The first 200 lines.
எங்கிருந்து தொடங்கறது?
அதாவது, நான் என்ன சொல்ல வர்றேன்னா…
என்னோட இன்றைய எல்லா தகுதிக்கும் காரணம், நான் தோன்றிய இடம்.
இட்டர்னியா, எல்லையற்ற அழகின் உலகம்.
புராணங்களில், இரவு நேரக் கதைகளில் மட்டுமே இருக்கும் சமாச்சாரம்.
இட்டர்னியாவிலோ, அதெல்லாம் நிஜம்.
க்ரிஃபின்கள், ட்ராகன்கள், பேசும் புலிகள்…
மந்திரக் காடுகள், எரியும் பாலைவனங்கள், வானுலக தீவுகள், எது வேண்டுமானாலும்.
சத்தியமா நான் போதையில் இல்ல.
அதோட, க்ரேஸ்கல் கோட்டை வேற இருக்கு.
இட்டர்னியாதான் அண்டத்திற்கே இதயம்னு எங்கப்பா ஒரு முறை சொல்லிருக்கார்.
க்ரேஸ்கல் அந்த இதயத்திற்கே இதயம்.
ஆக, அந்த இதயத்தின் இதயமோட…
மையமே க்ரேஸ்கல்லின் சக்தி தான்.
ஒரு மனிதனை கடவுளுக்கு இணையாக அதனால் மாத்த முடியுமாம்.
அதை பாதுகாப்பா வைக்க, அந்த சக்தி ஒரு கலன்ல கட்டுப்படுத்தபட்டு இருக்கும்.
அது, சக்தியின் வாள் எனப்படும் புராதன வாள்.
ஆமா, புரியுது, ஆனா அப்படி தான் பண்ணிகிட்டு இருந்தாங்க.
புராணத்தின் படி, இட்டர்னியாவுக்கு அவசிய நிலை ஏற்படறப்போ…
ஒரு ஹீரோ முன் வந்து அந்த வாளை ஏந்தி,
அட்டகாசமா
பயன்படுத்துவானாம்.
அது வரை, கோட்டையரண்ல,
ஒரு யோகினி கண்காணிப்புல பாதுகாப்பா பூட்டப்பட்டு இருக்கும்.
அவ அறிவாளி, புராதனமானவ,
சொல்ல போனா, கொஞ்சம் பாக்க பயமா இருப்பா. ஆனா, பொறுமையானவ. பொறுமையானவ.
நூத்துக்கணக்கான வருஷங்களா, க்ரேஸ்கல் என் மூதாதையரோட பாதுகாப்புல தான் இருந்துது.
பாரு, நான் மாபெரும் தீரர்கள் வம்சாவளியில் இருந்து வரேன்.
அவங்க மாண்பு பொருந்தியவங்க, பலசாலிங்க, அச்சமில்லாதவங்க.
ஆனா, அம்மா, நான் சண்டை போட விரும்பல.
எல்லோரும் என்னைவிட பெரியவங்க, பலசாலிங்க.
டக்குனு செயல்படறதுல நான் மோசம்.
-மண்ணாங்கட்டி! யார் அப்படி சொன்னது? -க்ரிஞ்சர்.
உண்மைதான். அவன்தான் அங்கே ரொம்ப குட்டி, பலவீனமானவன்.
அவன் எலும்புகள் முறியாததும் சாகாததும், அற்புதம்தான்.
அப்போ, இளவரசர், ஆயுதப் பயிற்சிக்கு பதில் என்ன செய்யப் போறாரு?
தெரியலயே, க்ரிஞ்சரோட சுத்தலாம், விளையாடலாம்.
நீ போ. நூல் உருண்டை கிடைச்சா, அது போதும் எனக்கு.
உன்னால ஒரு பிரயோஜனமும் இல்ல.
நான் போயாகணுமா?
ஆயுதப் பயிற்சிக்கு, இப்பவே.
பாருங்க. இட்டர்னோஸின் எதிர்கால மணிகளே.
தோற்றவங்க சிலைகள் கிடையாது,
கோழைகள் பெயர்ல தெருக்கள் ஏதுமில்லை…
உங்க பணிக்கான பாராட்டும், கொண்டாட்டமும் எப்போதுமே இருக்காது.
இந்த மைதானம், அந்த அரண்மனை, உங்க மொத்த வாழ்வும்…
முன்பு போராடிய ஆண்கள், பெண்களின் வெற்றி மீது நிறுவப்பட்டவை.
அரசின் ராணுவ ஆலோசகரான நான், பல சண்டைகளில் வென்றவன் என மார் தட்டிக் கொள்ளலாம்.
அதனால்தான் நாம் இங்கே இருக்கோம்.
நான் உங்க அம்மா அப்பாக்களை காப்பாத்தி இருக்கேன்.
உங்க அக்கம் பக்கத்தினரை, அவங்க அப்பா அம்மாக்களை காப்பாத்தியிருக்கேன்.
எவ்வளவோ பேர். விஷயம் என்னனா, நான் உங்களுக்காக போராடியவன்.
இப்போ, எனக்காக கூர்மையான எதிர்த் தாக்குதல்களைத் தொடுக்கப் போறீங்க.
துல்லியக் குறி, பிரமாதமான வலிமையுடன்.
அப்புறம் இது.
யாருக்காவது இது என்னன்னு தெரியுமா?
அது ஒரு கம்பு.
பார்ப்பதை சொன்னதற்கு நன்றி.
வேற யாருக்காவது தெரியுமா?
டீலா?
உங்க ஆயுதம்.
அப்படி போடு செல்லக் கண்ணு!
இவை உங்க ஆயுதம். அவை உங்களோட ஒரு பகுதி.
சரி, ஆகட்டும், இணையுங்க, ஆயுதத்தை தூக்குங்க.
எனக்கு பளபளனு, பெரிய, பெரிய காயங்களை பார்க்கணும்.
ரத்தம் ஒழுகற மூக்குகளை பார்க்கணும். உடைந்த பற்களை பார்க்கணும்.
ஆகட்டும், ஆரம்பிப்போம். ஊன்றி நில்லுங்க.
-ஹே, டியான். உனக்கு… -இது நிஜமாருந்தா, இரு முறை செத்திருப்பே.
-ஆடம். -உஷாரா நேரா பார்!
மூஞ்சிய உடைக்கும் போது, அவன் கண்களைப் பாக்கணும்.
நல்லா தடுக்கணும், இல்லன்னா இன்னும் மோசமா அடிப்பேன்.
இது பத்தி உக்காந்து பேசலாமா?
ஹே, ஆடம், ஆடம், என்ன முடியுமோ அதை செய். புரியுதா?
சரி. டீலா.
என்ன மாதிரி நண்பி நீ?
உன்னைத் தாக்கும் வகை நண்பி.
டங்கன்.
நம்ம சிறுவர்கள் எப்படி செய்றாங்க?
அவங்க அருமையான, ஊக்கம் நிறைஞ்ச கூட்டம், அரசே.
எல்லோருமா?
நடனமாடக் கூடாது, ஆடம்.
-வேண்டாம். -என்னை அடி! என்னை அடி!
கோமாளித்தனமா நடந்துக்குறான்.
அவனை தகுதியான ஆண் மகனா மாத்த உறுதி எடுத்திருக்கேன், மாத்துவேன்.
சரி. ஆனா எந்த மாதிரி ஆண்மகன்?
-ஆடம்! -என்னை அடிச்சுடு!
பாருங்க, அவளை நிராயுத பாணியாக்கிட்டான்.
இதெல்லாம் வேலைக்காகாது, நண்பா.
ஜெயிச்சிட்டேன், ஜெயிச்சிட்டேன்.
அற்பமா நடந்துக்குறே, ஆடம்.
பையா.
என்னோடு மோது. இத வெச்சுகிட்டு.
ஆகட்டும், அதை எடு.
இப்போ…
உன்னைக் காப்பாத்திக்கோ.
அப்பா.
அப்பா!
பலவீனமானவனுக்கு இந்த உலகில் இடமில்லை.
ஆமாம்பா.
இப்போ சொல்லு.
பலவீனமானவனுக்கு இந்த உலகில் இடமில்லை.
ஆடம். எழுந்துக்கோ!
எழுந்திரு.
நீ வீழ்வது என்பது…
எழுந்து வீரத்துடன் நிற்பதற்கான வாய்ப்பு. புரியுதா?
இப்போ உன் பலத்தைக் காட்டி நில்.
அவர் திரும்பி பாக்கறப்ப, புதிய உன்னைப் பார்ப்பார்.
அடி வாங்கத் தயார் என்பதை நீ காட்டி நிற்கணும்.
அவர் திரும்பும் போது, ஒரு பயந்த சிறுவனை பார்க்க போறதில்லை.
அவர் ஓர் ஆண்மகனைப் பார்க்கணும்.
அவர் எதைப் பார்க்கணும்?
-ஓர் ஆண்மகனை. -அருமை. பார்.
அவர் திரும்பி பார்க்கும் போது.
வலியை உதறி நடந்து போப்பா.
ஆட்டம் அவ்ளோதான். திரும்ப வேலையை கவனிங்க. போங்க.
-ஆடம். -இங்கே என்ன பண்றே?
உன்னைப் பின் தொடர்ந்தேன்.
அப்படியா, சரி, நான் இங்கே தனிமைக்காக வந்தேன். ஆக…
இப்படி பூச்சி மாதிரி இருக்காதே.
நான் உன்னை பலவீனமா நினைக்கல.
இன்னைக்கு பயிற்சியில்.
என் அப்பா நினைச்சாரே.
அது… யோகினியா?
எதைப் பாக்கறாங்க?
மன்னர் ராண்டோர், நாம் தாக்கப் படறோம்.
நான் இதைப் பாத்துக்கறேன், அரசே.
அரசக் காவலர்கள் இதற்கான பயிற்சி பெற்றவங்க.
சத்தியமா சொல்றேன்,
உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும், ஒரு இன்னலும் நேராது.
உங்களை பத்திரமா க்ரேஸ்கல்லுக்கு கொண்டு போவேன். காவலர்களே!
ஹே, ஒண்ணும் ஆகாது.
கூடவே இருங்க.
டீலா! வா.
அப்பா…
எனக்கு பயமா இருக்கு.
அப்படி சொல்ல உனக்கு யார் கத்துக் கொடுத்தது? நான் இல்லையே.
இதெல்லாம் சரியாகும், செல்லமே.
எது நடந்தாலும், நான் இங்கிருக்கிற வரை, உனக்கு பயப்பட எதுவுமில்ல. புரியுதா?
ஆகட்டும். கிளம்பு.
போங்க, இப்பவே! போ! போ!
அவங்க ரொம்ப பேர் இருக்காங்க.
பெரிய படைனா ஒரு விஷயம் தான்.
நிறைய இலக்குகள்.
போங்க, போங்க!
என் பின்னாடியே வாங்க.
இந்த வழியா போவோம்.
இருக்கட்டும், இங்கயே இருங்க.
பலவீனமான அரண்மனைப் பொடியன்கள்.
அரசே, போங்க, நிறுத்தாதீங்க.
போங்க. நான் இதைப் பாத்துக்கறேன்.
யாருக்கோ சண்டை தேவைப் படுது.
இதுதான் எல்லை.
என் நகருக்கு வர உனக்கு என்ன துணிச்சல்! நீ யாரோடு மோதுவதா நினைப்பு?
நீயே சொல்லேன்.
நான் டங்கன். அரசக் காவலர்களின் தளபதி.
அரசரின் ராணுவ ஆலோசகன்.
இன்றைக்கு…
இன்றைக்கு…
நீ தோத்து போனே.
அப்பா. அப்பா.
பரவாயில்லை, வாங்க, எழுந்துக்கோங்க. ஆகட்டும். தயவு செய்து.
டீலா.
நான் தோத்துட்டேன்.
வாங்க.
இரு.
ராண்டோரின் ஆட்சி இன்றிரவு முடிவுக்கு வருது.
பெரிய பலவானனா நீனைச்சு, இருள்ல சஞ்சரிக்கறது யாருங்கற பயத்தையே விட்டுட்டே.
அது நான்தான்.
நான்தான் சஞ்சரிக்கறேன்.
இந்த அண்டத்தோட ஆழமான இருண்ட முடுக்குகளில்,
சஞ்சரிச்சுகிட்டு இருந்தேன்.
ஆனா இப்போ வெளிச்சத்துல நான் அடி எடுத்து வைப்பதால,
உன் வீழ்ச்சியை நீ பாக்கலாம்.
போ. திரும்பிப் பாக்காதே.
ஆடம், கவலை வேணாம், நான் இருக்கேன்.
தைரியமா இரு, மகனே. அவங்களை நான் தடுப்பேன்.
-அப்பா? -போங்க!
அப்பா!
என்னை என்ன செய்யப் போறே, கயவனே?
உன் தலையைக் கொய்ய போறேன். அவ்ளோதான்.
எனக்கு என்ன ஆனாலும், ஒரு போதும் இட்டர்னோஸ் உன்னுடையதாகாது.
உன் அரண்மனை, செங்கற்களாலும், கண்ணாடியாலும் மட்டுமே ஆனது.
உன் கிரீடம், ஒரு அணிகலன்.
அது அல்ல, அதுக்கு பின்னாலிருக்க சக்திதான் எனக்கு வேணும்.
ஈவில்-லின்?
ஓ, ஈவில்-லின்.
நல்லா சொன்னீங்க, பிரபு ஸ்கெலெட்டோர், கவிதையா.
அவனை கொண்டு போங்க. அவன் கதை முடிஞ்சுது.
ஒரு புதிய உதயத்துடன்…
இட்டர்னியா எனது எழுச்சியைக் காணும்.
-அவ்ளோதான். முடிச்சுட்டேன். -கண்டிப்பா, பிரபு.
-முஷ்டியை உயர்த்தினா, முடிச்சேனு அர்த்தம். -புரிஞ்சுது.
அதுதான் உச்சம்!
இனி அதை நினைவு கொள்வோம், பிரபு.
அவங்க வர்றாங்க.
க்ரேஸ்கல் வீழும்.
இல்ல. அது தாக்குப் பிடிக்கும்.
வாளைக் கொண்டுவா, குழந்தை.
ஆம். சீக்கிரம், இப்பவே.
இந்த வாளை இங்கிருந்து தூரமா, பாதுகாப்பான இடத்துக்கு நீ கொண்டு போகணும்.
No comments yet. Be the first to leave one.