The first 200 lines.
கில்கென்னி, அயர்லாந்து - 1650
என்ன?
ஓநாய்!
-என் வழியிலிருந்து விலகு! -விலகு!
கடவுளே, எங்களைக் காப்பாற்றுங்கள்.
பின்னால் போ. பின்னாடியே இரு! பின்னால் போ.
புனித அன்னையே, எங்களைக் காப்பாற்றுங்கள்.
ஐயோ, கடவுளே!
வேண்டாம்!
நீ ஒரு வுல்ஃப்வாக்கரா?
நன்றி.
இறந்த ஓநாயை கொண்டு வந்தால் பரிசளிக்கப்படும்
ஓநாய், ஓநாய், ஓநாயைக் கொல்லுங்கள் வெகுதூரத்திற்கு வேட்டையாடி கொல்லுங்கள்
ஓநாய், ஓநாய், ஓநாயைக் கொல்லுங்கள் எல்லா ஓநாய்களும் ஒழியும் வரையிலும்
அதைப் பார்த்தாயா மெர்லின்? சரியாக மூக்கிலேயே.
நீ என்ன சொல்கிறாய்? நான் மூக்கைத் தான் குறி பார்த்தேன்.
நீ ஒத்துக்கொண்டதே மகிழ்ச்சி.
ராபின்.
சொல்லுங்கள், அப்பா.
உன் வேலையில் நீ மும்முரமாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.
ஆமாம், அப்பா.
கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
கண்டிப்பாக நீ சும்மா இருக்கவில்லை என தெரிகிறது.
சும்மா இருப்பதா, இல்லை.
நான் பெருக்கி, தூசு தட்டி, துடைத்துக்கொண்டு இருந்தேன்.
அதையே தொடர்ந்து செய்ய முடியலை அவ்வளவு தான்.
அந்த ஓநாய் போஸ்டர் எத்தனை அடி தள்ளி இருக்கும். பதினைந்து அடியா?
இல்லை. குறைந்த பட்சம் இருபதாக இருக்கும்.
இருந்தாலும், எனக்கு சரியாகத் தெரியாது.
நான் அதை யோசித்துப் பார்க்கலை. சுத்தம் செய்வதில் மும்முரமாக இருந்தேன்.
ராபின், இது நம் புது வீடு. இப்போ, வாளியும் துடைப்பானும் தான் உன் கருவிகள், இது அல்ல.
இங்கேயே நாள் முழுவதும் அடைந்திருப்பது ரொம்ப சலிப்பாக இருக்கு.
நாம் இங்கிலாந்தில் செய்த மாதிரி, நானும் உங்களோடு வந்து சாகசச் செயல்கள் செய்யணும்.
ஓ, செல்லமே. தலைவர் கடுமையான விதிமுறைகள் வைத்துள்ளார்.
இந்த சுவர்களைத் தாண்டி எந்தக் குழந்தையும் போகக் கூடாது. உனக்கே அது தெரியும்.
இந்தக் காடு முழுவதும் நிஜ ஓநாய்கள் நிறைந்துள்ளன.
அவற்றை வேட்டையாடுவது என்னுடைய வேலை, உன்னுடையதல்ல.
நான் ஓநாயைப் பார்த்து பயப்பட மாட்டேன்.
நீ இதுவரை ஓநாயைப் பார்த்ததே இல்லை.
இருந்தாலும் நான் பயப்பட மாட்டேன்.
ஆமாம், அதனால் தான், நான் உன்னை நினைத்து பயப்படுகிறேன்.
சரி, நான் வாசல் வரை உங்களுடன் வருகிறேன்.
நான் பொழுது சாய்வதற்குள் திரும்பி விடுவேன்.
வீட்டிற்குள்ளேயே இரு.
நம் கண்காணிப்பு பயிற்சி நேரம், மெர்லின்.
ஆமாம், இப்பொழுதே.
தின்பண்டங்கள் இங்கே இருக்கு!
நீ அவரைத் தேடு, நான் பின்தொடர்கிறேன்.
மீன். புதிய மீன்!
நல்ல வேலை செய்தாய், மெர்லின்.
ஓநாய், ஓநாய், ஓநாய், ஊளையிடுகிறது ஓநாய், ஓநாய், ஓநாய் சத்தம் கேட்கிறது
ஓநாய், ஓநாய், ஓநாயை துரத்து ஓநாய், ஓநாய், ஓநாயை ஓடி துரத்து
ஓநாய், ஓநாய், ஓநாய், ஊளையிடுகிறது ஓநாய், ஓநாய், ஓநாய் சத்தம் கேட்கிறது
ஓநாய், ஓநாய், ஓநாயை துரத்து
வாங்குங்கள்! ஊற வைத்த சிப்பிகள், சிறிய, பெரிய நத்தைகள்!
கொஞ்சம் கழுதைப் பாலோடு சாப்பிடுங்கள்!
உவாக்.
-இரண்டு ஃபார்திங்ஸ்தான். -அவர் எங்கே போய்விட்டார்?
வழி விடுங்கள். மன்னியுங்கள். முடித்து விட்டு வந்து கொண்டிருக்கிறேன்.
ஓநாய், ஓநாய், ஓநாய்
ஓநாய், ஓநாய், ஓநாயை துரத்து ஓநாய், ஓநாய், ஓநாயை ஓடி துரத்து
ராபின்.
நான் உங்களை வாசல் வரைக்கும் தான் தொடருவேன்.
உண்மையாகவா? அதற்குப் பிறகு?
என் பின்னாலேயே வந்து, ஓநாய்க் கூட்டத்தை தனி ஆளாகக் கொன்று விடுவாயா?
ஆமாம், ஆனால் நாம் சேர்ந்து அவற்றை வேட்டையாடலாம்.
ஓநாய்கள், கரடிகள் மற்றும் டிராகன்களை கூட!
உன்னை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேனோ?
மலை ஏறலாம், ராட்சதர்களையும், மந்திரம் சொல்லும் சூனியக்காரர்களையும்
கடல் கன்னிகளையும், நீர்நாய்ப் பெண்களைக்கூட பார்க்கலாம்.
நீயும் உன் கற்பனைக் கதையும்.
ஓநாய், ஓநாய், ஓநாய், ஓநாய் சத்தம் கேட்கிறது
ஓநாய் ஓநாய் ஓநாய் ஊளையிடுகிறது ஓநாயை விரட்டு
ஓநாய் ஊளையிடுகிறது
குட்ஃபெலோ!
-படை வீரர்கள்! வேகமாக ஓடுங்கள்! -குட்ஃபெலோ! ஒரு நிமிஷம் இங்கே வா.
சரி, சார்! இங்கேயே இரு, செல்லமே.
ஓநாய், ஓநாய், ஓநாயை சுடுங்க! ஓநாய், ஓநாய், ஓநாயை வேட்டையாடுங்க!
ஓநாய், ஓநாய், ஓநாயை பிடியுங்கள்! ஓநாய், ஓநாய், ஓநாயை கொல்லுங்கள்!
ஓநாய், ஓநாய், ஓநாயை சுடுங்கள்! ஓநாய், ஓநாய், ஓநாயை வேட்டையாடுங்கள்!
-ஓநாய், ஓநாய், ஓநாயை பிடியுங்கள்! -இப்போது உன்னை பிடித்துவிட்டேன், ஓநாயே
ஓநாய், ஓநாய், ஓநாயை கொல்லுங்கள்! ஓநாய், ஓநாய், ஓநாயை சுடுங்கள்!
ஹே, ஆங்கிலப் பெண்ணே. இந்த மாதிரி உடை அணிந்து எங்கே போவதாக நினைக்கிறாய்?
நான் ஒரு வேட்டைக்காரி.
"நான் ஒரு வேட்டைக்காரி"
அவளுடைய ஆடம்பரமான நடன உச்சரிப்பைக் கேட்டீர்களா?
என் அப்பாவை போல, நானும் ஒரு வேட்டைக்காரி. அவர் ஒரு சிறந்த வேட்டைக்காரர்.
இல்லை, அவர் சிறந்தவர் கிடையாது. என் அப்பா தான் மிகச் சிறந்த வேட்டைக்காரர்.
அப்படியா? சரி, நாங்கள் தலைவருக்காக ஓநாய்களை வேட்டையாடுகிறோம்.
ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு, தலைவர், என் அப்பாவை சிறையில் போட்டு விட்டார்.
ஆங்கிலேயர்கள், தங்களை சிறந்தவர்களாக நினைக்கிறீர்கள், ஆனால் அப்படியில்லை.
நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போக வேண்டும்.
முதலில் உன் குறுக்கு வில்லை உபயோகிக்க விடு.
முடியாது!
-ஆங்கிலப் பெண்ணே, இதற்கு பதில் சொல்வாய். -அவள் அவனைத் தள்ளி விட்டாள்.
நீ இப்போது இறந்து விட்டாய்!
-இங்கே என்ன நடக்கிறது? -படை வீரர்! வேகமாக ஓடுங்கள்!
நீ ஏன் இப்படி அலைகிறாய், ராபின்?
உங்களுக்கு உதவ முயற்சித்தேன், அங்கு ஒரு பையன், தன் அப்பா வேட்டையில்
உங்களை விட சிறந்தவர் என சொல்லி,
-என் குறுக்கு வில் வேண்டும் என கேட்டான்... -ராபின்!
இந்த இடத்தில் நமக்கு இன்னும் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
நான் வேலை செய்யும் போது நீ வீட்டிலேயே இருந்தால் தான், உனக்கு பாதுகாப்பு.
ஆனால், உங்களோடு வெளியில் இருந்தாலும் பாதுகாப்பு தான்.
இல்லை, ராபின்! உள்ளேயே இரு!
சொல்கிற படி செய்.
உன் நல்லதுக்காகத் தான், ராபின்.
பார்...
இன்று மாலை நான் வந்ததும், அம்புகள் செய்வதற்கு நீ உதவுவலாம்.
ராட்சதர்கள், டிராகன்கள் பற்றிய உன் கதைகளை எனக்குச் சொல். உனக்கு அது பிடிக்கும் தானே?
அப்படித் தான் நினைக்கிறேன்.
இப்பொழுது, சமத்தாக இரு.
சுவர்களைத் தாண்டி எந்தக் குழந்தையும் போகக்கூடாது என்பது தலைவரின் ஆணை.
நான் எவ்வளவு திறமையானவள், எப்படிப்பட்ட வேட்டைக்காரி என அவருக்கு தெரிந்திருந்தால்,
அவர் என்னையும் தன்னோடு வர அனுமதித்திருப்பார்.
நீ யார், மெர்லின்? ஒரு பருந்தா அல்லது கோழிகுஞ்சா?
ஓநாயைக் கொல்லுங்கள்! ஓநாயைக் கொல்லுங்கள்!
என்னைத் தனியே விடுங்கள்!
என்னை விட்டு விலகிப் போங்கள்!
இப்பொழுது உன்னைப் பிடித்து விட்டேன், ஓநாயே!
சிறுவர்களே, நமக்கு ஒரு கொடி கிடைத்திருக்கிறது! வாருங்கள்!
தலைவர் ஒழிக!
-இதை உடனே நிறுத்துங்க! -இங்கிருந்து போய்விடுங்க!
-அந்தக் கொடியை வாங்கு! -விரைவாக இங்கிருந்து போங்கள்!
தொடர்ந்து ஓடுங்கள், சிறிய கிளர்ச்சியாளர்களே!
நல்லது! நல்ல வேலை செய்தீர்கள் பையன்களா! ஓடுங்கள்!
ஆமாம், நான் அதைப் பார்க்கிறேன்.
நான் அதற்குள் நுழைய மாட்டேன்.
உதவி! ஓநாய்! ஓநாய்! காப்பாத்துங்க!
ஓநாயா?
ஓநாய்! மெர்லின், விரைவாக பறந்துச் சென்று, ஓநாயைக் கண்டு பிடி.
ஓநாய்!
-ஓடுங்கள்! -பின்னால் போங்கள்!
ஓடுங்கள்!
ஓநாய்கள்!
விலகு! பின்னால் போ!
உதவி!
பின்னால் போ! பின்னால் போ!
என்ன, சுடு! உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், சுடு!
மெர்லின்!
என்ன?
வேண்டாம்! அது என் பறவை. அதை விட்டு விடு!
நில்!
ராபின்!
-ராபின்! -மெர்லின், அவன் போய் விட்டான்!
-நாம் அவனை திரும்பக் கொண்டு வர வேண்டும். -நீ உயிரோடு சாப்பிடப்பட்டிருப்பாய்.
என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்? இங்கு என்ன செய்கிறாய்?
-நான் உங்களுக்கு உதவ முயன்றேன். -எனக்கு உதவவா?
நீ வெளியே வரக்கூடாது என சொன்னேன் அல்லவா! இதற்காகத்தான்!
-அப்பா, அவை மெர்லினை எடுத்துக் கொண்டது. -வேண்டாம் அழாதே, செல்லமே.
இல்லை, நீ அவனைத் தேடி, அங்கே போகக்கூடாது.
ஆனால், நாம் அதை அப்படியே விட முடியாது.
பாரு, உன்னை பாதுகாப்பேன் என உன் அம்மாவுக்கு உறுதியளித்துள்ளேன்.
பரவாயில்லை, கண்ணே.
திரும்ப நகரத்துக்குப் போவோம், அங்கே தான் நீ பத்திரமாக இருப்பாய், வா.
உன் நல்லதுக்காகத் தான்.
கடவுள் செயலால், நீ ஒரு அதிர்ஷ்டகார குழந்தை.
நீ பார்க்கவில்லையா? கடவுளே, அது ஒரு வுல்ஃப்வாக்கர்!
இப்போது அமைதியாக இருக்கிறாயா?
அவற்றின் மரங்களை வெட்ட கூடாது என எல்லோருக்கும் தெரியுமே.
அப்படி செய்தால், அவை உன்னை பிடித்துவிடும். அது தான் ஒப்பந்தம்.
யாரோடும் எந்த ஒப்பந்தமும் கிடையாது.
பழைய மத வழக்கப்படி செயின்ட் பாட்ரிக் உருவாக்கியதை மீறுகிறாய், இழிவானவனே!
-நாம் மரங்களை அழித்தாக வேண்டும். -நீ பார்க்கலையா?
உண்மையில், ஓநாய் தாக்குவதை நான் பார்த்தேன்.
அவளுடைய அழைப்புக்கு, ஓநாய்கள் பதிலளித்த விதம்.
நான் சொல்கிறேன், இந்தக் காடுகள் எல்லாம் ஓநாய்கள் வசம் உள்ளன.
சரி, ஓநாய்கள் எல்லாம் போவதற்கு, நீண்ட நாட்கள் ஆகாது.
அவையெல்லாம் நகருக்குள் பசியோடு சுற்றி வருவதற்கும் அதிக நாட்கள் ஆகாது.
நடக்காது. நாங்க இந்த இடத்தை சரிசெய்வோம். அது தலைவரின் கட்டளை.
ஓ, அந்த சிறந்த தலைவர்.
சொன்ன வார்த்தைக்கு உண்மையாக இருப்பவர் என்று பெயர் பெற்றவர். வேடிக்கை தான்.
பழைய அரசராவது எங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இவர் திடீரென்று முன்னுக்கு வந்தவர். அந்தத் தலைவர்.
தலைவர்.
எதைப் பாதுகாப்பவர்?
இங்கே வா!
உங்களுக்கு ஏதும் பிரச்சினை இருந்தால், நீங்கள் நேரடியாக என்னிடம் பேச வேண்டும்.
என்ன செய்கிறீர்கள்? வேண்டாம்!
-உங்கள் கைகளை எடுங்கள்... -அசையாதே!
-ஐயோ, கடவுளே. இது வேடிக்கையானது. -ஓ, உள்ளே போ.
என்னை விட்டு விடுங்கள்!
நான் எந்த தவறும் செய்யவில்லை.
கடவுள் சாட்சியாக! சாத்தான் உங்கள் தலையை எடுக்கட்டும்.
-மற்றுமொரு ஓநாய் தாக்குதலா? -ஆம், தலைவரே.
இவனைப் போல் இன்னும் சிலர் இருந்தால், மற்றொரு கிளர்ச்சியாளர் நம் வசம் உண்டு.
நாம் மரங்களை அழிக்காவிடில், விவசாயிகள் நிலத்தில் உழைக்க முடியாது,
ஓநாய்கள் இருக்கும் போது, மரம் வெட்டுபவர்களால் மரங்களை அழிக்க முடியாது.
-இது ஒத்துக்கொள்ள முடியாதது. -ஆமாம், தலைவரே.
ஓநாய்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாம் அவர்களுக்குக் காட்ட வேண்டும்.
அவை வெறும் விலங்குகள். அவற்றை ஒழித்து விடுங்கள்.
அப்படியே, தலைவரே.
இது தான் உங்கள் மகளா?
ஆமாம், தலைவரே. ராபின்.
சுவர்களைத் தாண்டி எந்தக் குழந்தையும் வரக் கூடாது. இவள் ஸ்கல்லரியில் ஏன் இல்லை?
தலைவரே, அவள் அங்கு வேலை செய்யலை.
நீ! இந்தப் பெண் வீட்டின் ஸ்கல்லரியில் இருக்குமாறு பார்த்துக்கொள்!
அப்பா.
தலைவர் சொல்வது போல செய், செல்லமே.
தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியை சமாளிக்க நான் இப்பொழுது கிளம்புகிறேன்.
No comments yet. Be the first to leave one.