The first 200 lines.
இது தான் இந்த பருவத்தின் இறுதி போட்டி கனவான்களே! சீமாட்டிகளே!
ஆட்டத்தோட இறுதிய நெருங்கிட்டதால, எந்த அணி கோப்பைய வெல்ல போகுதுனு தெளிவா தெரியல.
மூன்று நிமிடங்களே எஞ்சியுள்ளது, இரண்டு அணிகளும் ஒரு புள்ளியோடு சமநிலையில் உள்ளன.
ரேஞ்சர்ஸ் பந்தினை டிரிப்லிங் செய்து கொண்டு செல்கின்றனர், இது ஒரு கோலாக இருக்கலாம்.
நான் பார்த்ததை போல, தேவ் சரண் அவர்களை இடைமறித்து பந்தினை அவர் வசம் எடுக்கிறார்.
அட கடவுளே, அவர பாருங்க!
அவர் இலக்கை நோக்கி நெருக்கமாக மிக நெருக்கமாக செல்கிறார்.
அவரு போறத பாருங்க. தேவ் சரண், ரொம்ப தீர்மானமா இருக்குறாரு.
இது முடிவெடுக்க போற கோலா இருக்குமா? கடவுளே அவரு "டி" க்குள்ள வந்துட்டாரு
தாண்டிட்டாரு, அவங்க எல்லோரையும் தாண்டிட்டாரு
அது பெனால்டியா இருக்குமா? அது கண்டிப்பா பெனால்டியா தான் இருக்கணும்.
அது பெனல்டினா, ரேஞ்சர்ஸ்...
திவா
சொல்லுங்க.
காலை வணக்கம், சார். உங்களோட திருமண மோதிரம் தயாரா இருக்குது.
-என்ன திருமணத்துக்கு? -உங்களோட திருமணத்துக்கு, சார்.
அட கருமமே, மாயா என்னை கொல்ல போறா.
மாயா, சீக்கிரம் எழுந்திரு. மணமகன் ஒரு மணிக்கு இங்க வந்திருவாரு.
ஆமாம், நான் கல்யாணமானவ எனக்கு ஒரு பையனும் இருக்குறான்,தெளிவுபடுத்துறதுக்காக சொல்றேன்
என் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியா வச்சிப்பேன்.
அது எல்லாம் சரி, திருமதி. சரண்.
ஆனா நம்மளோட பேஷன் பத்திரிகைக்கு நிறைய நேரம் அவசியம்.
உங்களோட பத்திரிகைக்கு நேரம் தேவை இல்ல. அதுக்கு நான் தான் தேவை.
ஒரு நிமிடம் மட்டுமே உள்ளது. எல்லாம் தேவ் சரண் கிட்ட தான் இருக்குது.
அவரு இத கோலாக்கிட்டா, அவரோட அணிய இறுதி போட்டிக்கு கூட்டிட்டு போயிருவாரு.
அப்பறம் அவரும் லீக் குள்ள வந்திருவாரு.
வெற்றி.
-சொல்லுங்க. -நீ யாரு?
நான் யாரா இருக்கணும்னு நீ என்ன நினைச்சாலும், செல்லம்.
அப்பா.
அப்பா!
-ஹேய்! -நீங்க என்ன பண்றீங்க?
தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன். காவலில் வைக்கப்பட்டுருக்கேன்.
அட கடவுளே, அப்பா...
இது எப்படி உடைஞ்சது?
எப்படினு உனக்கு கத்துக்கொடுக்குறேன். உனக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுக்குறேன்.
-ஹலோ செல்லம், -நான் கிளம்புறேன் சாம்!
-இதுவரை நடந்ததில், இது தான் சிறந்தது. -நன்றி, செல்லம்.
-நான் உங்கள அழைப்பேன். -சரி, அழைப்பு கொடு.
எனக்கு அழைப்பு கொடு!
போயிட்டு வா அன்பே.
இது அற்புதம், ஒரு விலை மாது உன்னை அழைப்பது ஒரு விலை மாது உன்னை அழைப்பது.
-அப்பா... -மன்னிச்சிரு.
அப்பா, நான் இன்றைக்கு திருமணம் செஞ்சிக்க போறேன் ஆனா நீங்க...
நான் என்ன பண்றது, மகனே?
உன் அம்மா இறந்து போறதுக்கு முன்னாடி ஒரு சத்தியம் வாங்கிட்டா, அவ போனதுக்கு அப்பறம்
அவ உயிரோட இருந்தப்ப நான் என்னெல்லாம் செய்யலயோ அதெல்லாம் செய்யணும்னு
நான் என்னோட வாக்குறுதிய நிறைவேற்றிட்டு இருக்குறேன்.
நான் மாயாவுக்கு செய்து குடுத்த வாக்குறுதி எப்படி? நான் அத நிறைவேற்றட்டுமா?
-ஏன் கூடாது? -நாம போகலாமா?
ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் இரு மகனே.
இது நான் கொடுக்குறது.
இது உன்னோட அம்மா கொடுக்குறது.
கடவுள் உன்ன ஆசீர்வதிப்பார், மகனே. மகிழ்ச்சியா இரு.
-சார், சார்,சார்... -ஹலோ.
-தேவ், எனக்கு வேலை கிடைச்சிருச்சு! -என்னது?
-என்னது? -எனக்கு வேலை கிடைச்சிருச்சு.
அற்புதம், உனக்கு வேலை கிடைச்சிருச்சு.
ரியாவுக்கு வேலை கிடைச்சிருச்சு.
இது என்ன சத்தம்? எனக்கு எதுவும் கேட்கல.
ஒண்ணுமில்ல. அதும் ஒன்னும் இல்ல.
நாங்க
வெற்றி பெற்ற ஒரு சின்ன போட்டி.
அட ஆமாம், போட்டி தான!
என்ன மன்னிச்சிரு. நான் சுத்தமா மறந்துட்டேன்.
ரியா, நான் உன்னோட கணவன் அத மறக்காத.
வாய மூடு தேவ். அப்பறம் வாழ்த்துக்கள் செல்லம்.
அது எப்படி இருந்துச்சுனு என்கிட்ட சொல்லு?
அற்புதம். என்னோட கடைசி கோல். அந்த பதற்றம், உற்சாகம்.
கடவுளே, ரியா...
ரியா, நீ இங்க இருந்திருக்கணும்.
ஆமாம், எனக்கு தெரியும்!
ஆனா நான் நேர்முக தேர்வுல இருந்தேன்.
இல்ல, எனக்கு தெரியும், எனக்கு தெரியும், செல்லம். எனக்கு தெரியும்.
உனக்கு என்ன தெரியும்?
உன் ஓய்வில்லாத கால அட்டவணைய பார்த்துட்டு எங்களோட அடுத்த போட்டிய வச்சிக்கிறோம்.
தேவ்...
அப்பறம் உனக்கு நேரம் இருந்தா.
என்னோட ஐந்து மில்லியன் டாலர் ஒப்பந்தத்த வந்து பாரு.
ஐந்து மில்லியன் டாலர்களா?
ஏன்? பொறாமையா? இப்போ நான் உன்ன விட அதிகமா சம்பாதிக்கிறேனா?
பொறாமை இல்ல, செல்லம். சந்தோசம். உன்னோட கனவு நனவாகிருச்சுனு சந்தோசம்.
நம்மளோட கனவு, ரியா.
ஆமாம், எனக்கு தெரியும். நான் பள்ளியில இருந்து அர்ஜுன கூட்டிட்டு வர போறேன்.
தயவுசெஞ்சி என் அம்மாவை கல்யாண வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்துடுறியா?
நான் அத சுத்தமா மறந்துட்டேன்.
என்ன பிரச்சனை, ரியா?
-கொஞ்ச நாளா நிறைய விசயங்கள மறந்துடுற -ஆமாம், அது உண்மை தான்.
அப்பறம் இன்னொன்னு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
அட கருமமே!
திருமண நாள் வாழ்த்துக்கள்.
ஹேய் மக்களே, என்னோட மகனுக்கு திருமணம் ஆக போகுது!
என்னோட மகனுக்கு திருமணம் ஆக போகுது!
இன்னைக்கு நான் என் மகளை பிரிஞ்சி, ஒரு மருமகளை கூட்டிட்டு வரேன்.
ஹேய், மாயா. நாங்க வந்துட்டு இருக்கோம்!
நான் தான் சந்தோசமான மனிதன்...
நண்பா உனக்கு என்ன ஆச்சு?
-நண்பா, எனக்கு பதட்டமா இருக்குது. -ஏன்?
அவள் சரின்னு சொல்றதுக்கு மூன்று வருடங்கள் ஆகியிருக்கு.
அவள் ஒன்னும்கடைசி நிமிடத்துல ஓடி போயிறமாட்டாளே, அவள் அப்படி பண்ணுவாளா?
இல்ல, இல்ல, அவளால எங்கேயும் ஓடி போயிற முடியாது.
ஆமாம், அதுக்கு அப்பறம், என்னை மாதிரி கணவன அவளால எங்க கண்டுபிடிக்க முடியும்?
இல்லை, நம்மளோட பாதுகாப்பு ரொம்ப பலமானது.
வேகமா போ, வேகமா போ, வேகமா போ. நாம ஏற்கனவே தாமதமா போறோம்.
அட கடவுளே, க்ரிஷ்! இப்போ எதுக்கு நீ இத வச்சிருக்கிற?
இது ஒன்னும் சாப்பாடு இல்ல. இது இனிப்பு! இத சுசி கா ஹால்வானு சொல்லுவாங்க!
-யாரு சுசி? -சுசி இல்ல, இத என்கிட்டே குடுத்துட்டு போ.
சமையலறைக்கு போ.
என்னை பைத்தியமாக்குறாங்க நியூ யார்க்ல இருந்து வந்த எல்லா முட்டாள்களும்...
மன்னிச்சிருங்க.
-அது என்னை பயமுறுத்திருச்சு. -வேணும்னே செய்யல.
-ஹலோ! -ஹலோ!
நான் தான் சாம். என்னோட எளிமையான வீட்டுக்கு உங்கள வரவேற்கிறேன்.
நான் கமல், அப்பறம் இது என்னோட உணவு.
நிச்சயமாக, நான் எடுத்துக்கலாமா. நன்றி.
வாவ். நிச்சயமா இது சர்தார்னி தான்.
இது உங்களுக்கு எப்படி தெரியும்.
ஏன்னா நான் அதுகளை சாப்பிட்டு சலிச்சு போயிட்டேன்.
எனக்கு தெரியும். நான் உங்கள பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன்.
மற்றவர்கள் சொல்றத கேட்காதீங்க.
சொல்றதெல்லாம் எப்போதுமே மத்தவங்க தான், மிஸ்டர்.தல்வார்.
அப்படினா யாரு சொல்றத தான் நம்புறது?
என்னோடது. என்னோட வார்த்தையை, நீங்க சண்டிகர்ல இருந்து வரீங்களா?
அத, நீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க?
கண்டிப்பா சண்டிகர் தான்.
-அம்மா. நீங்க என்ன பண்றீங்க? -கருமம்.
ஒன்னும் இல்ல.
நீங்க கிளம்புறதுக்கு தயாரா?
இல்ல, மணப்பெண் தயாரா ஆகுறதுக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆகுதுன்னு எனக்கு தெரியல.
நீ உன்னோட வேலைகள பாரு. நான் தனியா வந்துடறேன்.
-நீங்க உறுதியா சொல்றிங்களா? -ஆமாம், ஆமாம், போ.
சரி.
மன்னிக்கவும், மன்னிக்கவும்!
தயவுசெஞ்சி தோட்டத்த நாசம் செய்யாதீங்க. இப்போ தான் நான் அத சுத்தம் செஞ்சேன்.
-நீங்க என்ன தோட்டக்காரியா? -நீங்க என்ன நினைக்கிறிங்க?
மணப்பெண்னோட உடைய நீங்க திருடிட்டீங்கனு நினைக்குறேன்.
நான் யார்கிட்டயாது சொல்லட்டுமா?
-தயவுசெஞ்சி என்ன தனியா விடுறீங்களா! -கண்டிப்பா இல்ல!
இன்னைக்கு உனக்கு திருமணம் அப்பறம் ஏன் நீ இங்க வெளியே உட்காந்திருக்கிற?
உனக்கு ஏதாவது பிரச்சனையா?
நேரடியா இல்ல. ஆனா மறைமுகமா இருக்குது. என்னோட அம்மாவுக்கு தான் பிரச்சனை.
நீ வேகமா உள்ள போனாதான், என்னோட அம்மா வேகமா இங்க இருந்து வெளியேற முடியும்.
நீ பழக்கம் இல்லாத நபர். உன்ன யாரு உட்கார சொன்னது?
நான் இங்க படுத்துகிட்டு பேச முடியுமா?
இரண்டு பேருக்குள்ள பேச்சுவார்த்தை, உட்கார்ந்து பேசுனா தான் நல்லா இருக்கும்.
பேச்சு வார்த்தையா?
ஆமாம், உனக்கு ஒரு பிரச்சனைன்னு எனக்கு தெரியும்.
வா என்கிட்ட பேசு. என்கிட்ட எல்லாத்தையும் சொல்லு.
என்னோட பிரச்சனைகள பத்தி நான் ஏன் உன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தணும்.
அப்போ, உனக்கு பிரச்சனை இருக்குனு நீ ஒத்துக்கிற.
சொல்லப்போனா, யாரோட அறிவுரையையும் நான் எடுத்துக்க மாட்டேன்.
ஆனா மத்தவங்களுக்கு அறிவுரை குடுக்குறதுக்கு நான் எப்போதும் தயாரா இருப்பேன்.
நீ எப்போதும் அந்நியர்கள் சொல்றத கேட்கணும்.
சிலசமயம் நம்மள பத்தி நம்மளவிட அவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.
உனக்கு கல்யாணம் ஆகிருச்சா?
ஓஹ், பெரிய கண்டுபிடிப்பு!
இன்னையோட ஐந்து வருடங்கள் ஆகிருச்சு.
கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன நினைச்சீங்க?
கல்யாணத்துக்கு முன்னாடி யாரு தான் நினைச்சி பார்ப்பா?
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்!
ரியாவும் நானும் கல்லூரியில இருந்தே நண்பர்கள்.
அதனால எங்க நட்புக்கு ஒரு புதிய அர்த்தத்த கொடுக்கணும்னு நினைச்சோம்.
இத விட உங்க நண்பனோட வேற எந்த விசயத்துல முழு வாழ்க்கையையும் செலவிட முடியும்?
சில நேரங்களில் நட்பு காதலோட இடத்த பிடிக்குறதால, காதலுக்கு இடம் இருக்காது.
ஆமாம்.
ஆமாம்.
இருக்கலாம் ஆனா, உள்ள உனக்காக ஒருத்தர் காத்திட்டு இருக்கிறாரு,
அவன் உன்னோட நண்பனா இல்ல காதலனா?
நீ அதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்க கூடாது.
ரிஷிய எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்.
என் பெற்றோர்கள் இறந்ததும் அப்பறம் ரிஷியும் அவனோட அப்பாவும் தான் எனக்கு குடும்பம்.
என்ன ஒரு இனிமையான குடும்பம்.
ஆனா என்னோட கேள்விக்கு அது பதில் இல்ல. நீ அவன விரும்புறியா?
நான் விரும்புறேன்.
ஆனா...
நான் நினைச்ச மாதிரி அத பண்ணல.
எத மாதிரி?
நல்ல புத்தகங்கள்ளையும் மோசமான படங்கள்ல இருக்குற மாதிரியான. அந்த வகையான காதல்?
இல்லை.
காதல் எப்படி இருக்கணுமோ, அப்படி.
-அப்படிப்பட்ட காதல். -"அப்படிப்பட்ட காதல்."
அப்படிப்பட்ட காதல். ஆனா அது இப்பெல்லாம் எங்க இருக்குது?
இத கவனி.
"நித்தியமான காதல் சாகசங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே முடிஞ்சிருச்சு.
சின்ன காதல் கதைகளை உருவாக்குறதுக்கு கற்றுக்கோ.
அப்படினா
நீங்க உங்களோட மனைவிய காதலிக்கலயா?
அத அவ்ளோ தூரத்துக்கு கொண்டு போககூடாது.
நாங்க சந்தோசமா இருக்குறோம்.
நாங்க எங்களோட சின்ன உலகத்த ஒண்ணா உருவாக்கிருக்கோம்.
என்னோட கேள்விக்கு அது பதில் இல்ல.
இப்போ கேள்வி என்னோட பதில விட உன்னோட வாழ்க்கைய பத்தினது.
உன்னோட வாழ்க்கையில ஒரு குறுக்கு வழிசாலையில இருக்குற, அங்க இரண்டு சாலைகள் இருக்குது.
ஒன்னு உன்ன மகிழ்ச்சிக்கு கொன்டு போகும், அதுக்கு நீ தகுதியானவன்னு நினைக்குறேன்.
அப்பறம் இன்னொன்னு எல்லையில்லா
காத்திருப்புக்கு வழிவகுக்கும்.
காதலுக்கான காத்திருப்பு. அத உன்னால எப்போதுமே கண்டுபிடிக்க முடியாம போகலாம்.
கல்யாணத்துக்கு அந்த காதல நான் கண்டுபிடிச்சா நான் என்ன பண்றது?
நீ அத தேடலைனா, உன்னால அத கண்டுபிடிக்க முடியாது.
அப்பறம் இந்த பெஞ்ச்ல உட்கார்ந்து இருந்தா கண்டிப்பா உன்னால அத கண்டுபிடிக்க முடியாது.
No comments yet. Be the first to leave one.