Mistress Begum

Mistress Begum (बेगम जान)

Download Tamil Subtitle

Release info

Begum Jaan WEBRip Amazon ta-in
A Commentary by indespensible

Tags

webrip
web
BRip
Published on: 2019-10-25
Downloads: 40
Hearing Impaired: No

Tamil subtitle preview

The first 200 lines.

கனாட் பிளேஸ் புதுடெல்லி, இந்தியா, 2016

நான் கூப்பிடும்போதெல்லாம் வரவேண்டியது இருக்கும். நல்லபிள்ளையாக நடிக்க வேண்டாம்.

-நான் நடிக்கிறேனா? -நாம் எங்கே செல்கிறோம்?

நாம் எங்கே போகிறோம், அப்பா?

-நாம் அங்கே நல்ல ஆடைகளை வாங்கலாம். -உன் அத்தையை பார்க்க.

அப்படித்தான் அனைவரும் சொல்கிறார்கள்.

சரோஜினியில் நல்ல நாகரீக ஆடைகளை நாம் வாங்க முடியும்.

-பஸ்! -அதை நிறுத்து.

சீக்கிரம், வரமுடியுயமா?

-வா, அன்பே. -பொறுங்கள், அம்மா, என்ன அவசரம்?

-நீங்கள் எங்கே போகவேண்டும்? -சரி, சார். கீழே இறங்குங்கள்.

-நீங்கள் ஒட்டுங்கள், சார். -நாங்கள் இஷ்டப்பட்ட இடத்தில் இறங்குகிறோம்.

உட்காருங்கள்.

நீங்கள் எங்கே போகிறீர்கள்?

இவர்கள் எங்கு இறங்குவார்களோ அந்த இடத்திற்கு.

அல்லது இங்கேயே இறங்கிக்கொள்கிறோம்.

ஹேய்! அவளைத் தொட என்ன தைரியம்!

-என்னை விட்டுவிடுங்கள். -தயவு செய்து.

-முட்டாள்... போய்த்தொலை! -நீ...

-அவளைத் தொடாதே, அவளை விடு! -நீ என்ன செய்கிறாய்?

-என்னைப் போகவிடு! -நகரு.

-நான் உன்னைக் கொல்வேன்! -முட்டாள்.

-சன்னி! -வாயை மூடு!

அவளை பஸ்ஸில் இருந்து இறங்க விடு!

-சன்னி! -அவனை அடி. அவனைப் போகவிடாதே.

-ப்ரியா, ஓடு! -எங்கே போகிறாய்? அவனை போகவிடாதே.

ப்ரியா, ஓடு!

-அவளைப் பிடி! -வேண்டாம்!

அவளைப் பிடி!

அவளைப் பிடி!

நில்!

அவள் எங்கிருந்து வந்தாள்?

வழியை விடு, கிழட்டு நாயே! காது கேட்கவில்லையா என்ன?

உனக்குப் பைத்தியமா? போய்த் தொலை!

கிழட்டு நாயே, போ!

-உனக்கென்ன பைத்தியமா? -நான் சொல்வது கேட்கவில்லையா?

ஆகஸ்ட் 1947.

இந்தியாவின் கடைசி வைஸ்ராய், மவுன்ட்பேட்டன் பிரபு, வெளியிட்ட ஒரு ஆணை

இங்கிலாந்து அதிகாரி சர் சிரில் ராட்கிளிப்க்கு அதிக திறமை

தேவைப்பட்ட ஒரு பொறுப்பை கொடுத்தது.

இந்தியாவை இரண்டாக பிரிக்க.

அதனால், சர் ராட்கிளிப்,

இந்தியாவின் பூகோளம் பற்றி ஒன்றும் தெரியாத அவர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் வித்தியாசம் காண முடியாதவர்,

வரைபடத்தை மட்டும் நம்ப முடிவெடுத்தார்.

அவர் இரு கோடுகள் வரைந்தார்.

ஒன்று வங்கத்தில் மற்றொன்று பஞ்சாபில்.

நான்கு வாரங்களுக்குள்,

நான்கே வாரங்களுக்குள்,

கேள்வி ஞானத்தின் அடிப்படையில்,

அவர் நாட்டை இரண்டு பாகங்களாக பிரித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்.

அனைத்தும் பிரிக்கப்பட்டது.

வயல், நிலம், தெருக்கள், கிராமங்கள், நகரங்கள், நதிகள்.

ஜீலம், இமயம், கட்ச், தார்,

பிராணிகள், மைந்தர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள். ஒவ்வொருவரும்.

ஒவ்வொருவரும் மற்றும் ஒவ்வொன்றும் பிரிக்கப்பட்டன.

சர் ராட்கிளிப்பின் இரண்டு கற்பனைக் கோடுகள்

140 லட்சம் மக்களின் இதயத்தையும் ஆத்மாவையும் பிரித்தது.

லட்சக் கணக்கானோர் வீடிழந்தனர்.

பல்லாயிரம் அப்பாவிகள் மடிந்தனர்.

வருங்கால சந்ததியினர் ராட்கிளிப் கோட்டினால் வேருடன் பிடுங்கப்பட்டனர்.

இது ஒரு வீட்டின் கதை

இதன் வழியாக பிரிவினைக் கோடு செல்கிறது.

அது அதன் தலையை துண்டித்தது,

ஆனால் அதனை பிரிக்கத் தவறியது.

பண்டேலாக்கள் மற்றும் ஹர்போலோக்களிடம் இருந்து

பெருமை மிக்க கதைகளைக் கேட்டோம்.

அதிக வீரத்தோடு போராடிய அந்த ஜான்சியின் ராணி.

உனக்கு ஏதாவது புரிகிறதா, லாட்லி?

அரசரின் மறைவுக்குப் பின்னர்,

ராணி திரைக்குப் பின்னர் ஒளியவில்லை மேலும் கண்ணீர் சிந்தவில்லை.

அவரது அவையினர் வஞ்சகம் மற்றும் துரோகம் செய்த போதிலும்,

ராணி நிலையாக நின்றார்.

அவர் உடைந்துவிடவில்லை.

அவர் ஏற்கனவே குதிரை ஏற்றம் மற்றும் வாள் பயிற்சி அடைந்திருந்தார்.

ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போன போது தானே படை திரட்ட முடிவெடுத்தார்.

கொடியை உயர்த்திப் பிடித்து தைரிய இதயத்தோடு,

எதிரிகளுக்கு சவால் விடுத்தார்.

-அவர் எதிரிகளை நேர்கொண்டார். -அவர் ஒரு தைரியமான பெண்மணி.

அப்படியே அவர் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். லக்ஷ்மி பாய்.

தனது ஜான்சி நாட்டை காப்பாற்றுவதற்காகவே,

அவர் பிரிட்டிஷாரை உயிருக்கு பயந்து ஓடச் செய்தார்.

ஒரு கையில் வாளோடும்

-முதுகு தூளியில் மகனோடும்... -ராணி லக்ஷ்மிபாய்க்கு பையன் இருந்தானா?

ஆமாம். ஆனால் அவன் அவரது ரத்தம் இல்லை.

ஒருவேளை அவர் தத்து எடுத்ததாக இருக்கலாம்.

பின்னர் நான் யாருடைய மகள்?

இந்த துர்பாக்யவதிக்கு கேள்விகளுக்கு பஞ்சமில்லை.

-லாட்லி! -நான் உனக்கு கதை ஏதும் சொல்ல மாட்டேன்.

-போய்ப் படி. -லாட்லி.

-நான் உனக்கு ஒன்றும் சொல்ல மாட்டேன். -இந்த பெண்...

-ஹேய், லாட்லி. -அரட்டைக்காரி.

நீ குளிக்கிறாயா அல்லது உன்னை கிணற்றில் தூக்கிப் போடவா?

பேகம் ஜான் உங்களை பார்க்க விரும்புகிறார்கள், அம்மா.

நிச்சயம், பேகம் ஜான் என்னை கூப்பிட்டால், நான் அவசியம் போகவேண்டும்.

போய்விடுங்கள்!

என்ன ஆச்சு வேசியே? உனக்கு என்ன பைத்தியமா?

காமப் பிசாசு!

எனது மார்பகங்களை தொடக்கூடாது என்று பல முறை எச்சரித்து இருக்கிறேன்!

அது உனக்குப் புரியாதா?

இங்கிருந்து தொலைந்து போ!

மீண்டும் உன்னை இங்கே பார்த்தால்,

அதை சிறு துண்டுகளாக்கி விடுவேன்!

-வாயை மூடு. -தொலைந்து போ!

-ஹேய், குலாபோ. -பைத்தியமான வேசி.

காலங்கார்த்தால நிறைய இரைச்சல் போடுகிறாய்.

அதோடு போ. பேகம் ஜான் உன்னைப் பார்க்க வேண்டுமாம்.

பேகம் ஜான், அவள் கடந்த கலவரத்தில் கற்பழிக்கப் பட்டாள்.

சில பையன்கள் அவளை பரிதாபமான நிலையில் முகாமில் தூக்கி போட்டார்கள்.

அவளது அப்பா அவளை அழைத்துச் செல்ல மறுத்து இங்கே விட்டுச் சென்றார்.

அப்பா, சகோதரன், மகன், கணவன்.

மறுபுறம் பேகம் ஜானின் தொடக்க நிலையில்

ஒவ்வொரு ஆணும் தவறானவர்கள்.

ஆனால் மறுபுறம், ஒவ்வொரு மனிதனும் ஒரு சேவல்.

மூன்று கால் கொண்ட சேவல்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் உன் அப்பா உனக்கு பெயர் வைத்து இருப்பார்.

நல்லது, நான் உனக்கு ஒரு பெயர் வைக்கிறேன்.

அவளது கன்னங்கள் இன்னும் ஆப்பிள் போல் சிவந்து இருக்கின்றன.

-காஷ்மீர் பெண் என்று நான் நினைக்கிறேன். -ஆமாம்.

அப்படி என்றால், உன் பெயர் ஷப்னம்.

செல்லப் பெயர், ஷபூ

நினைவில் வைத்துக் கொள்வாயா?

அம்மா, அவளை உள்ளே கூட்டிச் செல்லுங்கள்.

குளிப்பாட்டி, சுத்தம் செய்து உணவு கொடுங்கள்.

-சுஜித். -என்ன, பேகம் ஜான்?

சந்தையில் இருந்து அவளுக்கு ஆடைகள் வாங்கி வாருங்கள்.

ரூபினா?

-என்ன. -வா.

ஜமிலா, லதா.

-நீங்கள் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும். -வா, அன்பே.

அவளுக்கு கற்றுக் கொடுங்கள்.

சலீம், யாராவது எப்போதாவது அவளைத் தேடி வந்தால்,

யாராவது உறவினர், அல்லது போலிஸ் ஸ்டேஷனின் இருந்து,

பேகம் ஜான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து இருப்பதாக சொல்லுங்கள்.

தேடுங்கள்.

சரி.

பொறு! இங்கே வா.

இன்னும் அழுத்தமாக, ரூபினா.

குழந்தையே, அது அதிகம் வலிக்கிறது, இல்லையா?

நீ அதிர்ச்சியில் இருக்கிறாய்.

அவர்கள் மிகக் கொடூரமானவர்கள், இல்லையா?

அவர்கள் ஒரு பயங்கரமான காரியத்தை செய்திருக்கிறார்கள்.

உன் தந்தைகூட உன்னை கைவிட்டுவிட்டார்.

இறுதியில், எல்லாம் வெளிவந்துவிட்டது.

இல்லையென்றால், உனது வலி ஒருபோதும் குணமாகாது.

இப்போது வாழ்க்கை எளிதாக இருக்கும்.

சார், நாங்கள் சக்கர்கார் காவல் நிலையம் சென்றோம்.

ஆனால் அது அவர்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இல்லை என்றார்கள்.

அதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

-தயவு செய்து... -நான் என்ன செய்ய முடியும்?

அது எங்களது கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளும் இல்லை.

அது எங்களது நகர எல்லைக்கு வெளியே இருக்கிறது.

பையன்கள் வளர்கிறார்கள், சார்.

அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினமாகி வருகிறது.

எனது மகளும் வளர்ந்து வருகிறாள்.

-ஆமாம். -கடந்த மாதம் அவளுக்கு பத்து வயதானது.

-சரி. -ஆனால் எனக்கு

ஒரு தகப்பனின் பொறுப்பு என்னவென்று தெரியும்.

இந்த குப்பையில் இருந்து நான் அவளை விலக்கி வைத்து இருக்கிறேன்.

ஆனால், சார், அது எங்கள் உண்மையான பிரச்சனை இல்லை.

அந்த விபச்சாரிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்.

அந்த பாதையை கடந்து செல்வதுகூட மிகக் கடினமாக இருக்கிறது.

குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள்.

-அனைவரையும் திட்டுகிறார்கள். -நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விபச்சாரிகள் என்ன ஆன்மீகவாதிகளா?

நான் அப்படிச் சொல்லவில்லை, சார்.

ஆனால் உங்களுக்குத் தெரியும்,

-அவர்கள் நோயைப் பரப்புகிறார்கள். -ஒரு விஷயம் சொல்லுங்கள்.

நேற்று இரவு 9.30 க்கு நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

அது, நான்...

நான்...

ஒருமுறை ஒருவன் முல்லா நசுருதீனிடம் சொன்னானாம்,

"என் பையன் அதிகம் சர்க்கரை சாப்பிடுகிறான் நான் என்ன செய்ய?"

முல்லா இப்படி பதிலளித்தார், "ஒரு வாரம் சென்று வாருங்கள்.

முதலில், நான் சர்க்கரை உண்பதை நிறுத்த வேண்டும்" என்று.

என்ன? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், சார்?

-நான் அங்கு செல்வதில்லை... -முதலில் சர்க்கரை உண்பதை நிறுத்துங்கள்.

பின்னர் உங்கள் பையன்களை நிறுத்துங்கள்.

அந்த அப்பாவி மக்கள் மீது எந்த அயோக்கியனாவது கையை வைத்தால்,

பின்னர் இந்த சலீம் மிர்ஸா இந்த இடத்தை கல்லறை ஆக்கிவிடுவான்.

ரத்த வெறி பிடித்த ஜீவன்கள்! நீங்கள் உங்களை முஸ்லிம் என்கிறீர்கள்!

அதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை அன்பே. சண்டை மிக தீவிரமானது.

ஆனால் சலீம் மிர்ஸா நகர மறுத்தார்.

போராட்டக்காரர்களை அடக்கும் வரை மிர்ஸா ஓய்வெடுக்கவில்லை,

இந்துக்கள் பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால்...

ஆனால் உன் கூந்தலில் பேன்கள் முகாம் இருக்கிறது, அன்பே!

அதற்கு பிரதியுபகாரமாக அவர் என்ன அடைந்தார்?

பிய்ந்த செருப்பு. அவமானம்!

அந்த அயோக்கியன் காவல் துறையில் இருந்து நீக்கப் பட்டான்.

அதுமுதல், சலீம் இங்கே தங்கி இருக்கிறார்.

அம்மா, இந்துக்களை கொல்வது முஸ்லிம்களை கொல்வதை போன்றது தானா?

அதனால் கேள்வி என்ன என்றால்,

அது நடக்கப் போகிறதா இல்லையா?

உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

கேள்வி என்னவென்றால், எப்போது என்பது தான்?

அது ஒரு வதந்திதான்.

அவர்கள் சில கம்புகளை ஊன்றுவார்கள்,

பின்னர் ஒரு எல்லையை வைப்பார்கள்.

Comments

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left