The first 199 lines.
எமிலி டிக்கின்சன், மாசசூசெட்ஸ், ஆம்ஹர்ஸ்ட்-ல் 1830-ல் பிறந்தாள்.
அவள் தனது வாழ்நாள் முழுவதும் அவளது தந்தையின் வீட்டில் வாழ்ந்தாள்.
அவளது வாழ்வின் இறுதி காலங்களில், அவள் தன் அறையை விட்டு அரிதாக வெளியேறினாள்.
சில அநாமதேய கவிதைகள் தவிர, அவளது கவிதைகள் பிரசுரிக்கப்படவே இல்லை.
அவள் இறந்த போது, அவளுடைய கவிதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதுவரை எழுதப்பட்டவைகளிலேயே, சில விசித்திரமான, மிக சுவாரஸ்யமான கவிதைகள்.
கிட்டத்தட்ட 2,000 கவிதைகள், ஒரு பணிப்பெண்ணின் பெட்டிக்குள் மறைவாக.
ம்...
- எமிலி! -
- எமிலி, எழுந்திரு! -
ஐயோ!
நீ தண்ணி எடுத்து வரப் போகணும்.
இப்போ காலைல நாலு மணி, லவினியா.
நான் எழுதிட்டிருக்கேன்.
அம்மா உன்னை செய்ய சொல்றாங்க. நான் நேற்று செஞ்சேன்.
ஆஸ்டின் ஏன் அதை செய்றதில்லை?
ஆஸ்டின் ஒரு பையன்.
பைத்தியக்காரத்தனம்.
டிக்கின்சன்
ஏனெனில் என்னால் நிற்க முடியவில்லை
ஏனெனில், என்னால் மரணத்திற்கு நிற்க முடியவில்லை…
நிறுத்து…
ஒரு மணி நேரத்திற்கு முன்னால அந்த தண்ணீர் தேவைப்பட்டுச்சு.
எங்க போயிருந்த?
ஓ, எமிலி, இந்த வாளிகள் பாதி காலியாக இருக்கு.
அதை சிந்த விட்டு வந்திருக்க.
நீ ஒன்றுக்கு உதவாத பொண்ணு.
நாம வேலைக்காரிய வச்சிக்கலாமா?
நான் செத்தப் பிறகு.
நம்மகிட்ட ஆறு குதிரைங்க இருக்கும்மா. நாம வேலைக்காரிய வச்சிக்கலாம்.
இந்தா, வின்னி. ஒரு பூ.
எனக்கா?
உங்க அப்பா என்னை கல்யாணம் செய்தப்போ,
மொத்த ஹாம்ப்ஷர் கவுண்டியில அவருக்கு சிறந்த இல்லத்தரசி கிடைச்சிருக்கிறதா சொன்னேன்.
இல்லை, மொத்த புதிய இங்கிலாந்தில.
என் கை தேய்ந்து போனாலும் பரவாயில்லை, ஒரு வேலைக்காரியை வச்சிக்க மாட்டேன்.
உங்களையும் என்னைப் போலவே வளர்த்திட்டு வரேன்.
ஆனால் உண்மையில…
நீ ஒரு நாள் ஒரு நல்ல இல்லத்தரசியா மாறிடுவ எமிலி டிக்கின்சன்.
இப்போ, நீ போய் டிரஸ் பண்ணிக்கோ.
உன்னை பார்க்க இன்னொரு பையன் வரான்.
பையனா?
அம்மா, வேண்டாம்!
இந்த பையன் உன் புருஷனா ஆகலாம்.
ஆமா, ரொம்ப காதல் ரசமா இருக்கு.
போன முறை செஞ்சத போல, எதுவும் பிரச்சினை பண்ணாத.
நான் ஒரு காணிக்கை கொடுத்தேன்.
நீ அந்த பாவப்பட்ட பையன் மடியில ஒரு எலியை போட்ட.
ஆமா.
ஒரு பூனைய போல.
நீ ஒரு பூனை இல்ல, எமிலி.
இல்லை.
கொடுமை, நான் ஒரு பொண்ணு.
அந்த கேக் வர்ற மாப்பிள்ளைக்கு.
எனக்கு ஏன் மாப்பிள்ளைங்க வர மாட்டேங்கிறாங்க?
ஏன்னா, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதில்ல. நீ நல்லா வீட்டு வேலை பாக்குற.
ஆக, நான் தண்ணீர் பிடிக்கிறதுக்காக, ஒரு வயசான வேலைக்காரியா சாகணுமா?
வாழ்க்கை நியாயமா இருக்காது, லவினியா.
ஹலோ.
எமிலி, அப்படி பண்ணாத.
ஹே, எமிலி.
கடவுளே.
ஜார்ஜ்.
ஹே.
உனக்கு என் மகளோட ஏற்கனவே அறிமுகம் இருக்கா?
அம்மா, இது ஜார்ஜ். ஆஸ்டினுடன் இலக்கிய சங்கத்தில இருக்கிறான்.
நாங்க எப்போதும் சேர்ந்து சுத்துவோம்.
- சரி, நீ ஒரு நல்ல மனைவியா இருப்பேன்னு... -
...ஜார்ஜ்கிட்ட சொல்லிட்டிருந்தேன்.
உன் கடமைகளில் நீ எப்படி சிக்கனமா, நேர்த்தியா இருப்பேன்னு.
ஆமா, நான் அருமையான மணப்பெண்.
ஒரு பொண்ணு மாதிரி உட்காரு.
ஜார்ஜ், நாம ஒரு நிமிஷம் வெளியில போய் பேசலாமா?
- நிச்சயமா. - அருமை.
அம்மா, முற்றத்தில இருக்கோம். வேவு பார்க்க முயலாதீங்க.
ம். சரி.
நான் உன்னை கல்யாணம் பண்ண போறதில்லைன்னு உனக்கு தெரியுமே?
முடியாதுன்னு எப்பவும் சொல்லாதே, எமிலி.
உன் கவிதையில எழுதின மாதிரி, "நான் சாத்தியத்தில் வாழ்கிறேன்."
அருமை.
என் கவிதையை பற்றி யாரும் பேசுனா எனக்கு பிடிச்சிருக்கு.
நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட?
உனக்கு புரியல. நான் யாரையும் பண்ணிக்கப் போறதில்ல.
உன் அம்மா அப்படி சொல்லலியே?
எனக்கு இந்த உலகத்தில ஒரு நோக்கம் இருக்கு.
அதாவது ஒரு சிறந்த எழுத்தாளர் ஆகணும்.
ஒரு புருஷன் அதுக்கு தடையா இருப்பான்.
நான் அப்படி இருக்க மாட்டேன்.
இப்ப சொல்லுவ.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவ.
நான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன்.
- ஐயோ பாவம். - வேற யாரையும் காதலிக்கிறியா?
ஆம், உண்மையில.
யார் அவன்? அவனை கொன்னுடுறேன்.
நீ அவனை கொல்ல முடியாது.
அவன் மரணம்.
என்னது?
நான் மரணத்தை காதலிக்கிறேன்.
அவன் ஒவ்வொரு இரவும் என்னை ஒரு வண்டியில கூட்டிப் போவான்.
அப்படியொரு பண்பானவன்.
ரொம்பவும் கவர்ச்சியானவன்.
நீ ஒரு விசித்திர பிறவிதான்.
உன்கிட்ட ஏன் மயங்கி நிக்கிறேன்னு தெரியல.
நான் உனக்காக எதையும் செய்வேன்.
நல்லது, நீ எனக்காக ஒன்னு செய்ய முடியும்.
என்னன்னு சொல்லு.
நீ அந்த இலக்கிய பத்திரிகையில ஆசிரியரா இருக்க தானே?
ஆமா, துணை ஆசிரியர்.
ஆமா, ஆசிரியர் தான்.
நீ இதை பிரசுரிக்கணும்.
அருமை.
கடைசியா உன் கவிதைகளை பிரசுரிக்க என்னை அனுமதிக்க போறியா?
அது இன்னும் முடிஞ்சிருச்சான்னு தெரியல, ஆனா, ஆமா, நான்…
சரியான நேரத்தில கொடுத்த. புதிய பத்திரிகையில் கொஞ்சம் இடம் இருக்கு.
- நிஜமாவா? - இதை உள்ள சொருகிடுறேன்.
அது நாளைக்கு பிரசுரத்திற்கு போகுது.
- நாளைக்கா? உண்மையாகவா? - நாளைக்கு.
எல்லாருக்கும் இந்த எமிலி டிக்கின்சன் பெயர் தெரிய வரும்.
சரி, ஆனால் பொறு.
என்ன?
நீ என் பெயரை போடக் கூடாது.
ஏன் கூடாது?
ஏன்னா, எங்க அப்பா பெண்கள் பிரசுரிப்பதை ஏற்றுகொள்ள மாட்டாரு.
என்னது இது?
இது பைத்தியக்காரத்தனம்.
நீ ஒரு மேதாவி, எமிலி. அவர் இதை கண்டிப்பா ஏற்றுக் கொள்ளணும்.
என் பெயர் முதலெழுத்துக்கள் அல்லது அனாமதேயம் அல்லது எதாவது போட முடியுமா?
முடியவே முடியாது.
உனக்கு அந்த பெருமை கிடைக்கணும்.
நீ உன் அப்பாகிட்ட தைரியமா பேசணும்.
சரி.
அப்படியே பண்ணு.
என் பெயர் எல்லாத்தையும் போட்டு பிரசுரம் பண்ணு.
நன்றி, ஜார்ஜ்.
உனக்காக, மிஸ். டிக்கின்சன்.
அது ஒரு கொடுமை.
ஆமா, எமிலி.
நீ மறுபடியும் நாசம் பண்ணிட்ட.
அவ நாசம் பண்ணல. அவங்க முத்தமிடுறதை நான் பார்த்தேன்.
முத்தமா?
கடவுளே, உனக்கு என்ன ஆச்சு?
நீ தான் இந்த பசங்கள என் மேல தூக்கி போடுற.
நான் தூக்கி போடல.
ஆமா, பண்ற. ரொம்ப அவமானமா இருக்கு.
மனைவியை இழந்தவன், நொண்டின்னு வர்ற எல்லாரிடமும் என்னை தூக்கி கொடுத்திடுவ.
மொத்த ஆம்ஹர்ஸ்ட் நகருக்கு தெரியும் நீ என்னை விரட்டி விட நினைக்கிறது.
இங்க என்ன நடக்குது?
அம்மா என்னைத் திரும்பவும் கைவிட முயற்சி பண்றாங்க.
எனக்கு 18 வயசில் கல்யாணம் ஆச்சு, எமிலி. உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு.
அப்படியே வெளியில போகணும், அதானே?
ஆமா. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா அதுதான் நடக்கும்.
என் கல்யாணம் பற்றி ஏன் யாரும் கவலைப் படுறதில்லை?
எனக்குத் தெரிஞ்சு எமிலி யாரையும் கல்யாணம் செய்துக்க தேவையில்ல.
- நன்றி, அப்பா. - ம்.
கடவுளே, இங்க ஒருத்தராவது என்ன துரத்த முயற்சிக்காம இருக்காங்க.
ஆக, உன் வாழ்க்கை பூரா இங்க இருக்கப் போறீயா?
- எந்த வேலையும் செய்யாம? - நான் நிறைய வேலை செய்யுறேன்.
அப்படியா? என்ன வேலை?
நான்தான் அந்த பறவைங்க கூடுகளை கண்டுப்பிடிச்சேன்.
சரி, பெண்களே, கிளம்புங்க.
நான் நிம்மதியா பைப் பிடிச்சிட்டு, செய்தித்தாள் படிக்கணும்.
சரி.
எப்படியும் நாம சமையலறைக்கு போக வேண்டிய நேரம்.
- - பெண்களே, கூட வாங்க.
நானுமா?
நீ ரொம்பதான் திமிர் பண்ற.
எனக்கு 24 மணி நேரமும் வீட்டு வேலை செய்ய பிடிக்கல.
அப்புறம் வேற என்ன செய்யணும்?
நான் சும்மா… யோசிக்கணும்.
- - அவளை கொஞ்சம் விடுறியா?
சரி.
நன்றி, அப்பா.
நீங்கதான் என் ஹீரோ.
நீங்க எப்பவும் அவ பக்கமா பேசுங்க.
ஒருநாள் வருத்தப்படுவீங்க. அடங்காம இருக்கா.
ஒரு வயசு பொண்ணா நடந்துக்க தெரியல அவளுக்கு.
அவ குடும்பப் பெயரை கெடுக்கப் போறா.
என்ன ஆச்சு, எமிலி?
ஒன்னுமில்லை. ஜாலியா இருக்கேன்.
இன்னொரு பையனை வேண்டாம்னு சொல்லிட்டியாமே?
ஆமா. அது இன்னும் தோணல.
கல்யாணம் பற்றி பேசும்போது, ஒரு விஷயம் சொல்லணும்.
என்ன விஷயம்?
சூ-விடம் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேட்டேன்.
அவளும் சரின்னு சொல்லிட்டா.
- - ஆ!
ஆ!
என்ன?
நீ சூ-வை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது
- ஏன் கூடாது? - ஆஸ்டின், அவ என் நெருங்கின தோழி.
பார், எமிலி, உணர்ச்சி வசப்படாத.
இது நல்ல நேரம் இல்லை.
சூ-வின் சகோதரி, மேரி இறந்துட்டாள்.
என்னது?
ஆனால்... அவ ஆரோக்கியமா இருந்தா.
தெரியும். ஆனால், மற்றவங்க மாதிரி அவளுக்கு டைஃபாய்ட் வந்து இறந்திட்டா.
கடவுளே, பாவம் சூ.
ஆமா, அதனால்... அவளோட சூழ்நிலையை கொஞ்சம் மதிச்சிடு. சரியா?
என் நெருங்கின தோழிகிட்ட எப்படி இருக்கணும்னு நீ சொல்ல வேண்டியதில்லை.
No comments yet. Be the first to leave one.