன்ன அமைதியா வைக்கும்.

யோகாவா?

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகளை அமைதியா வைக்க நாங்க யோகா சொல்லிக்கொடுப்போம்.

உங்களோட விரல மூக்குல வச்சி...

இப்ப நல்ல ஆழமா மூச்ச இழுத்து விடுங்க.

அது முயற்சி பண்ணு.

என்ன, இப்பவா?

உன்னோட மூக்குல விரல வச்சி...

நல்ல ஆழமா மூச்சை இழு.

மூச்சை வெளிய விடு.

இப்ப இன்னொரு பக்கம் மூச்ச இழு.

நான் இந்த விரல எடுக்கணுமா?

இப்ப இன்னொரு பக்கம் மூச்ச இழு.

நான் என்ன வீடு கட்ட வேண்டும்

நான் என்ன வீடு கட்ட வேண்டும்

-காற்றிலா? -நீ எதாவது உணருரியா?

என்னோட வீடு நல்லாவே இல்லனு

மக்கள் சொன்னாங்க.

மறுபடி, மழை பெய்ய ஆரம்பிச்சிட்டு.

மக்கள் சொல்லுவாங்க என்னோட வீடு

-பாபை, உனக்கு அவள பிடிச்சிருக்கா? -அது நல்லாவே இல்லன்னு

அவள் சரி தான்

அவ சரி தான்னா நீ என்ன சொல்லுற?

உனக்கு அவள பிடிச்சிருக்கா இல்லையா?

எனக்கு அவள பிடிச்சிருக்கு.

அப்ப, பாபை, நாம மேற்கொண்டு பேசலாமா?

இல்ல, நாம அவளோட பதிலுக்காக காத்திருப்போம்.

நீ அத பத்தி கவலைப்படாத.

நிச்சயமா அவங்க சரின்னு தான் சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியும்.

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

விளைவு என்னவா இருந்தாலும் சரி, இது தான் கடைசி முயற்சி, சரியா?

பாரு, இப்ப நீ ரொம்ப பண்ற.

உன் அம்மாட்ட கேளு,17 தடவ நிராகரிச்சதுக்கு அப்புறம் தான் நான் அவள பாத்தேன்.

இது எல்லாம் விதி தான்

-உங்களுக்கு ஒண்ணுமில்லயே? -ஒண்ணுமில்ல.

பாபை, வேண்டாம்! பாபை!

பாபை

அம்மா, காருக்கு உள்ளயே உக்காருங்க.

நாங்க பராக்பூர்ல இருந்து திரும்பிவந்துட்டு இருந்தோம்.

பயங்கரமா மழை பெஞ்சிட்டு இருந்துச்சி.

சட்டுன்னு, அவ எங்க கார் முன்னாடி குதிச்சிட்டா.

முன்னாடி குதிச்சிட்டாளா?

நீ என்ன சொல்லுற? தற்கொலையா?

ஆமா

விபத்து எங்க நடந்ததுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?

சில மணி நேரங்களுக்கு முன் ஒரு வயதான மூதாட்டிக்கு இங்க விபத்து நடந்துச்சு.

அவங்க புர்கா அணிஞ்சிருந்தாங்க.

யாராவது எதையாவது பாத்திங்களா?

இல்ல.

யாருக்காவது அவங்க யாருன்னு தெரியுமா?

அதாவது...

இங்க பக்கத்துல நிறைய இஸ்லாமியர்கள் வசிக்கிறாங்க.

புர்கா அணிஞ்சிருந்தது யாருன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?

இது நாய் மனுஷிக்கு சொந்தமானது.

யாரு?

அவங்க பேரு எனக்கு தெரியாது. ஆனா எல்லாரும் அவங்கள நாய் மனுஷின்னு தான் கூப்டுவாங்க.

அவ எங்க வசிக்கிறா?

இந்த தெரு முனையில், முன்னாடி ஒரு குளம் இருக்குறத நீங்க பாப்பிங்க.

அதுக்கு அடுத்து, ஒரு காடு இருக்கு.

அங்க அவளுக்கு ஒரு சின்ன குடிசை இருக்கு.

சார், நான் ஒன்னு சொல்லலாமா?

அந்த பொம்பள கொஞ்சம் வித்தியாசமானவ கொஞ்சம் பைத்தியமும் கூட.

அவ யாருகிட்டயும் பேசமாட்டா.

அவ சில தெரு நாய அவ வீட்டுக்கு தூக்கிட்டு போய்ட்டு அத வளர்ப்பாள்.

இதனால தான் எல்லாரும் அவள நாய் மனுஷின்னு கூப்டுறாங்க.

-சுத்தி யாராவது இருக்குறாங்களானு பாருங்க. -சரி, சார்.

இரவு நேரத்துல அவ தெருல உலா வருவா.

தனியா உக்காந்து சத்தமா அழுவா.

அவளோட குடிசைல இருந்து சில நேரம் அலறல் சத்தம் கேட்கும்.

அங்க யாராச்சும் இருக்குறாங்களா?

இல்ல சார். அங்க யாரும் இல்ல.

அம்மா...

அம்மா...

அம்மா...

பயப்படாதீங்க. நான் ஒரு காவல் அதிகாரி தான்.

உன்ன காப்பாத்த தான் நான் இங்க வந்துருக்கேன்.

சரி.

நான் இத அவிழ்த்து விடட்டுமா?

அம்மா வந்து அத அவிழ்த்து விடுவாங்க.

உன்னோட அம்மாக்கு ஒரு விபத்து ஆகிருச்சு.

நீ மருத்துவமனைக்கு போகணும்.

தூங்கு...

தூங்கு...

தூங்கு...

என் கண்மணியே...

தூங்கு...

மன்னிச்சிருங்க.

அவங்க எங்க கார் முன்னாடி சட்டுன்னு வந்துட்டாங்க.

-அவங்கள மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்தோம் -இங்க கையெழுத்து போடு!

கையெழுத்து.

உங்க வீட்டுல வேறுயாராவது இருக்குறாங்களா?

யாராவது சொந்தகாரங்க...

பிணவறையில் இருந்து அவங்களோட உடம்ப நாளைக்கு வாங்கிக்கோங்க.

மருத்துவமனையில இருந்து வெளிய போறதுக்கு 300 ரூபா கட்டுங்க.

-இப்பயே கட்டணும். -நான் அத கொடுக்குறேன்.

இந்தா இத வாங்கிக்கோ

அவங்க என் அம்மாவ என்ன செஞ்சாங்க?

ஒன்னுமில்ல.

அவங்க விசாரிக்க விரும்புறாங்க.

நீ எப்படி பிணவறைக்கு போவ?

நான் உன்ன கூட்டிட்டு போகணுமா?

நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன்.

சரி.

நீ ஏன் அங்க போகணும்னு சொல்லுற?

அந்த பொண்ணுக்கு யாருமே இல்ல. யாராவது அவளுக்கு துணையா இருக்கணும்.

நாம ஏன் அக்கறை காட்டணும்?

நீ ஏன் தேவையில்லாம இதுல தலையிடுற?

தேவையில்லாமயா?

அம்மா, நான் தான் முன்னாடி உக்காந்திருந்தேன்.

அது தற்கொலை இல்லன்னு எனக்கு தெரியும்.

-என்ன ஆச்சு? -நீங்க காவல்நிலையத்துக்கு போகணும்.

எந்த பிரச்சனையும் இல்ல.

கிராம மக்கள் சொன்னத வச்சி,

காவலர்கள் இது தற்கொலைன்னு நினைக்கிறாங்க.

ஆனா அந்த பொண்ணு? அவளால எதாவது பிரச்சனை வருமா?

இல்ல, மேடம்! அவளுக்கு அவளோட அப்பா யாருன்னே தெரியாது.

உங்களுக்கு தெரியாதா?

அவளோட அம்மா அவள ஒரு மிருகம் மாதிரி கட்டி போட்டுருந்தாங்க.

இந்த காலத்துல எப்படில்லாம் இருக்குறாங்கன்னு பாரு.

எல்லாரும் கொள்ளையர்களுக்கு பயந்துட்டு உண்மையான தங்கத்த போட்டுக்குறது இல்ல.

என்ன ஆச்சு? நீ எதையாவது கண்டுபிடிச்சியா?

நீ எங்க போற? மருத்துவர் இங்க சீக்கிரம் வந்துருவாரு.

-ஹலோ! -சார்...

இங்க ஒரு பிணம் இருக்கு.

ஒரு இஸ்லாமிய பெண். அவ விபத்துல இறந்துருக்கா.

-நான் இறுதிசடங்குக்கு வரணும்னு சொல்றியா? -இல்ல, அவ கைல அந்த குறி இருக்குது.

-குறியா? -ஆமா.

அலாத் சக்ராவின் குறி.

இப்ப நீயே எடுத்து சாப்பிட வேண்டிய நேரம் வந்துட்டு. புரிஞ்சதா?

போதும்.

வாய திற. இங்க.

அத ஒழுங்கா மென்னு சாப்பிடு.

பங்களாதேஷ் ட்ரிபியூனில் ஒரு கட்டுரை உள்ளது.

-நீங்க அத வாசிச்சிருக்கீங்களா? -திரு. ஹுசைன்னோட குறிப்புகள

நீ எழுதி வச்சியா?

பங்களாதேஷ் ட்ரிபியூன்!

ஆமா, என்கிட்ட இருக்குது, சார்.

சட்ஹிரா பக்கத்துல,

அவங்க சில குழந்தைகளோட மண்டையோடுகளை கண்டுபிடிச்சிருக்காங்க.

இது ஒன்னும் புதுசு இல்ல. இது ஏற்கனவே நடந்த ஒன்னு தான்.

விடுதலைப் போரில் இருந்து வந்த உடல்கள்...

இன்னும் எவ்வளவு இருக்குன்னு கடவுளுக்கு தான் தெரியும்.

அறிக்கையின் படி அது விடுதலை போரில் இருந்து வரவில்லை,

ஆனால் சபிக்கப்பட்ட தருணத்தில் இருந்து வந்தது.

அப்படியா?

சார், நான் உங்கட்ட ஒன்னு கேக்கட்டும்மா?

நீங்க இது வர ஆவிய பாத்திருக்கிங்களா?

-இல்ல. -தாத்தா, ஆவின்னா என்ன?

ஆவின்னா என்ன?

அவனுக்கு அப்படின்னா என்னனு சொல்லு.

உன்னோட அந்த குறும்புத்தனமான எண்ணங்கள் போல...

எப்படின்னா, நான் பள்ளிக்கு செல்லமாட்டேன், நான் சீக்கிரமா தூங்கமாட்டேன்.

நீங்க வேலைசெய்றப்ப நான் தொந்தரவு பண்ணுவேன்.

தேவையில்லாதத பத்தி நான் பேசுவேன்.

இதெல்லாம் தான் ஆவியோட வேலைகள்.

அத தான் நாம சைத்தான்னு சொல்வோம்.

-அது ரொம்ப ஆபத்தானது. இதை சாப்பிடு. -இஃப்ரித் தை விட ஆபத்தானதா?

நீயே எடுத்து சாப்பிடு.

ஹலோ.

சரி, நான் அங்க இருப்பேன்.

சட்ஹிரா பக்கத்துல அவங்க சில குழந்தைகளோட மண்டை ஓடுகள கண்டுபிடிச்சிருக்குறாங்க.

அறிக்கையின் படி அது சபிக்கப்பட்ட தருணத்தில் இருந்து வந்தவை.

சட்ஹிரா பங்களாதேஷ், 1995

அவ்வளவுதான். கிட்டத்தட்ட முடிஞ்சிட்டு.

வேண்டாம்!

பயப்படாதே சரியா? இது இன்னும் கொஞ்சம் நேரம் தான்.

வலிய பொறுத்துக்கோ. சீக்கிரமாவே முடிஞ்சிரும்.

ஃபாரிஸ், இன்னும் எத்தனை பேர் இருக்குறாங்க?

பன்னிரெண்டு

அமைதியா இரு, சரி ஆகிரும்.

நீ எங்க வசிக்கிற?

Comments

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left