முதல் 200 வரிகள்.
த ஷீப் டிடெக்டிவ்ஸ்
அன்புள்ள ரெபெக்கா,
உனக்கு நிறைய கேள்விகள் இருக்குனு தெரியும்.
எனக்கும் தான்.
என்ன இருந்தாலும், வாழ்க்கையே ஒரு மர்மம் தானே.
பிரபஞ்சத்தோட பெரும் புதிர்களுக்கு ஏதாவது விடை இருந்தா,
சந்தோஷத்துக்கான ரகசியம்னு,
இதைத்தான் சொல்லுவேன்:
ஆடுகள்.
இல்ல, நிஜமாத்தான்.
அது உண்மையாவே ஆடுதான்.
சரிசரி, வந்துட்டேன்.
போன லெட்டர்ல, ஆடுகள்ல சிறப்பானது ஏதாவது இருக்கானு கேட்டே.
எல்லாமே சிறப்பானவை தான். அதனாலதான் அதுங்க எல்லாத்துக்கும் பேரு வெச்சேன்.
உதாரணமா,
ரௌடி ரெட்டை கிடாங்களுக்கு, ரோனி, ரெஜ்ஜினு பேர் வெச்சேன்.
கம்பீரமான, கண்ணியமான, சர் ரிட்ச்ஃபீல்ட்
புசுபுசு, க்லௌட்.
அது சரியான ஸ்டைலாக்கும்.
ஸோரா, ரொம்ப துறுதுறு.
மோப்பில், பொறுமைசாலி.
அப்பறம் வுல்-ஐஸ்…
இன்னும் நான் இதுக்கு ஒரு நல்ல பேர யோசிக்கல.
சரி, அதுங்க எல்லாமே சிறப்பானவைனு சொன்னேன்ல,
இருந்தாலும், அதுல ரெண்டு மிக சிறப்பானவைனு நான் ஒத்துக்க தான் வேணும்.
அதோ, செபேஸ்சியன்.
உள்ளதுலயே, பெரிய கிடா,
என்னை மாதிரியே, தனிக்கட்டை.
திடுதிப்புனு எங்கயோ போயிரும்.
திடுதிப்புனு திரும்ப வரும்.
கடைசியா, லில்லி.
என் ஆட்டிலேயே சாமர்த்தியமானது.
எப்பவும் இதுக்கு, நான் என்ன யோசிக்கிறேன்,
என் மனுசுல என்ன தோணுதுனு புரியும் போல.
எல்லாத்தையும் விட, இது எனக்கு தர்ற அமைதி இருக்கே, மேய்பர்களுக்கே அது புரியும்.
அந்த அமைதி
இந்த உலகத்துல இருக்க அன்பான உயிரனங்களை பராமரிக்கறதுல வரும்.
அதுங்க ஆரோக்கிய கவனிப்புலருந்து நாள் தொடங்கும்.
ஆட்டுத் தீவனம்
அதுங்களுக்கு நல்ல ஊட்டம் தந்து
நல்லா வெச்சுப்பேன்.
அதுங்க சந்தோஷமா இருக்க முடிஞ்சதை செய்வேன்.
காலையில் கண் விழிக்கும் போது எனக்கு தெரியும்
உன்னருகே எழுபவன் நானாகத்தான் இருப்பேன்
எல்லாத்துக்கும் மருந்து தர உறுதி செய்வேன், சந்தோஷமா தான் சாப்பிடும்…
பேச முடிஞ்சா, சொல்லும்.
மருந்து சாப்பிடற நேரம், நண்பா. இந்தா.
என் வேலை முடிஞ்சு, சூரிய அஸ்தமனம் ஆகும் போது,
சத்தமா அதுங்களுக்கு கதை படிப்பேன்.
துப்பறியும் கதை, மர்ம கதை, யார் பண்ணிருப்பாங்க வகை. எனக்கு பிடிச்சவை.
"ராட்னி ஹாலிங்ஸ்ஹெட் கொல்லப்பட்டது எப்போது,
யாரால் என்பது எனக்கு தெரியும்."
அதுங்களுக்கு புரிவதா எனக்கு நினைக்க புடிக்கும்.
எனக்கு உள்ளூர தெரியும், அதுங்க எத்தன சிறப்பானவைனாலும்,
ஆடுங்க தான்.
கிடையாது, அவ்ளோதான்.
கிளம்புங்க, எல்லாரும்.
முடிவை நாளைக்கு படிக்கறேன்.
அங்க தான் அவர் நிறுத்தணுமா?
கொலையாளி யாருனு சொல்ற நேரத்துல!
சித்திரவதை! அது வேலகாரிதான்லே?
பின்னே, வேலகாரியே தான்.
இல்ல, இல்ல, கிடையாது, அது தோட்டக்காரன் தான்.
எந்நேரமும் புல்ல வெட்டுவான், ஆனா தின்ன மாட்டானாம்.
அதானே, சந்தேகமா இருக்கு.
நீங்கெல்லாம் லூசா? அது டாக்டர்.
இல்லவேயில்ல. அந்த மர்ம அத்தைதான்.
மர்ம அத்தை மூணு கதைக்கு முன்னால, அறிவு கொழுந்தே.
நாம ஒரே வயத்துலதான் பொறந்தோமா?
போச்சுடா, ஆரம்பிச்சாட்டாங்க!
ஆமா.
அட, திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க.
நீங்க எல்லாருமே தப்பு.
ரெண்டு அத்தியாயத்துக்கு முன்னமே தெரிஞ்சிக்கிட்டேன்.
வேலகாரி தானே?
வேலகாரி இல்லே.
மருமகன், பர்ட்டீ ஹாலிங்ஸ்ஹெட்.
ஆனா லில்லி, பர்ட்டீ ஹாலிங்ஸ்ஹெடுக்கு எதிரா ஆதாரங்களை நிஜ கொலையாளி
திரிச்சதா டிடெக்டிவ் நிரூபிச்சாரே?
அதேதான்.
தெரியலையா?
தண்டனைலருந்து தப்பிக்க அவனே ஆதாரத்த மாத்திட்டான்.
பர்ட்டீ ஹாலிங்ஸ்ஹெட் தான் நிஜ கொலைகாரன்.
எதுக்குடா அப்படி பண்றே?
ஜோர்ஜ் நாளைக்கு கதையை முடிப்பாரு. அப்ப தெரியும்.
எனக்கு இன்னும் வேலகாரினு தான் தோணுது.
"பர்ட்டீக்கு, சட்டப்படி ஒரு நபரை
ஒரே குற்றத்துக்காக இரு முறை வழக்கு தொடரை முடியாதென தெரியும்.
அதனால், தண்டனையில் இருந்து தப்ப அவனே ஆதாரங்களை திரித்தான்.
பர்ட்டீ ஹாலிங்ஸ்ஹெட் தான் நிஜ கொலைகாரன்.
என் ஆடுங்க பெரும்பாலும் நாளை எப்படி கழிக்கும்னா, ஒண்ணா திங்கும்,
இல்ல திங்கறதை பத்தி யோசிக்கும்.
ஆனா படுசுட்டியா துறுதுறுனு மூணு ஆட்டுக்குட்டிங்க என்கிட்ட இருக்கு.
சந்தோஷமா, கவலை இல்லாத வசந்த காலத்துல பிறந்த குட்டிங்க.
முக்காவாசி குட்டிங்க வசந்த காலத்துல பிறந்ததுதான்.
அப்பறம் ஒரு குட்டி மட்டும் குளிர் காலத்துல பிறந்தது.
ஓ, ஹலோ.
-நான் டேஸி. -நான் ஆலிவர்.
-நான் பிக்கில்ஸ். -உன் பேர் என்ன?
எனக்கு பேரு இல்லை.
எங்களோட விளையாட வரியா?
கூடாது! சூ, போ!
வின்ட்டர் லாம்போட விளையாட கூடாது.
அது நம்ம மந்தையை சேர்ந்தது இல்ல.
அது ஆடுங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ஏதோ காரணம்,
வின்ட்டர்ல பிறந்த குட்டிய மந்தை நிராகரிச்சுடும்.
கவலைப்படாதே.
வின்ட்டர் லாம்ப் வித்தியாசமானதுங்கற காரணத்தால.
அட, அவ்ளோதான்.
ஒரு கேள்வி.
ஏன் ஜோர்ஜ் எப்பவும் அந்த குட்டிட்ட கனிவா இருக்காரு?
ஜோர்ஜ், ஆடு கிடையாது.
வின்ட்டர் லாம்ப்களை பத்தி யாரும் அவருக்கு சொன்னதில்ல.
ஓ, அப்பறம் கடைசியா, என் அழைப்பை ஏத்துகிட்டீனா,
டென்ப்ரூக்ங்கற டௌன் பக்கத்துல இருக்கேன்னு தெரிஞ்சுக்கோ.
இந்த ஊருக்குனு சில அவதாரங்க இருக்கு.
உதாரணத்துக்கு…
மார்னிங், கேலெப்.
கேலெபும் ஒரு மேய்ப்பன்.
குட் மார்னிங், பொண்ணுங்களா.
அவன புடிக்காது.
ஹாம், கசாப்புக்காரன்.
அவனை சுத்தமா புடிக்காது.
பெத், குட்டி ஹோட்டெல்காரம்மா.
அந்தம்மாக்கு என்னை புடிக்காது
விட்டா அந்த மனுஷனை கொலை பண்ணிடுவேன்.
டிம், போலீஸ்காரன்.
டே-சர் ஷாக்
தொம்மை.
அப்பறம் ரெவெரெண்ட் ஹில்கோட், மக்களோட மேய்ப்பரா நினைச்சுக்கிறவரு.
எங்களுக்குள்ள ஒரு சிக்கலான உறவு.
இன்னைக்கு படிக்கறது: பாரபில் ஆஃப் த லாஸ்ட் ஷீப்.
ஜோர்ஜ், எங்களோட சேர்த்துக்க வந்துருக்கீங்களா?
ஆண்டவரோட இல்லத்துல எல்லாரும் வரவேற்க படறாங்க.
கசாப்புக்காரங்க கூடவா?
உங்களோட சேர இங்க வரல.
ஒரு கடனை தீக்கறதுக்காக வந்தேன்.
ஜோர்ஜ் மாறவே இல்லே.
ஜோர்ஜ் மாறவே இல்லே.
ஆளுங்களை விடு.
என் மந்தையை நீ பாக்கணும்னு ஆசைப்படறேன்.
உன்ன பாக்க அதுங்க ஏங்கிட்டு இருக்கு.
நானும் தான்.
சீக்கிரமா வாயேன்.
அன்புடன், ஜோர்ஜ்.
க்லௌட்?
ஒரு கேள்வி.
டான்டிலைன் பூ, என் கண் இமையையும் உங்களுது மாதிரி அழகாக்குமா?
இல்ல, அதுக்கும், கண் இமைக்கும் சம்மந்தமில்ல.
ஆனா கம்பளிய அற்புதமாக்குது.
வுல்-ஐஸை பாரேன்.
டான்டிலைன் தவிர அவன் எதையும் திங்கற்தில்ல.
அது தானா இது? சரி.
செபேஸ்சியனுக்காக கொஞ்சம் டான்டிலைன்களை வெப்போம். வெகு நாளா அவனை காணோம்.
யாருக்கு கவலை? ஜோர்ஜ் அவனை எங்கிருந்தோ கொண்டு வந்ததிலிருந்து
அவன் பாட்டுக்கு டௌன்ல மேஞ்சுட்டு இருப்பான்.
பட்டினி கிடக்கட்டும்.
அவன் நம்மள பத்தி கவலப்படலேனு நாமும் அவன அப்படியே விட்டுட முடியாது.
செபேஸ்சியன், நம்ம மந்தைய சேர்ந்தவன்.
ஒ, ஓ, பாருங்க! அது கேலெப்!
நாய்ங்க!
நாய்ங்க, நாய்ங்க, நாய்ங்க, நாய்ங்க, நாய்ங்க!
கேலெப்! இங்க பாரேன்!
ஓ, எனக்கு புடிச்ச மாதிரி கமகமன்னு இருக்கான்.
அவன் கம்பளி ஸ்வெட்டரால.
அழகா சாயம் போட்டுருக்காங்க.
-உள்ளே வரலாமா? -போய் தொலை!
உள்ளே வரேன்.
எவ்ளோ புத்தம் புதுசா, அழகா, பளபளனு இருக்கு.
என் மண்டைல ஓடறது தான் உனக்கும் ஓடுதா?
-எனக்கு அத முட்டணும்! -நானும் அத முட்ட துடிக்குறேன்!
ரெஜ்ஜி! ரோனி!
இத ஏற்கனவே பேசிருக்கோம். எதையும் முட்ட மாட்டோம்…
முட்ட சரியான காரணம் இருந்தா தவிர.
கம்முனு போங்க.
இந்த மாசத்துல இது கேலெபோட மூணாவது வருகை.
உள்ளே அவங்க பேச ஒரு விஷயம் தான் இருக்கு.
மந்தைங்களை இணைக்கற்து.
-மந்தைகளை இணைக்கற்து! -புது ஆடுங்க.
-புது புல்வெளி! -நாய்ங்க?
அத யோசிச்சுட்டு தான் இருக்கேன்!
ஒரு வாய்ப்பு தந்தும் என்கிட்ட புளுகினே, கேலெப்!
திரும்ப வராதே.
அடடா, மந்தைங்க இணைப்பு நடக்காது போல.
எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்.
இப்ப சோகமா, வருத்தமா இருக்கு.
இதை மறக்க நினைக்கறேன்!
நீ சொல்றது சரிதான். ரொம்ப ஏமாத்தமா இருக்கு.
சரி, இங்க பாருங்க?
மூணு எண்றதுக்குள்ள கேலெப் வந்துட்டு போனதை ஒரேயடியா மறப்போம்.
ஒண்ணு. ரெண்டு…
மோப்பில் என்ன செய்வார்? அவரால எதையும் மறக்க முடியாதே.
ஏன் முடியாது?
பாவம், மோப்பில்.
கொடிய நோயோட பிறந்திருக்கான்.
நம்மள மாதிரி அவனால நினைச்ச உடனே மறக்க முடியாது.
ஓ, ஆமா.
மோப்பில், நாங்க மறந்த அப்பறம், இப்படி ஒண்ணு நடந்ததை ஞாபக படுத்தாதே.
அப்படியா? அவ்ளோ மோசமா எதுவும் நடக்கலையே.
இல்ல. அவ்ளோ நல்லதாவும் இல்ல. அப்ப அத பத்தி ஏன் கவலப்படணும்?
No comments yet. Be the first to leave one.