Release info

Golmaal Again WEBRip Amazon ta-in
A Commentary by indespensible

Tags

webrip
web
BRip
Published on: 2019-11-08
Downloads: 26
Hearing Impaired: No

Tamil subtitle preview

The first 200 lines.

இப்படத்தில் வரும் பெயர்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே

இப்படத்தின் தயாரிப்பாளரே பணியாளர்களோ மந்திரதந்திரங்களை ஊக்குவிப்பதில்லை

கோல்மால்

ஹலோ, ஹாய், நமஸ்தே, வணக்கங்கள்!

நாங்கள் கொண்டாட திரும்பி வந்தோம்

உங்கள் சலிப்பான நிமிடங்களை நாங்கள் வண்ணமயமாக்குவோம்

கொண்டாட்டங்கள் முடிவதில்லை

எங்கள் நட்பு தான் ஊரில் பேச்சு

நீங்களும் கூட கூட்டத்தில் சேரலாம்

வெட்கத்தை நிறுத்தி கத்தி கூச்சல் போடுங்கள்

கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

எல்லாமே ஆகப் போகுது கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

எல்லாமே ஆகப் போகுது கோ, கோ, கோல்மால்

உங்கள் சோகங்களை ஏமாற்றி முழு மனதாய் சிரித்திடுங்கள்

வருத்தத்தின் மணியை அடிப்பதை நிறுத்துங்கள்

உங்கள் இதயம் உரக்கத் துடிக்கட்டும்

சத்தமாக விசிலடியுங்கள்

தினமும் கொண்டாடுங்கள்

உங்கள் ஆர்வத்தை காண்பியுங்கள்

கத்தி கூச்சல் போடுங்கள்

கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

எல்லாமே ஆகப் போகுது கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

கோ, கோ, கோல்மால்

எல்லாமே ஆகப் போகுது கோ, கோ, கோல்மால்

ஊட்டி, தமிழ்நாடு

உங்கள் கதை இன்னும் முடியவில்லை

மக்கள் சொல்வது சரி.

நான் இங்கே வேலை செய்யக் கூடாது.

இது விசித்திரமான ஒரு இடம்.

மிஸ். அன்னா.

எல்லா புத்தகங்களையும் அவற்றின் இடங்களில் வைத்துவிட்டேன்.

-நாம் போகலாமா? -ஹ்ம்ம்.

பூட்டை இங்கே வைத்துவிடுங்கள், நான் சிறிது நேரத்திற்கு பின் போகிறேன்.

மேடம், தாமதமாகிவிட்டது மிகவும் இருட்டியும் விட்டது.

கவலைப்படவேண்டாம் பீட்டர். நான் சமாளித்துக் கொள்வேன்.

-வைத்து விடுங்கள். -சரி, மேடம்.

என்ன உங்கள் பிரச்சினை?

உங்களுக்கு என்னை பார்க்க முடிகிறதா?

நான் ராம் கிருஷ்ண ஐயர்.

பிறந்தது 1956. இறந்தது 2016.

உங்களால் எல்லா விதமான ஆவிகளையும் பார்க்க முடியுமா?

நான் சிறுமியாக இருக்கையில், கடவுளிடம் எப்போதும் ஒரு வரம் தர வேண்டினேன்.

இது எனக்கு கடவுளின் வரமாக அமைந்தது.

ஒருவேளை அதனால் தான்.

நான் இறந்ததும், அலைந்து திரிந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.

-தயவு செய்து எனக்கு உதவ முடியுமா? -சரி.

நாங்கள் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால் என் மகள், பிரேமா, அவள் ஒரு முஸ்லிம் பையனை விரும்பினாள்.

நான் அதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? அதனால் நான் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை.

பல வருடங்களுக்கு, நான் அவளிடம் பேசவேயில்லை.

ஆனால் அவளது ஒவ்வொரு பிறந்தநாளன்றும் நான் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

ஏனென்றால் நான் அவளது பிரிவினால் மிகவும் வருந்தினேன்.

ஆனால் அந்த கடிதங்களை எல்லாம் அவளுக்கு அனுப்ப எனக்கு தைரியம் வரவில்லை.

அதற்கு முன், நான் இறந்து விட்டேன்.

நீங்கள் அந்த கடிதங்களை அவளிடம் சேர்க்க வேண்டும்.

நான் என்னுடைய மகளை ஏற்றுக் கொண்டேன் என்று அவளுக்கு தெரியவேண்டும்.

நான் அவளை நேசிக்கிறேன்.

இது எப்படி சாத்தியம்? நான் அவர்களை எப்படி பார்க்க முடியும்?

நான் எப்படி அவர்களிடம் பேச முடியும்?

நிறைய கேள்விகள்.

இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால்,

கடவுளின் விருப்பமெனில், எந்த தர்க்கமும் இல்லை, எல்லாவற்றிலும் மாயாஜாலம் மட்டுமே.

ஆனாலும், சில ஆவிகள் உள்ளன.

அவர்களின் ஆசைகள் நிறைவேறாமல் இருக்கும்.

ஒருவேளை அதற்குத் தான் கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்

ஒரு ஊடகமாக செயல்பட, அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் ஒரு பாதை ஆக.

அதன்மூலம் அவர்களுடைய ஆன்மாக்கள் ரட்சிக்கப்படும்.

நான் சிறுவயது முதலே அது போன்ற நிறைய ஆன்மாக்களுக்கு உதவியிருக்கிறேன்.

ஆனால் ஒரு ஆவி இருந்தது

அதன் கதை என்னுடைய வாழ்க்கைக்கு சம்மந்தம் இருந்தது.

அது கேட்பதற்கு உகந்த ஒரு கதை.

அந்த கதை தொடங்குவது ஜம்னாதாஸ் அனாதை இல்லத்தில்.

ஜம்னாதாஸ் அவருடைய காலத்தில் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர்.

அவர் சமூக பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்

அதன் காரணமாக ஒரு நாள் அவர் தன்னுடைய தொழிலை முழுவதுமாக நிறுத்திவிட்டு

அனாதைகளுக்காக ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.

ஜம்னாதாஸ் அனாதை ஆசிரமம்!

அந்த ஆசிரமத்தின் முதல் குழந்தை கோபால்.

அவன் மிகுந்த கோபக்காரனும் கொஞ்சம் முட்டாளாகவும் இருந்தான்.

இவன் மாதவ்.

இவன் எல்லாருடைய விஷயத்திலும் மூக்கை நுழைப்பதில் சந்தோஷம் கொள்பவன்.

கோபால் விரல்களை உடைப்பதில் எவ்வளவு சந்தோஷம் கொள்வானோ அந்த அளவு

சீ.

இரவில், கோபால் இருட்டைப் பார்த்து பயப்படுவான்.

பயப்படாதே, நான் லக்ஷ்மன்.

அதனால் கோபால் லக்ஷ்மனுடன் ஒட்டிக்கொண்டான்.

லக்ஷ்மன்.

-நானா? -நீயில்லை, அவன்

இங்கே இன்னொரு லக்ஷ்மன் இருந்தான்.

இது லக்கி.

பாவம் இந்த குழந்தையால் பேச முடியாது.

அங்கிருந்த எல்லா அனாதை குழந்தைகளிலும்,

ஜம்னாதாசிற்கு மிகவும் பிடித்தமானவன் பப்பி.

மறதி மிக்கவன்.

என்ன ஆயிற்று, பப்பி?

பப்பி? வெட்கம் கெட்டவனே!

பிறகு, ஒரு நாள்...

இந்த குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கிறது.

அந்த பெண் குழந்தை சிரித்தது அது எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை கொண்டு வந்தது.

அந்த குழந்தைகள் அவளுக்கு குஷி என்று பெயரிட்டனர்.

-குஷி. -ஆமாம்! குஷி.

சாதரணமாக, மனிதர்கள் அன்பையும் அக்கறையையும் எதிர்பார்ப்பார்கள்

அவர்களுடைய குடும்பத்தினரிடமும் உறவினரிடமும்.

ஆனால் நீங்கள் இங்கே பார்த்தால்,

இந்த குழந்தைகளிடையே எவ்வித உறவுமுறையும் இல்லை

அன்பைத் தவிர.

அது நான். அன்னா மாத்யூ.

இது என்னுடைய தந்தையின் நூலகம்.

அனாதை ஆசிரமத்திலிருந்து அந்த பிள்ளைகள் அடிக்கடி இங்கே வருவார்கள்.

என்னுடைய சிறுவயது முதலே, என்னால் ஆவிகளை பார்க்கமுடியும்.

அது இந்த ஐந்து பேருக்கும் தெரியும்.

சொல்லு அன்னா, இந்த முறை யார்?

ஸ்டெல்லா ஆண்டி.

-அவர் மூன்று நாட்களுக்கு முன் இறந்தார். -என்ன?

-அவர் உங்கள் அருகில் தான் இருக்கிறார். -லக்ஷ்மன்!

பயப்படாதே, கோபு.

பேய்கள், ஆவிகள், ஆன்மாக்கள். கோபாலுக்கு அவை எல்லாவற்றையும் பயம்.

மாதவ் அதனை எப்போதும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வான்.

கோபால், நீ தான் அந்த பந்தை அடித்தாய். போய் எடுத்து வா.

அனாதை ஆசிரமத்தின் அருகில்

ஜம்னாதாசின் நெருங்கிய நண்பர் கர்னல். சௌஹானின் பங்களா.

அது பல வருடங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

மாதவும், லக்கியும், லக்ஷ்மனும் எப்போதுமே கோபாலுடன் சேரவே மாட்டார்கள்.

கோபால், உன்னிடம் பல முறை நான் சொல்லியிருக்கிறேன்.

நீ எப்போதுமே யாருடனாவது சண்டை போடுகிறாய்.

போ, ஆசிரமத்தின் வாயிலுக்கு வெளியே போய் நில்.

-மாதவ் தான் தொடங்கினான்... -போ!

கோபு, நானும் உன்னுடன் வருகிறேன்.

ஜம்னாதாஸ் பிள்ளைகளை அதிகமாக திட்டிவிட்டார்.

லக்ஷ்மன், நாம் இனிமேல் இங்கே இருக்கவேண்டாம்.

கோபாலும் லக்ஷ்மனும் ஆசிரமத்தை விட்டுச் செல்ல முடிவு செய்தனர்.

மாதவும், லக்கியும், லக்ஷ்மனும் இல்லத்தை விட்டுச் சென்று விட்டனர்.

ஜம்னாதாஸ் குழந்தைகளின் பிரிவினால் மிகவும் வருந்தினார்.

ஆனால் அந்த ஐந்து பேரின் பிரிவினால் மிகவும் வருந்திய ஒரு நபர் குஷி.

இறுதியாக, அந்த நாளும் வந்தது, குஷியை யாரோ தத்தெடுத்துக் கொண்டனர்.

ஆனால் குஷி எப்போதுமே வருந்தியது ஒரு விஷயத்தைப் பற்றித் தான்.

அவர்கள் எங்கே இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

ஹேய், பப்லி, நாங்கள் இந்த இடத்தை பறிமுதல் செய்து விட்டோம்.

-உன்னால் முடியாது... -வாயை மூடு! முட்டாளே!

நான் இந்த இடத்தை காலி செய்வேன், பிச்சைக்காரர்களே.

அப்படியா. நீ இந்த இடத்தை காலி செய்வாயா?

இல்லை, கயவனே. இந்த இ-ட-ம், இடம்

என்னுடைய நண்பன், கோபால் காலி செய்வான்.

ஓ! அப்படியானால் இவனா கோபால்.

இந்த ஒல்லியான பையனால் என்ன செய்ய முடியும்?

பத்துக்கு முன்னால் ஒன்பது வருவதைப் போல்,

தலைவனுக்கு முன்னாள் தொண்டன் வருவான்.

புரிந்ததா. பன்றியின் மகன்களே. அவன் வருகிறான்.

நூறு சதவிகிதம், அவன் உங்களை தூக்கில் கட்டித் தொங்கவிடுவான்.

இருநூறு சதவிகிதம், அவன் உங்களை சுடுகாட்டிற்கு அனுப்பிவைப்பான்.

முன்னூறு சதவிகிதம், உங்களை துடைத்து எரிந்துவிடுவான்.

என்ன? மூச்சு விட சிரமமாக உள்ளதா?

-உங்களுக்கா? -இருக்கலாம், ஆனால் நீ ஏன் திணறுகிறாய்?

அவமானம்! அவமானம்!

கோபு, அவர்களை அடி, அவர்களை நொறுக்கு, அவர்களை முடித்துவிடு!

கோபு!

கோபு!

அவன் ராத்திரியில் பயத்தினால் உறங்குவதேயில்லை

அதனால் பகலில் உறங்கி விடுவான்.

கோபு, எழுந்திரு, கோபு.

உன்னுடைய இந்த தூங்கும் பழக்கம் தொழிலுக்கு கேடு விளைவிக்கும்.

அவன் தான் என்னை அவமானப்படுத்தினான்.

கோபு, இது தொடர்ந்தால்,

சமூகத்தில் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள். இது...

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

இது ரேடியோ மிர்ச்சியில் இருந்து ராஜேஷ்

இப்போது கேளுங்கள் தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல்.

சுவாமி, உன்னை இந்த இடத்தை காலி செய்வதற்கு அனுப்பினானா, ஹா?

இந்த இடத்தில் எங்களிடம் மோத யாரும் துணியமாட்டார்கள்.

ஹேய், போடா.

-விரல் வெறியன், விரல் வெறியன்... -ஹேய், போடா!

ஹேய்...

விரல்... மருத்துவமனை.

ஹேய்! வா.

நீ அவர்களை கன்னாபின்னாவென்று அடித்துவிட்டாய், தம்பி.

கோபால்.

இந்த இடத்தை காலி செய்ததற்காக உன்னுடைய பணம்.

சந்தோஷமாக இரு.

இதை ஜம்னாதாஸ் அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிடுங்கள்.

சாம் மாமா சரியாக சொன்னார். ஈகை வீட்டுவேலையிலிருந்து தொடங்குகிறது.

கோபால், உனக்கு பெரிய மனதும் நிறைய துணிவும் இருக்கிறது.

நான் நேரே ஊட்டிக்கு சென்று இந்த பணத்தை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகிறேன்.

எப்படியும், சீக்கிரம் இருட்டப் போகிறது.

இ-இருட்டா?

குன்னூரில் இருள் படரும்போது,

தபால்காரர் கூட தபால் கொடுக்க வெளியே போகமாட்டார்.

எங்கே எனது ஹீ-மேன்?

என்னுடைய பொறுமை தீர்ந்து கொண்டிருக்கிறது, ஸ்வீட்டி.

அர்ஜெண்டாக வா.

இல்லை, அர்ஜென்டினாவிற்கு இல்லை. வேகமாக.

எனக்காக.

நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்

என் குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் இந்த வீட்டைக் கட்ட.

வா, ஸ்வீட்டி. நாம் ஆடலாம்.

கால்பந்தாட்டம் இல்லை. கொண்டாட்டம்!

Comments

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left