The first 200 lines.
மத்திய இந்தியாவிலுள்ள சட்டிஸ்கரின் கனிமவளம் மிக்க காடுகள் மாவோயிஸ்ட்,
நக்ஸல்களென்று அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கொரில்லாக்களுக்கு இராணுவதளமாக இருக்கின்றன.
ஆயுதப்புரட்சியின் மூலம் அரசாட்சியைக் கவிழ்ப்பதே அவர்கள் லட்சியம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
வாழ்க, வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
மங்கள் நேதம், நீடூழி வாழ்க!
உங்கள் ஓட்டுக்களைக் கேட்டு மங்கள் நேதம் இங்கு வரவில்லை.
உங்கள் ஓட்டுக்களை எனக்குத் தராதீர்கள்!
வேண்டாம்!
இந்தப் பகுதியை வளரச் செய்ய நான் விரும்புகிறேன்.
இந்தப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குழந்தையும் வலக்கையில் லேப்டாப்போடும்
இடக்கையில் செல்ஃபோனோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த வளர்ச்சிக்கு எதிராக முட்களைப் போல சுவர்களைப் போல நிற்பவர்கள் இருக்கிறார்கள்.
நான் உயிரோடு இருக்கும்வரை அவர்களை விடமாட்டேன்.
அவர்களுடைய செயல்கள் அழிவைக் கொண்டுவந்தால், என் செயல்கள் அமைதியைக் கொண்டுவரும்!
அவர்கள் ஆபத்தானவர்கள் என்றால், நான் கொல்லக்கூடியவன்!
தலைவர் மங்கள் வாழ்க வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
தலைவர் மங்கள், நீடூழி வாழ்க!
நாம் சேர்ந்து சாப்பிடலாம்.
ஏன் கவலைப்படுகிறாய்? சொல்றதைக் கேளு, நான் அநேகமா அங்க வந்துட்டேன்.
ஆமா, ஆனா...
-சார்! -மன்னிக்கணும்.
ஏய், திரும்பிப் போ. காரைத் திருப்பு!
திரும்பிப் போ!
கீழே இறங்கு!
ஓடிப் போயிடு!
இரண்டு வாரத்தில் இது மூன்றாவது சம்பவமாகும்.
இன்னொரு தேர்தல் வேட்பாளரை நக்ஸலைட்கள் கொன்றிருக்கிறார்கள்.
நக்ஸலைட்களோடு எவ்விதப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்று அமைச்சர் கூறினார்.
அரசு அவர்களூக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
தேர்தல் நேர வன்முறையை எதிர்கொள்ள
கூடுதல் போலீஸ் படையினர் இங்கு அனுப்பப்படுகிறார்கள்.
கடந்த 20 வருடங்களாக சட்டிஸ்கரின் அடர்ந்த காடுகளை நக்ஸலைட்கள் ராணுவதளமாக...
ஓ, அடடா!
நம் வீட்டில் மட்டும்தான் பவர் இல்லையா? போய்ப் பார்.
நூதன்?
-நான் போய்ப் பார்க்கிறேன். -மகனே, போய்ச் சரிபார்.
மற்ற வீடுகளில் பவர் இருக்கிறது.
நான் கீழே போய்ப் பார்க்கிறேன்.
நமக்கு மட்டும்தான் பவர் இல்லையா?
ஒரு வயர் ட்ரிப் ஆகி இருக்கணும்னு நினைக்கறேன்.
பாரு, சஞ்சலுக்குப் பவர் இருக்கு. அவன் வொர்க்ஷப்பும் நல்லா நடக்குது.
அவன் ஒரு ஷோரூமும் ஆரம்பிச்சிருக்கான்.
கடையில் அவன் மனைவி அவனுக்கு உதவறாள்.
-ஃப்யூஸ் மறுபடி ட்ரிப் ஆகியிருக்கா? -ஆமா.
-பாத்ரூமிலும் பவர் இல்லை. -இது தான் ட்ரிப் ஆகியிருக்கணும்.
-இவனைத்தவிர எல்லார்க்கும் திருமணமாகுது. -ஒரு விநாடி பொறு.
எல்லாரையும் பார்த்துக்கணும்...
அவங்க சண்டை வழக்கமான விஷயந்தான்.
இல்லை, இது உலகைப் பற்றியதல்ல. எனக்கும் படபடப்பா இருக்கு, கவலையா இருக்கு.
பவர் வந்துடுச்சா, அம்மா?
வந்துடுச்சு.
-நாளைக்கு வொர்க் ஷாப்ல கலந்துப்பியா? -கண்டிப்பா.
இந்தியாவின் தேர்தல்...
300 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவாகிறது தேர்தல்களுக்கு!
840 மில்லியன் வாக்காளர்கள் இருக்காங்க!
ஆக, ஒன்பது மில்லியன் வாக்குச் சாவடிகள் இருக்கு!
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் நம் பழைய சாதனையைத் தாண்டப் போகிறோம்.
ஒரு புதிய சாதனை படைக்கப் போகிறோம்.
நாம் இதை நிரூபித்திருக்கிறோம்.
பாராளுமன்றத்திற்கு சில முரடர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடலாம்,
ஆனால் தேர்தலில் ரௌடித்தனங்கள் நுழைய விடமாட்டோம்.
எதனால்?
ஏனென்றால், நாம், தேர்தல் ஆணையம், அவ்வாறு நடக்க விடமாட்டோம்.
நல்லது.
தேர்தல் வரை நாம் உயிருடன் இருந்தால்!
யார் அதைச் சொன்னது?
எழுந்திருங்க! உங்களைத் தண்டிக்க மாட்டோம்.
நேற்று நடந்ததுக்கப்புறம் பயம் வருவது இயற்கை தான்.
அது மனித இயல்பு.
நேற்றைய சம்பவத்தின் மூலம் நக்ஸலைட்கள்
தாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
நக்ஸலைட்களை நிறுத்த ஒரே ஒரு ஆயுதம் தான் உள்ளது,
அது தான் ஓட்டளிக்கும் இயந்திரம்.
ஆனால் நாம் எல்லோருக்கும் ஒரே லட்சியம் தான் இருக்க வேண்டும்.
ஒரு சுதந்திரமான, நியாயமான தேர்தல்.
நக்ஸலைட்டுகள் வாக்குச் சாவடியைத் தாக்கினால்? நாம் என்ன செய்வது?
முதலில், ஹீரோவாக முயற்சி பண்ணாதீங்க. என்ன கேக்கறாங்களோ செய்திடுங்க.
வாக்கு இயந்திரம் வேண்டும்னு கேட்டா, கொடுத்திடுங்க.
அந்தச் சாவடியில் வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு மறு வாக்கெடுப்பு நடத்தலாம்.
புரிந்ததா?
வேறு யாரேனும்? சொல்லுங்க.
மறுவாக்கெடுப்பு அன்றும் அவர்கள் தாக்கினால்?
அந்த மறுவாக்கெடுப்பிற்கு இன்னொரு மறுவாக்கெடுப்பு நடத்தலாம்.
சார்? இங்கே.
ஆமா.
சார், இரண்டாம் மறுவாக்கெடுப்பு நாளன்றும் அவர்கள் தாக்கினால்?
உன் பெயர் என்ன?
நியூட்டன்.
-"நியூட்டன்"? -ஆம்.
"ஆப்பிள்" நியூட்டனா?
ஒரு நிமிஷம்.
நியூட்டன், இரண்டுக்குப் பிறகு வருவது என்ன?
-மூன்று. -மூன்றுக்குப் பிறகு?
-நான்கு. -நான்கிற்குப் பிறகு?
நல்ல பையன். உட்கார்.
ஆக...
நல்ல பண்ணிக்கிட்டிருக்க.
நன்றி சார். நல்லா விளக்கம் கொடுத்தீங்க.
பரவாயில்லை. காலிலெல்லாம் விழுந்து வணங்கணும்னு அவசியமில்லை.
-டீ, தயவு செய்து. -மறுபடியும் காலில் விழாதே.
என் பை.
சார்?
என் எளிய சந்தேகங்களை வேடிக்கையாகச் சமாளித்து விட்டீர்கள்!
உன் கேள்விக்குத் தக்க பதிலைச் சொன்னேன்.
-சார், நான் உண்மையிலேயே கேட்டேன்... -அது சரிதான், உட்கார்.
நியூட்டன்.
ஒரு விஷயம் சொல், உனக்குப் பெயரிட்டது யார்?
உன் அப்பா இயற்பியல் ஆசிரியரா? அல்லது உன் தாய் எடுத்த முடிவா?
-யார் பெயரிட்டார்கள் உனக்கு? -எனக்கு நானே பெயரிட்டுக் கொண்டேன்.
நீயே பெயரிட்டுக் கொண்டாயா?
ஆனால் ஏன்?
பெற்றோர் எனக்கு நூதன்குமார்னு பேரிட்டாங்க. எல்லாரும் அதைக் கேலி செய்தார்கள்.
-உங்களைப் போலவே. -நூதன் குமார்.
நூதன் குமார்!
அப்புறம், என்ன செய்தாய் நீ?
"நூ"வை "ந்யூ"வாகவும் "தன்"னை "டன்"னாகவும் பத்தாம் கிரேடு ஃபார்மில் மாற்றிட்டேன்.
"நூ"வை "ந்யூ"வாகவும் "தன்"னை "டன்"னாகவும் மாற்ற்றிட்டாய்!
கேளு, நீ ஒரு பெரிய பெயரை வைத்திருக்கிறாய். அந்த அளவு நீ வாழ்ந்து காட்ட வேண்டும்.
உன்னை நீயே புகழ்ந்துக்கறியே!
-என்னை மறுபடி கேலி செய்யறீங்களா? -அதை விடு, இதெல்லாம் சின்ன விஷயம்.
ஒரு விஷயம் சொல்லு.
நியூட்டன் இந்த உலகை எவ்வாறு மாற்றினார்?
புவியீர்ப்பு விசை. ஒளியியல்.
தோழா, நீ பல வருடங்களாக ஒரு "நியூட்டன்" ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்,
ஆனால் நீ ஒரு உண்மையை மறந்து விட்டாய்.
அவர் உலகை, வானை, எல்லாவற்றையும் சமமாக ஆக்கினார். எப்படின்னு கேளு.
எப்படி?
நியூட்டனுக்கு முன், மக்கள் நினைச்சாங்க
பூமிக்கும் வானுக்கும் வேறு வேறு சட்டங்கள் உண்டுன்னு,
கோயிலுக்கும் சர்ச்சுக்கும் சட்டங்கள் வேறு வேறுன்னு.
மன்னர்களுக்கும் நம்மைப்போல சாமானியர்களுக்கும் வேறு வேறு சட்டங்கள்னு.
ஆனா நியூட்டன் ஒரே அடியில் அது தவறுன்னு நிரூபிச்சார்.
இயற்கை எல்லோரையும் ஒன்றாகவே நடத்துகிறதுன்னு.
கோடீஸ்வரர் அம்பானியும் ஒரு டீ விற்பவரும் மலை மேலிருந்து ஒரேநேரத்தில் குதித்தால்,
இருவரும் ஒரே மாதிரி தான் விழுவார்கள்.
ஆக, இயற்கையில் நாம் அனைவரும் ஒன்று என்று நியூட்டன் நமக்குக் கற்பித்தார்,
நீ மன்னனானாலும் சரி, பிச்சைக்காரனானானும் சரி.
நீ எந்தத் துறையில் வேலை செய்கிறாய்?
இன்னும் எனக்குத் துறை ஒதுக்கப் படவில்லை.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தற்காலிகப் பணியில் இருக்கிறேன்.
அப்போ நீ எப்படி தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டாய்?
நான் வெறும் ரிஸர்வ்.
நல்லது. ரிஸர்வ்களுக்கும் பயன் உண்டு.
பன்னிரெண்டாம் ஆட்டக்காரர். கிரிக்கெட், ஃபுட்பாலில் கூட உண்டு!
போபாலைப் பார்க்கும்போது இது சிறிய டவுன் போலத் தோன்றணுமே.
எங்கே எங்கள் மகன் மகிழ்ச்சியா இருக்கானோ அதுவே எங்கள் வீடு போல.
நீங்கள் சொல்வது சரி.
ஓய்வுபெற்ற பிறகு நம் பிள்ளைகளுடன் காலங்கழிப்பதே சிறந்தது.
ஆனால் உங்களைப் பார்த்தால் 60 வயதானது போல் தெரியவில்லை.
எனக்கு 60 வயதா? இப்போ தான் 57 ஆகிறது.
என் மகனுக்கு வேலை கிடைச்சதும் குறித்த காலத்தின் முன்பே ஓய்வுபெறச் சொல்லிட்டான்.
எங்க நூதன் உண்மையில் ச்ரவண குமாரனைப் போல.
மன்னிக்கணும், அது நியூட்டன்.
எங்க மகள் அங்கிட்டா இதைப் பண்ணினாள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே அவளுக்கு எம்ப்ராய்டரி மீது பிரியம் அதிகம்.
இனி உன் கைக்குட்டைகளைத் தொலைக்க மாட்டாய், மகனே.
எங்க மகள் இனி எம்ப்ராய்டர் பண்ணித் தருவாள்... அதை என்ன சொல்வாங்க?
உன் இனிஷியல்களை, கைக்குட்டைகளில்.
இவன் தன் கைக்குட்டைகளைத் தொலைச்சுக்கிட்டே இருக்கான்.
இதோ எங்க மகள் வரா.
-ஹலோ. -ஹலோ. எப்படியிருக்க?
-எப்படியிருக்கீங்க? பயணம் நல்லாயிருந்ததா? -நல்லாயிருக்கோம். நீயும் நல்லாயிருக்கேல்ல.
-தயவு செய்து, டீ சாப்பிடுங்க. -சாயாவோடு பக்கோடா சாப்பிடுங்க.
-இது அங்கிட்டா செய்ததா? -ஆமா. அவதான் செய்தா.
-பண்ட்டி, எப்படியிருக்க? -உட்காருங்க.
ஹலோ!
நூதன், பக்கோடா சாப்பிடு.
அது "நியூட்டன்."
என் ஆங்கிலம் ரொம்ப மோசம்.
பூச்சி ஏதும் விழறதுக்குள்ள டீயைக் குடி.
உனக்கு அவளிடம் ஏதாவது கேட்கணும்னா கேளு.
இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் கேட்கணும்னு வெச்சிருக்கியா?
அவள் கைவேலையைப் பார்த்தாச்சு, அவள் செய்த பக்கோடா டீயும் சாப்பிட்டாச்சு.
இனிமே கேட்க ஒண்ணுமில்லை.
அவன் கேட்கட்டும். இயற்பியலில் முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கான்.
அவளிடம் ஏதாவது கேளு, மகனே.
-உனக்குப் பொழுதுபோக்கு என்ன? -சினிமா பார்ர்க்க ரொம்பப் பிடிக்கும்.
-உனக்கு மிகவும் பிடித்த படம் எது? -சாஜன் சலே சசுரல்.
எந்தக் காலேஜில் படிச்ச?
நான் காலேஜ் போகல.
அந்த ராஸ்கல்கள் இருக்குமிடத்துக்கு நான் அவளை அனுப்பவே மாட்டேன்.
படிப்பதே நேரத்தாஐ வீணடிப்பது தான்.
ஹை ஸ்கூல் படிச்சியா?
ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன்.
No comments yet. Be the first to leave one.